আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: ছুৰা আবাছা   আয়াত:

ஸூரா அபஸ

عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
আৰবী তাফছীৰসমূহ:
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
2. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
আৰবী তাফছীৰসমূহ:
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
4. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
আৰবী তাফছীৰসমূহ:
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
আৰবী তাফছীৰসমূহ:
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
আৰবী তাফছীৰসমূহ:
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
আৰবী তাফছীৰসমূহ:
وَهُوَ یَخْشٰى ۟ۙ
9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
আৰবী তাফছীৰসমূহ:
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
10. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
আৰবী তাফছীৰসমূহ:
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
11. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
আৰবী তাফছীৰসমূহ:
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
12. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
আৰবী তাফছীৰসমূহ:
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
13. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
আৰবী তাফছীৰসমূহ:
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۟ۙ
14. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
আৰবী তাফছীৰসমূহ:
بِاَیْدِیْ سَفَرَةٍ ۟ۙ
15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
আৰবী তাফছীৰসমূহ:
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
16. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
আৰবী তাফছীৰসমূহ:
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
আৰবী তাফছীৰসমূহ:
مِنْ نُّطْفَةٍ ؕ— خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
আৰবী তাফছীৰসমূহ:
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
আৰবী তাফছীৰসমূহ:
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
আৰবী তাফছীৰসমূহ:
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
আৰবী তাফছীৰসমূহ:
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
27. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
28. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
আৰবী তাফছীৰসমূহ:
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
আৰবী তাফছীৰসমূহ:
وَّحَدَآىِٕقَ غُلْبًا ۟ۙ
30. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
আৰবী তাফছীৰসমূহ:
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
31. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
আৰবী তাফছীৰসমূহ:
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
আৰবী তাফছীৰসমূহ:
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
আৰবী তাফছীৰসমূহ:
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
আৰবী তাফছীৰসমূহ:
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
আৰবী তাফছীৰসমূহ:
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
আৰবী তাফছীৰসমূহ:
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
আৰবী তাফছীৰসমূহ:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
আৰবী তাফছীৰসমূহ:
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
39. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
আৰবী তাফছীৰসমূহ:
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
40. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
আৰবী তাফছীৰসমূহ:
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
আৰবী তাফছীৰসমূহ:
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
42. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: ছুৰা আবাছা
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

তামিল ভাষাত কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ- অনুবাদ কৰিছে আব্দুল হামীদ আল-বাক্বৱী।

বন্ধ