Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil - Omar Sharif * - Índice de traducciones

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Traducción de significados Capítulo: Sura Ibrahim   Versículo:

ஸூரா இப்ராஹீம்

الٓرٰ ۫— كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
1, அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம்.
Las Exégesis Árabes:
اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَوَیْلٌ لِّلْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ شَدِیْدِ ۟ۙ
அல்லாஹ், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு கடினமான தண்டனையின் கேடு உண்டாகுக!
Las Exégesis Árabes:
١لَّذِیْنَ یَسْتَحِبُّوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟
அவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள்; இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்; மேலும், அதில் கோணலை(யும் குறையையும் உண்டாக்க) தேடுகிறார்கள். அவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.
Las Exégesis Árabes:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِیُبَیِّنَ لَهُمْ ؕ— فَیُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியிலேயே தவிர நாம் அனுப்பவில்லை. நோக்கம், அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்த வேண்டும் என்பதாகும். ஆக, அல்லாஹ், தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Las Exégesis Árabes:
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
திட்டவட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம், (மூஸாவே!) “உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றுவீராக! இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக! மிக பொறுமையாளர், மிக்க நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Las Exégesis Árabes:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(என் மக்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உஙகள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான தண்டனையால் உங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தார்கள். இன்னும், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்(து கொலை செய்)தார்கள். மேலும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை (உங்களுக்கு) இருந்தது.”
Las Exégesis Árabes:
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِیْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِیْ لَشَدِیْدٌ ۟
மேலும், “நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; இன்னும், நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டனை (உங்களுக்கு) கடுமையானதாக இருக்கும்” என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள்!
Las Exégesis Árabes:
وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ— فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟
இன்னும், மூஸா கூறினார்: “நீங்களும் பூமியிலுள்ள அனைவரும் நிராகரித்தாலும் (அவனுக்கு ஒரு குறையும் இல்லை. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன் (தேவையற்றவன்), மகா புகழாளன்” (என்று கூறினார்).
Las Exégesis Árabes:
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬— وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ— لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ— جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
உங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள்; ஆது மக்கள்; ஸமூது மக்கள்; இன்னும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்கு வரவில்லையா? அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அவர்களை அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அவர்கள் (கோபத்தால்) தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். இன்னும், (தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். மேலும், நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Las Exégesis Árabes:
قَالَتْ رُسُلُهُمْ اَفِی اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَدْعُوْكُمْ لِیَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرَكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ؕ— تُرِیْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
“வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் விஷயத்திலா (உங்களுக்கு) சந்தேகம்? அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கும்; மேலும், ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை உங்களை (இவ்வுலகத்தில் கண்ணியமாக வாழ) விட்டுவைப்பதற்கும் அவன் உங்களை அழைக்கிறான்” என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். “எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்(?). ஆகவே, தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்” என்று (அம்மக்கள்) கூறினார்கள்.
Las Exégesis Árabes:
قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَمُنُّ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَمَا كَانَ لَنَاۤ اَنْ نَّاْتِیَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
அவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நாங்கள் இல்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது (தனது வஹ்யை இறக்கி) அருள் புரிகிறான். மேலும், அல்லாஹ்வுடைய அனுமதியினாலே தவிர உங்களிடம் ஓர் ஆதாரத்தை நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது. இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.”
Las Exégesis Árabes:
وَمَا لَنَاۤ اَلَّا نَتَوَكَّلَ عَلَی اللّٰهِ وَقَدْ هَدٰىنَا سُبُلَنَا ؕ— وَلَنَصْبِرَنَّ عَلٰی مَاۤ اٰذَیْتُمُوْنَا ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟۠
“இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன்தான் எங்களுக்கு எங்கள் (சரியான) பாதைகளில் நேர்வழி நடத்தினான். மேலும், நீங்கள் எங்களை துன்புறுத்துவதை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.”
Las Exégesis Árabes:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ— فَاَوْحٰۤی اِلَیْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظّٰلِمِیْنَ ۟ۙ
மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான்.
Las Exégesis Árabes:
وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْ بَعْدِهِمْ ؕ— ذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِیْ وَخَافَ وَعِیْدِ ۟
“இன்னும், அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் வசிக்க செய்வோம். இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ; இன்னும், என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்.”
Las Exégesis Árabes:
وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِیْدٍ ۟ۙ
இன்னும், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் (இறுதியில்) அழிந்து விட்டனர்.
Las Exégesis Árabes:
مِّنْ وَّرَآىِٕهٖ جَهَنَّمُ وَیُسْقٰی مِنْ مَّآءٍ صَدِیْدٍ ۟ۙ
அவனுக்கு முன்னால் (அவன் மரணித்துவிட்டால்) ஜஹன்னம் (-நரகம்) இருக்கும். இன்னும், சீழ் நீரிலிருந்து அவன் நீர் புகட்டப்படுவான்.
Las Exégesis Árabes:
یَّتَجَرَّعُهٗ وَلَا یَكَادُ یُسِیْغُهٗ وَیَاْتِیْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَیِّتٍ ؕ— وَمِنْ وَّرَآىِٕهٖ عَذَابٌ غَلِیْظٌ ۟
அதை அவன் மிடறு மிடறாக குடிப்பான். அதை இலகுவாக அவன் குடித்து விடமாட்டான். மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் அவனுக்கு வரும். ஆனால், அவன் இறந்து விடமாட்டான். இன்னும், அவனுக்கு முன்னால் (கடினமான) தண்டனை (அவனை காத்து கொண்டு) இருக்கிறது.
Las Exégesis Árabes:
مَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ اَعْمَالُهُمْ كَرَمَادِ ١شْتَدَّتْ بِهِ الرِّیْحُ فِیْ یَوْمٍ عَاصِفٍ ؕ— لَا یَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰی شَیْءٍ ؕ— ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟
தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுடைய (செயல்களின்) உதாரணம், புயல் காலத்தில் காற்று கடுமையாக அடித்துச் சென்ற சாம்பலைப்போல் அவர்களுடைய அமல்கள் இருக்கின்றன! தாங்கள் செய்ததில் (இருந்து நன்மை) எதையும் (அடைய) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். இதுதான் (வெகு) தூரமான வழிகேடாகும்.
Las Exégesis Árabes:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَاْتِ بِخَلْقٍ جَدِیْدٍ ۟ۙ
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்துள்ளான் என்பதை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? (மக்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி விடுவான். இன்னும், (உங்களுக்கு பதிலாக) புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான்.
Las Exégesis Árabes:
وَّمَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیْزٍ ۟
மேலும், இது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.
Las Exégesis Árabes:
وَبَرَزُوْا لِلّٰهِ جَمِیْعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— قَالُوْا لَوْ هَدٰىنَا اللّٰهُ لَهَدَیْنٰكُمْ ؕ— سَوَآءٌ عَلَیْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَّحِیْصٍ ۟۠
மேலும், (மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். (தலைவர்கள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எதையும் நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா?” என்று (அவர்களை பின்பற்றிய) பலவீனர்கள் கூறுவார்கள். “(தண்டனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (தண்டனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன? அல்லது, நாம் (அதை சகித்துக் கொண்டு) பொறுமையாக இருந்தால் என்ன? எல்லாம் நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை!” என்று (தலைவர்கள்) கூறுவார்கள்.
Las Exégesis Árabes:
وَقَالَ الشَّیْطٰنُ لَمَّا قُضِیَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْ ؕ— وَمَا كَانَ لِیَ عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِیْ ۚ— فَلَا تَلُوْمُوْنِیْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ ؕ— مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِیَّ ؕ— اِنِّیْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ ؕ— اِنَّ الظّٰلِمِیْنَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
மேலும், காரியங்கள் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை வாக்களித்தான். இன்னும், நான் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால், நான் உங்களை வஞ்சித்தேன். இன்னும், உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரம் ஏதும் இருக்கவில்லை. எனினும், உங்களை (பாவத்தின் பக்கம்) அழைத்தேன்; எனக்கு நீங்கள் பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தித்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்விற்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.”
Las Exégesis Árabes:
وَاُدْخِلَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ؕ— تَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۟
(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் தங்கள் இறைவனின் அனுமதிப்படி அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அதில் அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்.
Las Exégesis Árabes:
اَلَمْ تَرَ كَیْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَیِّبَةً كَشَجَرَةٍ طَیِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِی السَّمَآءِ ۟ۙ
(நபியே! ‘கலிமதுத் தவ்ஹீத்’ என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தை போன்றாகும். அ(ந்)த (மரத்தி)ன் வேர் உறுதியானதும்; அதன் கிளை (உயரமாக) வானத்திலும் இருக்கிறது.
Las Exégesis Árabes:
تُؤْتِیْۤ اُكُلَهَا كُلَّ حِیْنٍ بِاِذْنِ رَبِّهَا ؕ— وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
அது தன் இறைவனின் அனுமதியினால் எல்லாக் காலத்திலும் தன் கனிகளைக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு, - அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக - அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான்.
Las Exégesis Árabes:
وَمَثَلُ كَلِمَةٍ خَبِیْثَةٍ كَشَجَرَةٍ خَبِیْثَةِ ١جْتُثَّتْ مِنْ فَوْقِ الْاَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ ۟
(நிராகரிப்பவர்களின்) கெட்ட வாசகத்திற்கு உதாரணம் ஒரு கெட்ட மரத்தை போன்றாகும். அ(ந்த மரமான)து பூமியின் மேலிருந்து அறுபட்டு விட்டது. அதற்கு அறவே நிலைத்தன்மை இல்லை.
Las Exégesis Árabes:
یُثَبِّتُ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ— وَیُضِلُّ اللّٰهُ الظّٰلِمِیْنَ ۙ۫— وَیَفْعَلُ اللّٰهُ مَا یَشَآءُ ۟۠
நம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்க்கையிலும் மறுமையிலும், (லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; இன்னும், அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
Las Exégesis Árabes:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ ۟ۙ
(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவு இல்லத்தில் தங்கவைத்தவர்களை நீர் பார்க்கவில்லையா?
Las Exégesis Árabes:
جَهَنَّمَ ۚ— یَصْلَوْنَهَا ؕ— وَبِئْسَ الْقَرَارُ ۟
அதுதான் நரகமாகும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்; இன்னும், அது தங்குமிடத்தால் மிகக் கெட்டதாகும்.
Las Exégesis Árabes:
وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ— قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِیْرَكُمْ اِلَی النَّارِ ۟
இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர். (அதன்) நோக்கம், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதாகும். (நபியே!) கூறுவீராக! “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீளுமிடம் நரகத்தின் பக்கம்தான்.”
Las Exégesis Árabes:
قُلْ لِّعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْا یُقِیْمُوا الصَّلٰوةَ وَیُنْفِقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خِلٰلٌ ۟
(நபியே! என் மீது) நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்யட்டும் ஒரு நாள் வருவதற்கு முன்னதாக. அந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் இருக்காது.”
Las Exégesis Árabes:
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ— وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِیَ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ۚ— وَسَخَّرَ لَكُمُ الْاَنْهٰرَ ۟ۚ
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; இன்னும், வானத்தில் இருந்து மழையை இறக்கி, அதன் மூலம் உங்களுக்கு உணவாக கனிகளில் (பலவற்றை) வெளிப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு கப்பலை அவனுடைய கட்டளையினால் கடலில் செல்வதற்காக வசப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு ஆறுகளை (நீங்கள் அவற்றிலிருந்து பயனடைவதற்காக) வசப்படுத்தி கொடுத்தான்.
Las Exégesis Árabes:
وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآىِٕبَیْنِ ۚ— وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۟ۚ
இன்னும், (அவன்) உங்களுக்கு சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்கக்கூடியதாக வசப்படுத்தி கொடுத்தான். இன்னும், இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தி கொடுத்தான்.
Las Exégesis Árabes:
وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُ ؕ— وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ۟۠
இன்னும், நீங்கள் அவனிடம் கேட்ட எல்லாவற்றிலிருந்தும் உங்களுக்கு அவன் கொடுத்தான். மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! நிச்சயமாக (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்.
Las Exégesis Árabes:
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِیْ وَبَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۟ؕ
“என் இறைவா! இவ்வூரை பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! மேலும், என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டும் தூரமாக்கி வை!” என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்ததை நினைவு கூர்வீராக!
Las Exégesis Árabes:
رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِیْرًا مِّنَ النَّاسِ ۚ— فَمَنْ تَبِعَنِیْ فَاِنَّهٗ مِنِّیْ ۚ— وَمَنْ عَصَانِیْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
“என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; மேலும், எவர் எனக்கு மாறு செய்தாரோ, நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
Las Exégesis Árabes:
رَبَّنَاۤ اِنِّیْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّیَّتِیْ بِوَادٍ غَیْرِ ذِیْ زَرْعٍ عِنْدَ بَیْتِكَ الْمُحَرَّمِ ۙ— رَبَّنَا لِیُقِیْمُوا الصَّلٰوةَ فَاجْعَلْ اَفْىِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِیْۤ اِلَیْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَشْكُرُوْنَ ۟
“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!”
Las Exégesis Árabes:
رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِیْ وَمَا نُعْلِنُ ؕ— وَمَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْ شَیْءٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟
“எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். பூமியிலும் வானத்திலும் எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக இல்லை.”
Las Exégesis Árabes:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ وَهَبَ لِیْ عَلَی الْكِبَرِ اِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ ؕ— اِنَّ رَبِّیْ لَسَمِیْعُ الدُّعَآءِ ۟
“வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.”
Las Exégesis Árabes:
رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّیَّتِیْ ۖۗ— رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ۟
“என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!”
Las Exégesis Árabes:
رَبَّنَا اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِلْمُؤْمِنِیْنَ یَوْمَ یَقُوْمُ الْحِسَابُ ۟۠
“எங்கள் இறைவா! விசாரணை நடக்கின்ற நாளில் எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் மன்னிப்பளி!”
Las Exégesis Árabes:
وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظّٰلِمُوْنَ ؕ۬— اِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیْهِ الْاَبْصَارُ ۟ۙ
(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதை கவனிக்காதவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று எண்ணி விடாதீர்! அவன் அவர்களை (தண்டிக்காமல்) தாமதிப்பதெல்லாம் ஒரு நாளுக்காகத்தான். பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும்.
Las Exégesis Árabes:
مُهْطِعِیْنَ مُقْنِعِیْ رُءُوْسِهِمْ لَا یَرْتَدُّ اِلَیْهِمْ طَرْفُهُمْ ۚ— وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ۟ؕ
(அந்நாளில் அந்த அநியாயக்காரர்கள்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக வருவர். அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும்.
Las Exégesis Árabes:
وَاَنْذِرِ النَّاسَ یَوْمَ یَاْتِیْهِمُ الْعَذَابُ فَیَقُوْلُ الَّذِیْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ— نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ— اَوَلَمْ تَكُوْنُوْۤا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍ ۟ۙ
(நபியே!) மேலும், மக்களை அவர்களுக்கு தண்டனை வரும் ஒரு நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பீராக! ஆக, (அந்நாளில்) அநியாயக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை (வரும்) வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! நாங்கள் உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; இன்னும், தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு (உலகத்தில்) அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்(து மறுமையை நம்பா)திருக்கவில்லையா?”
Las Exégesis Árabes:
وَّسَكَنْتُمْ فِیْ مَسٰكِنِ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَیَّنَ لَكُمْ كَیْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ ۟
“இன்னும், நீங்கள் தங்களுக்கு தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் வசித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? மேலும், நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது. இன்னும், உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”
Las Exégesis Árabes:
وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْ ؕ— وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ ۟
மேலும், திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி அறியப்பட்டதாக இருக்கிறது. அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே! (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.)
Las Exégesis Árabes:
فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟ؕ
ஆக, (நபியே!) அல்லாஹ் தனது தூதர்களு(க்கு அளித்த அவனு)டைய வாக்கை மீறக்கூடியவன் என்று ஒருபோதும் நீர் நினைத்து விடாதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்.
Las Exégesis Árabes:
یَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَیْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாக) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில் (அவன் அநியாயக்காரர்களிடம் பழிவாங்குவான்).
Las Exégesis Árabes:
وَتَرَی الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ مُّقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟ۚ
மேலும், அந்நாளில் குற்றவாளிகளை சங்கிலிகளில் கட்டப்பட்டவர்களாக காண்பீர்.
Las Exégesis Árabes:
سَرَابِیْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰی وُجُوْهَهُمُ النَّارُ ۟ۙ
அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். இன்னும், அவர்களுடைய முகங்களை நரக நெருப்பு சூழ்ந்து விடும்.
Las Exégesis Árabes:
لِیَجْزِیَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
ஒவ்வொரு ஆன்மாவுக்கும், - அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காகவே (மறுமை நாளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களை) விசாரி(த்து கூலி கொடு)ப்பதில் மிகத் தீவிரமானவன்.
Las Exégesis Árabes:
هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِیُنْذَرُوْا بِهٖ وَلِیَعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِیَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟۠
இ(வ்வேதமான)து, மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும், அவன்தான் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; இன்னும், நிறைவான அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு அவன் இறக்கினான்).
Las Exégesis Árabes:
 
Traducción de significados Capítulo: Sura Ibrahim
Índice de Capítulos Número de página
 
Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil - Omar Sharif - Índice de traducciones

Traducción del significado del Corán al tamil por Sh. Omar Sharif ibn Abdusalam

Cerrar