কুরআনুল কারীমের অর্থসমূহের অনুবাদ - তামীল ভাষায় অনুবাদ- ‘উমার শরীফ * - অনুবাদসমূহের সূচী

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

অর্থসমূহের অনুবাদ সূরা: সূরা লুকমান   আয়াত:

ஸூரா லுக்மான்

الٓمّٓ ۟ۚ
அலிஃப் லாம் மீம்.
আরবি তাফসীরসমূহ:
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟ۙ
இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்.
আরবি তাফসীরসমূহ:
هُدًی وَّرَحْمَةً لِّلْمُحْسِنِیْنَ ۟ۙ
(இவை) நேர்வழிகாட்டியும் நல்லறம் புரிவோருக்கு (அல்லாஹ்வின்) கருணையும் ஆகும்.
আরবি তাফসীরসমূহ:
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஸகாத்தைக் கொடுப்பார்கள். இன்னும், அவர்கள்தான் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
আরবি তাফসীরসমূহ:
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
அவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். இன்னும், அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
আরবি তাফসীরসমূহ:
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْتَرِیْ لَهْوَ الْحَدِیْثِ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ ۖۗ— وَّیَتَّخِذَهَا هُزُوًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காகவும், அதை பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் கல்வி இன்றி வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கிறான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் தண்டனை உண்டு.
আরবি তাফসীরসমূহ:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا وَلّٰی مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا كَاَنَّ فِیْۤ اُذُنَیْهِ وَقْرًا ۚ— فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
இன்னும், அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகிறான் - அவற்றை அவன் செவியுறாததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. ஆகவே, வலிமிகுந்த தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்திக் கூறுவீராக!
আরবি তাফসীরসমূহ:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِیْمِ ۟ۙ
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு இன்பமிகுந்த சொர்க்கங்கள் உண்டு.
আরবি তাফসীরসমূহ:
خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவன்தான் மிகைத்தவன்; மிகுந்த ஞானவான்.
আরবি তাফসীরসমূহ:
خَلَقَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَلْقٰی فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِكُمْ وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ؕ— وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟
அவன் வானங்களை - நீங்கள் பார்க்கும்படியான தூண்கள் இன்றி படைத்தான். இன்னும், பூமியில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான், அது உங்களை சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், அதில் எல்லா உயிரினங்களையும் பரப்பினான். இன்னும், நாம் மேகத்திலிருந்து மழையை இறக்கினோம். (அதன் மூலம்) அதில் எல்லா வகையான அழகிய தாவரங்களை முளைக்க வைத்தோம்.
আরবি তাফসীরসমূহ:
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِیْ مَاذَا خَلَقَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ— بَلِ الظّٰلِمُوْنَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟۠
இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆக, அவனல்லாத மற்றவர்கள் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்! மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
আরবি তাফসীরসমূহ:
وَلَقَدْ اٰتَیْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ ؕ— وَمَنْ یَّشْكُرْ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟
திட்டவட்டமாக நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்.
আরবি তাফসীরসমূহ:
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَهُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ— اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ ۟
இன்னும், லுக்மான் தனது மகனாருக்கு - அவர் அவருக்கு உபதேசித்தவராக - கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.
আরবি তাফসীরসমূহ:
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ ۚ— حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰی وَهْنٍ وَّفِصٰلُهٗ فِیْ عَامَیْنِ اَنِ اشْكُرْ لِیْ وَلِوَالِدَیْكَ ؕ— اِلَیَّ الْمَصِیْرُ ۟
இன்னும், மனிதனுக்கு - அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி - நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-சிரமத்திற்கு மேல் சிரமத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.
আরবি তাফসীরসমূহ:
وَاِنْ جٰهَدٰكَ عَلٰۤی اَنْ تُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِی الدُّنْیَا مَعْرُوْفًا ؗ— وَّاتَّبِعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّ ۚ— ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
இன்னும், உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை கட்டாயப்படுத்தினால் அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக (விஷய)த்தில் அவ்விருவருடன் நல்ல முறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பிய (நல்ல)வர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
আরবি তাফসীরসমূহ:
یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِیْ صَخْرَةٍ اَوْ فِی السَّمٰوٰتِ اَوْ فِی الْاَرْضِ یَاْتِ بِهَا اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟
என் மகனே! நிச்சயமாக (நீ செய்கிற) அ(ந்த நன்மை அல்லது; தீமையான)து எள்ளின் விதை அளவு இருந்தாலும், அது ஒரு பாறையில் இருந்தாலும், அல்லது; வானங்களில் இருந்தாலும்; அல்லது, பூமியில் இருந்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
আরবি তাফসীরসমূহ:
یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰی مَاۤ اَصَابَكَ ؕ— اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟ۚ
என் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! (மக்களுக்கு) நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! உனக்கு ஏற்பட்ட சோதனையில் பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க (உயர்வான) காரியங்களில் உள்ளவை ஆகும்.
আরবি তাফসীরসমূহ:
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۟ۚ
இன்னும், மக்க(ள் உன்னிடம் பேசும்போது அவர்க)ளை விட்டும் உனது கன்னத்தை திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்கள் தற்பெருமை பேசுபவர்கள் எவரையும் விரும்ப மாட்டான்.
আরবি তাফসীরসমূহ:
وَاقْصِدْ فِیْ مَشْیِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ؕ— اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ ۟۠
இன்னும், (விரைந்து செல்லாமலும் ஊர்ந்து செல்லாமலும்) உனது நடையில் நடுநிலைப் பேணு! (நிதானமாக நட!) இன்னும், (நீ பேசும்போது) உனது குரலை தாழ்த்து! நிச்சயமாக குரல்களில் மிக அருவருப்பானது கழுதைகளின் குரலாகும்.
আরবি তাফসীরসমূহ:
اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَسْبَغَ عَلَیْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ؕ— وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟
நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். இன்னும், உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். அல்லாஹ்வின் விஷயத்தில் கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் தர்க்கம் செய்பவர்கள் மக்களில் இருக்கிறார்கள்.
আরবি তাফসীরসমূহ:
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ الشَّیْطٰنُ یَدْعُوْهُمْ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟
இன்னும், அல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். கொழுந்து விட்டெரியும் நரக தண்டனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா (இவர்கள் ஷைத்தானின் வழிகாட்டலைப் பின்பற்றுவார்கள்)?
আরবি তাফসীরসমূহ:
وَمَنْ یُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَی اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ؕ— وَاِلَی اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
இன்னும், எவர் தனது முகத்தை அல்லாஹ்விற்கு முன் - அவரோ நல்லறம் புரிபவராக இருக்கும் நிலையில் – பணிய வைப்பாரோ திட்டமாக அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப் பிடித்தார். அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா காரியங்களின் முடிவு இருக்கிறது.
আরবি তাফসীরসমূহ:
وَمَنْ كَفَرَ فَلَا یَحْزُنْكَ كُفْرُهٗ ؕ— اِلَیْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
இன்னும், எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
আরবি তাফসীরসমূহ:
نُمَتِّعُهُمْ قَلِیْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰی عَذَابٍ غَلِیْظٍ ۟
அவர்களுக்கு நாம் கொஞ்ச (கால)ம் சுகமளிப்போம். பிறகு, நாம் கடுமையான முரட்டு தண்டனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம்.
আরবি তাফসীরসমূহ:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
யார் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் (படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறிய மாட்டார்கள்.
আরবি তাফসীরসমূহ:
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. நிச்சயமாக அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (-தேவையற்றவன்), மிகுந்த புகழாளன்.
আরবি তাফসীরসমূহ:
وَلَوْ اَنَّمَا فِی الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ یَمُدُّهٗ مِنْ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுது கோல்களாக இருந்து, இன்னும் கடல் - (மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல் நீரெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
আরবি তাফসীরসমূহ:
مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
உங்களை படைப்பதும் (நீங்கள் மரணித்த பின்னர்) உங்களை (உயிருடன்) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (எனக்கு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.
আরবি তাফসীরসমূহ:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؗ— كُلٌّ یَّجْرِیْۤ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரவை நுழைத்து (இரவை சுருக்கி)விடுகிறான்; இரவில் பகலை நுழைத்து (பகலை சுருக்கி)விடுகிறான்; சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான்; எல்லாம் ஒரு குறிப்பிட்ட தவணையின் பக்கம் ஓடுகின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் (எல்லோரும்) செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் என்பதையும் நீர் கவனிக்கவில்லையா?
আরবি তাফসীরসমূহ:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُ ۙ— وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟۠
அது, (-மேற்கூறப்பட்ட அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்; இன்னும், நிச்சயமாக அவனை அன்றி அவர்கள் அழைப்பவை (-வணங்குபவை) பொய்யானவை; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்ற காரணத்தால் ஆகும்.
আরবি তাফসীরসমূহ:
اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِیُرِیَكُمْ مِّنْ اٰیٰتِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
நிச்சயமாக கப்பல்கள் கடலில் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? பெரிய பொறுமையாளர்கள், அதிகம் நன்றி செலுத்துபவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
আরবি তাফসীরসমূহ:
وَاِذَا غَشِیَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬— فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ ؕ— وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ ۟
(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கிறார்கள், - வழிபாடுகளை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில். ஆக, அவர்களை அவன் கரைக்கு காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கிறார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கிறார்கள். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகிறார்கள்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக் கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் தவிர நமது அத்தாட்சிகளை மறுக்க மாட்டார்கள்.
আরবি তাফসীরসমূহ:
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا یَوْمًا لَّا یَجْزِیْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ ؗ— وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَیْـًٔا ؕ— اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۥ— وَلَا یَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை, தன் மகனை விட்டும் (தண்டனையை) தடுக்க மாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (தண்டனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். இன்னும், ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.
আরবি তাফসীরসমূহ:
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ— وَیُنَزِّلُ الْغَیْثَ ۚ— وَیَعْلَمُ مَا فِی الْاَرْحَامِ ؕ— وَمَا تَدْرِیْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ— وَمَا تَدْرِیْ نَفْسٌ بِاَیِّ اَرْضٍ تَمُوْتُ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟۠
நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மறுமையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்ற) அறிவு இருக்கிறது. அவன்தான் மழையை இறக்குகிறான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகிறான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
আরবি তাফসীরসমূহ:
 
অর্থসমূহের অনুবাদ সূরা: সূরা লুকমান
সূরাসমূহের সূচী পৃষ্ঠার নাম্বার
 
কুরআনুল কারীমের অর্থসমূহের অনুবাদ - তামীল ভাষায় অনুবাদ- ‘উমার শরীফ - অনুবাদসমূহের সূচী

তামীল ভাষায় আল-কুরআনুল কারীমের অর্থসমূহের অনুবাদ, অনুবাদক: শায়েখ ‘উমার শরীফ ইবনে আব্দুস সালাম

বন্ধ