وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف * - پێڕستی وه‌رگێڕاوه‌كان

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

وه‌رگێڕانی ماناكان سوره‌تی: سورەتی الحجر   ئایه‌تی:

அஸூரா அல்ஹிஜ்ர்

الٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِیْنٍ ۟
அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்களுடைய; இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும்.
تەفسیرە عەرەبیەکان:
رُبَمَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِیْنَ ۟
நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் ஆசைப்படுவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
ذَرْهُمْ یَاْكُلُوْا وَیَتَمَتَّعُوْا وَیُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் உண்ணட்டும்; இன்னும், அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; மேலும். அவர்களுடைய ஆசைகள் (மறுமையை விட்டும்) அவர்களை திசை திருப்பட்டும். ஆக, (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) விரைவில் அறிவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ۟
எந்த ஓர் ஊரையும் அதற்கென குறிப்பிட்ட ஒரு தவணை இருந்தே தவிர நாம் (உடனே அதை) அழிக்கவில்லை.
تەفسیرە عەرەبیەکان:
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟
எந்த ஒரு சமுதாயமும் தங்களது தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَقَالُوْا یٰۤاَیُّهَا الَّذِیْ نُزِّلَ عَلَیْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۟ؕ
மேலும், (உம்மை நோக்கி) “ஓ அறிவுரை (நிறைந்த குர்ஆன்) இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
لَوْ مَا تَاْتِیْنَا بِالْمَلٰٓىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
“நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நம்மிடம் (உமக்கு சாட்சிகளாக) வானவர்களை நீர் கொண்டு வரலாமே?”
تەفسیرە عەرەبیەکان:
مَا نُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِیْنَ ۟
உண்மை(யான தண்டனை)யைக் கொண்டே தவிர வானவர்களை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். மேலும், (அப்படி இறக்கி, அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) அப்போது அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ شِیَعِ الْاَوَّلِیْنَ ۟
(நபியே!) உமக்கு முன்பு முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை, அவரை அவர்கள் கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.
تەفسیرە عەرەبیەکان:
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
(முன்னர் நாம் எப்படி செய்தோமோ) அதுபோன்றே, அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இந்த) குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்.
تەفسیرە عەرەبیەکان:
لَا یُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِیْنَ ۟
(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். மேலும், முன்னோரின் வழிமுறை திட்டமாக சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிந்து போவார்கள்.)
تەفسیرە عەرەبیەکان:
وَلَوْ فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِیْهِ یَعْرُجُوْنَ ۟ۙ
அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகல் நேரத்தில் அவர்கள் ஏறினாலும்,
تەفسیرە عەرەبیەکان:
لَقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ۟۠
அவர்கள் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மாறாக), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; மாறாக, நாங்கள் மந்திரம் செய்யப்பட்ட மக்களாக ஆகிவிட்டோம்” என்றே கூறுவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ جَعَلْنَا فِی السَّمَآءِ بُرُوْجًا وَّزَیَّنّٰهَا لِلنّٰظِرِیْنَ ۟ۙ
திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அதை அலங்கரித்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
இன்னும், விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டும் அ(ந்த வானத்)தைப் பாதுகாத்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِیْنٌ ۟
எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை பிரகாசமான எரி நட்சத்திரம் பின் தொடரும்.
تەفسیرە عەرەبیەکان:
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ شَیْءٍ مَّوْزُوْنٍ ۟
இன்னும், பூமி - அதை நாம் விரித்தோம்; மேலும், அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; மேலும், அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் (அளவையில் அளக்கப்படும்) எல்லா வகையான உணவுகளையும் முளைக்க வைத்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِیْنَ ۟
இன்னும், அதில் உங்களுக்கும், மேலும், எவர்களுக்கு நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லையோ அவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்(து கொடுத்)தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآىِٕنُهٗ ؗ— وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ۟
எப்பொருளும் இல்லை, அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. மேலும், குறிப்பிடப்பட்ட ஓர் அளவிலே தவிர அதை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَاَرْسَلْنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَیْنٰكُمُوْهُ ۚ— وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِیْنَ ۟
(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். ஆக, அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்கு நீர் புகட்டுகிறோம். மேலும், அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை. (நாமே அதை உங்களுக்காக பூமியில் சேகரித்து வைக்கிறோம்.)
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّا لَنَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ ۟
நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும், மரணிக்க வைக்கிறோம். மேலும், நாமே (அனைத்திற்கும்) வாரிசுகள் (-இறுதி உரிமையாளர்கள்) ஆவோம்!
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِیْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَاْخِرِیْنَ ۟
திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்; இன்னும், (உங்களில்) பின் வருபவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّ رَبَّكَ هُوَ یَحْشُرُهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟۠
இன்னும், (நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில் உயிர்ப்பித்து) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟ۚ
மேலும், திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَالْجَآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ۟
இன்னும், (மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
மேலும், (நபியே!) நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்” என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
تەفسیرە عەرەبیەکان:
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
ஆக, “நான் அவரை செம்மைபடுத்தி, அவரி(ன் உடலி)ல் நான் படைத்த உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்!” (என்று வானத்தில் உள்ளோருக்கு நாம் கட்டளையிட்டோம்.)
تەفسیرە عەرەبیەکان:
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
ஆக, (அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்,
تەفسیرە عەرەبیەکان:
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰۤی اَنْ یَّكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு அவன் மறுத்(து பிடிவாதம் பிடித்)தான்.
تەفسیرە عەرەبیەکان:
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாமல் இருக்க உனக்கென்ன நேர்ந்தது?”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
(இப்லீஸ்) கூறினான்: “பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவனாகிய) நான் சிரம் பணிவது எனக்கு சரி இல்லை. (அது என்னால் முடியாது!)”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙ
(அல்லாஹ்) கூறினான்: “ஆக, இதிலிருந்து நீ வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”
تەفسیرە عەرەبیەکان:
وَّاِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
“இன்னும், நிச்சயமாக உன் மீது (எனது) சாபம், கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகட்டும்!”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
(இப்லீஸ்) கூறினான்: “ஆக, என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு நீ அவகாசமளி!”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
(அல்லாஹ்) கூறினான்: “ஆக, நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டாய்,”
تەفسیرە عەرەبیەکان:
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
“(தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் (அந்த மறுமை) நாள் (வருகின்ற) வரை.”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு நிச்சயமாக நான் அலங்கரிப்பேன்; இன்னும், நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடு(க்க முயற்சி)ப்பேன்,”
تەفسیرە عەرەبیەکان:
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
“அவர்களில் (மனத்தூய்மையுடன் உன்னை மட்டும் வணங்குகின்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர.”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسْتَقِیْمٌ ۟
(அல்லாஹ்) கூறினான்: “இது என் பக்கம் சேர்ப்பிக்கின்ற நேரான வழியாகும்.”
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِیْنَ ۟
“நிச்சயமாக என் அடியார்கள் - அவர்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனினும், உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் நீ வழிகெடுப்பாய்.)”
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
“மேலும், நிச்சயமாக நரகம் (வழிகெடுத்தவனாகிய உனக்கும், வழிகெட்டவர்களாகிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.”
تەفسیرە عەرەبیەکان:
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ— لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ۟۠
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரி(த்து ஒது)க்கப்பட்ட ஒரு பிரிவினர் உண்டு.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ؕ
நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِیْنَ ۟
“நீங்கள், ஸலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
تەفسیرە عەرەبیەکان:
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
لَا یَمَسُّهُمْ فِیْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِیْنَ ۟
அவர்களுக்கு அதில் சிரமம் ஏதும் ஏற்படாது. இன்னும், அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை.
تەفسیرە عەرەبیەکان:
نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟ۙ
(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.”
تەفسیرە عەرەبیەکان:
وَاَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ ۟
“இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!”
تەفسیرە عەرەبیەکان:
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
மேலும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
تەفسیرە عەرەبیەکان:
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ— قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ۟
அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தில் (நடந்த நிகழ்வை கூறுவீராக). ஆக, அவர்கள், “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினார்கள். (இப்ராஹீம்) கூறினார்: ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி அச்சப்படுகிறோம்.”
تەفسیرە عەرەبیەکان:
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு (மார்க்கத்தை) அதிகம் அறிந்த ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்.”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ اَبَشَّرْتُمُوْنِیْ عَلٰۤی اَنْ مَّسَّنِیَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ۟
அவர் கூறினார்: “எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க, எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? ஆக, எந்த அடிப்படையில் (இப்படி) நற்செய்தி கூறுகிறீர்கள்?”
تەفسیرە عەرەبیەکان:
قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِیْنَ ۟
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
அவர் கூறினார்: “வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளில் யார் அவநம்பிக்கை கொள்வார்?”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
அவர் கூறினார்: “ஆக, (வானவத்) தூதர்களே! (நீங்கள் அனுப்பப்பட்ட) உங்கள் காரியமென்ன?”
تەفسیرە عەرەبیەکان:
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
அவர்கள் கூறினார்கள்: “குற்றவாளிகளான மக்களிடம் (அவர்களை அழிக்க) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்.”
تەفسیرە عەرەبیەکان:
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ— اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
“(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்போம்.”
تەفسیرە عەرەبیەکان:
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ— اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
“(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் இருப்பார் என்று (அல்லாஹ்வின் கட்டளையின்படி) நாங்கள் முடிவு செய்தோம்.”
تەفسیرە عەرەبیەکان:
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ١لْمُرْسَلُوْنَ ۟ۙ
ஆக, (வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது,
تەفسیرە عەرەبیەکان:
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
அவர் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அறிமுகமற்ற கூட்டமாகும்!”
تەفسیرە عەرەبیەکان:
قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِیْهِ یَمْتَرُوْنَ ۟
அவர்கள் கூறினார்கள்: “மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை (-அல்லாஹ்வின் தண்டனையை) உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.”
تەفسیرە عەرەبیەکان:
وَاَتَیْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
“இன்னும், உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.”
تەفسیرە عەرەبیەکان:
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَیْثُ تُؤْمَرُوْنَ ۟
“ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் நீர் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றி செல்வீராக; மேலும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும், நீங்கள் ஏவப்பட்ட இடத்தை நோக்கி (இதே நிலையில்) சென்று கொண்டே இருங்கள்.”
تەفسیرە عەرەبیەکان:
وَقَضَیْنَاۤ اِلَیْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِیْنَ ۟
“நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள்) பொழுது விடிந்தவர்களாக காலையில் இருக்கும்போது துண்டிக்கப்படும்” என்று (அவர்களின்) காரியத்தை முடிவு செய்து அவருக்கு அறிவித்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
மேலும், அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (லூத் நபியிடம்) வந்தார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
(லூத்) கூறினார்: “நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை அவமானப்படுத்தாதீர்கள்.”
تەفسیرە عەرەبیەکان:
وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ۟
“மேலும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், என்னை இழிவு படுத்தாதீர்கள்”
تەفسیرە عەرەبیەکان:
قَالُوْۤا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِیْنَ ۟
அவர்கள் கூறினார்கள்: “(வேறு ஊர்) மக்களை (விருந்துக்கு அழைப்பதை) விட்டும் நாம் உம்மைத் தடுக்கவில்லையா.”
تەفسیرە عەرەبیەکان:
قَالَ هٰۤؤُلَآءِ بَنَاتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ
லூத் கூறினார்: “(இதோ!) இவர்கள் என் (ஊரில் உள்ள) பெண் பிள்ளைகள் ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களை முறைப்படி திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்).”
تەفسیرە عەرەبیەکان:
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟
(நபியே!) உம் வாழ்க்கையின் மீது சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிலை வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ
ஆகவே, (லூத் நபியின் ஊர் மக்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.
تەفسیرە عەرەبیەکان:
فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ
ஆக, அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அவர்கள் மீது கெட்டியான களிமண்ணினால் ஆன கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்;
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟
படிப்பினை பெறுகின்ற நுண்ணறிவாளர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟
இன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
மேலும், நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) அடர்த்தியான தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ— وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠
ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். இன்னும், அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான பாதையில்தான் உள்ளன.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ
மேலும், (ஹூத் நபியின் சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ
இன்னும், அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருந்தனர்.
تەفسیرە عەرەبیەکان:
وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟
மேலும், அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்.
تەفسیرە عەرەبیەکان:
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ
ஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.
تەفسیرە عەرەبیەکان:
فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ
ஆக, அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ— وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟
மேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟
இன்னும், (நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்கு நாம் கொடுத்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟
இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!).
تەفسیرە عەرەبیەکان:
وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ
இன்னும், “நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக.
تەفسیرە عەرەبیەکان:
كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ
(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (தண்டனையை) இறக்கியது போன்றே (இந்நிராகரிப்பாளர்கள் மீது தண்டனையை இறக்குவோம்).
تەفسیرە عەرەبیەکان:
الَّذِیْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِیْنَ ۟
அவர்கள் குர்ஆனைப் (பற்றி அது சூனியம், அது கவிதை, அது குறி கூறும் வாசகம் என்று வர்ணித்து அதைப்) பல வகைகளாக ஆக்கினார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
ஆகவே, உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரிடமும் நாம் விசாரிப்போம்,
تەفسیرە عەرەبیەکان:
عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி.
تەفسیرە عەرەبیەکان:
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்படுவதை மிகத் தெளிவாக பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّا كَفَیْنٰكَ الْمُسْتَهْزِءِیْنَ ۟ۙ
(நபியே! உம்மை) கேலிசெய்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்.
تەفسیرە عەرەبیەکان:
الَّذِیْنَ یَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆக, அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ یَضِیْقُ صَدْرُكَ بِمَا یَقُوْلُوْنَ ۟ۙ
(நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்.
تەفسیرە عەرەبیەکان:
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟ۙ
ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இன்னும், (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰی یَاْتِیَكَ الْیَقِیْنُ ۟۠
மேலும், உங்களுக்கு ‘யகீன்’ - நம்பிக்கை (எனும் மரணம்) வருகின்ற வரை உம் இறைவனை வணங்குவீராக!
تەفسیرە عەرەبیەکان:
 
وه‌رگێڕانی ماناكان سوره‌تی: سورەتی الحجر
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف - پێڕستی وه‌رگێڕاوه‌كان

وەرگێڕاوی ماناکانی قورئانی پیرۆز بۆ زمانی تامیلی، وەرگێڕان: شيخ عمر شريف بن عبدالسلام.

داخستن