وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف * - پێڕستی وه‌رگێڕاوه‌كان

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

وه‌رگێڕانی ماناكان سوره‌تی: سورەتی المدثر   ئایه‌تی:

ஸூரா அல்முத்தஸ்ஸிர்

یٰۤاَیُّهَا الْمُدَّثِّرُ ۟ۙ
போர்வை போர்த்தியவரே!
تەفسیرە عەرەبیەکان:
قُمْ فَاَنْذِرْ ۟ۙ
எழுவீராக! எச்சரிப்பீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَرَبَّكَ فَكَبِّرْ ۟ۙ
உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَثِیَابَكَ فَطَهِّرْ ۟ۙ
இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَالرُّجْزَ فَاهْجُرْ ۟ۙ
சிலைகளை விட்டும் (அவற்றை வழிபடுவதை விட்டும்) விலகுவீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ ۟ۙ
(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதியவராக, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!
تەفسیرە عەرەبیەکان:
وَلِرَبِّكَ فَاصْبِرْ ۟ؕ
இன்னும், உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
تەفسیرە عەرەبیەکان:
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوْرِ ۟ۙ
ஆக, எக்காளத்தில் ஊதப்பட்டால்,
تەفسیرە عەرەبیەکان:
فَذٰلِكَ یَوْمَىِٕذٍ یَّوْمٌ عَسِیْرٌ ۟ۙ
அதுதான் அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.
تەفسیرە عەرەبیەکان:
عَلَی الْكٰفِرِیْنَ غَیْرُ یَسِیْرٍ ۟
அது, நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.
تەفسیرە عەرەبیەکان:
ذَرْنِیْ وَمَنْ خَلَقْتُ وَحِیْدًا ۟ۙ
என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றிலிருந்து வெளியேறும்போது) படைத்தேனோ அவனையும் விட்டுவிடுவீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۟ۙ
இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
تەفسیرە عەرەبیەکان:
وَّبَنِیْنَ شُهُوْدًا ۟ۙ
இன்னும், (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).
تەفسیرە عەرەبیەکان:
وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِیْدًا ۟ۙ
இன்னும், அவனுக்கு அதிகமான வசதிகளை செய்து கொடுத்தேன்.
تەفسیرە عەرەبیەکان:
ثُمَّ یَطْمَعُ اَنْ اَزِیْدَ ۟ۙ
பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
تەفسیرە عەرەبیەکان:
كَلَّا ؕ— اِنَّهٗ كَانَ لِاٰیٰتِنَا عَنِیْدًا ۟ؕ
அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக, நிராகரிப்பதில் பிடிவாதம் பிடித்தவனாக) இருந்தான்.
تەفسیرە عەرەبیەکان:
سَاُرْهِقُهٗ صَعُوْدًا ۟ؕ
விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَ ۟ۙ
நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும், திட்டமிட்டான்.
تەفسیرە عەرەبیەکان:
فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
ஆக, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும்.
تەفسیرە عەرەبیەکان:
ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
பிறகு, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும்.
تەفسیرە عەرەبیەکان:
ثُمَّ نَظَرَ ۟ۙ
பிறகு, அவன் தாமதித்தான்.
تەفسیرە عەرەبیەکان:
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ
பிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்.
تەفسیرە عەرەبیەکان:
ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ
பிறகு, அவன் புறக்கணித்தான். இன்னும், பெருமையடித்தான்.
تەفسیرە عەرەبیەکان:
فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ
ஆக, அவன் கூறினான்: இது, (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமாகவே தவிர இல்லை.
تەفسیرە عەرەبیەکان:
اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ
இது மனிதர்களின் சொல்லாகவே தவிர இல்லை.
تەفسیرە عەرەبیەکان:
سَاُصْلِیْهِ سَقَرَ ۟
“சகர்” நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ
“சகர்” என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
تەفسیرە عەرەبیەکان:
لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ
அது (தன்னில் யாரையும்) வாழ வைக்காது! இன்னும், (செத்து அழிந்து விடுவதற்கு யாரையும்) விட்டுவிடாது.
تەفسیرە عەرەبیەکان:
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚ
அது தோல்களை எரித்துவிடும்.
تەفسیرە عەرەبیەکان:
عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ
அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓىِٕكَةً ۪— وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا ۙ— لِیَسْتَیْقِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَیَزْدَادَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِیْمَانًا وَّلَا یَرْتَابَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ ۙ— وَلِیَقُوْلَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا یَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ— وَمَا هِیَ اِلَّا ذِكْرٰی لِلْبَشَرِ ۟۠
நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகிறான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகிறவர்களை வழிகெடுக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை நேர்வழி செலுத்துகிறான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இ(ந்த நரகமான)து இல்லை, மனிதர்களுக்கு நல்லுபதேசமாகவே தவிர!
تەفسیرە عەرەبیەکان:
كَلَّا وَالْقَمَرِ ۟ۙ
அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!
تەفسیرە عەرەبیەکان:
وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ
இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!
تەفسیرە عەرەبیەکان:
وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ
அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!
تەفسیرە عەرەبیەکان:
اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ
நிச்சயமாக அ(ந்த நரகமான)து மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
تەفسیرە عەرەبیەکان:
نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ
அ(ந்த நரகமான)து மனிதர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது.
تەفسیرە عەرەبیەکان:
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّتَقَدَّمَ اَوْ یَتَاَخَّرَ ۟ؕ
உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு, அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கையாக இருக்கிறது).
تەفسیرە عەرەبیەکان:
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ
ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப்பட்டு அதன் செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)
تەفسیرە عەرەبیەکان:
اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ
வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)
تەفسیرە عەرەبیەکان:
فِیْ جَنّٰتٍ ۛ۫— یَتَسَآءَلُوْنَ ۟ۙ
அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,
تەفسیرە عەرەبیەکان:
عَنِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
பாவிகளைப் பற்றி.
تەفسیرە عەرەبیەکان:
مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ ۟
(நிராகரிப்பாளர்களே!) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது?
تەفسیرە عەرەبیەکان:
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَ ۟ۙ
அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.
تەفسیرە عەرەبیەکان:
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَ ۟ۙ
இன்னும், ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.
تەفسیرە عەرەبیەکان:
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَآىِٕضِیْنَ ۟ۙ
இன்னும், வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَكُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِ ۟ۙ
இன்னும், கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
حَتّٰۤی اَتٰىنَا الْیَقِیْنُ ۟ؕ
இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.
تەفسیرە عەرەبیەکان:
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِیْنَ ۟ؕ
ஆக, பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை (இப்போது) அவர்களுக்கு பலனளிக்காது.
تەفسیرە عەرەبیەکان:
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِیْنَ ۟ۙ
ஆக, அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?
تەفسیرە عەرەبیەکان:
كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۟ۙ
தப்பித்து ஓடுகிற பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கிறார்கள்,
تەفسیرە عەرەبیەکان:
فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ۟ؕ
அவை வேட்டையாடுகிற, பாய்ந்து வருகிற சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன.
تەفسیرە عەرەبیەکان:
بَلْ یُرِیْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّؤْتٰی صُحُفًا مُّنَشَّرَةً ۟ۙ
மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட (வேத) ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
كَلَّا ؕ— بَلْ لَّا یَخَافُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)
تەفسیرە عەرەبیەکان:
كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ ۟ۚ
அவ்வாறல்ல. (-இந்த குர்ஆன் சூனியமும் அல்ல, மனிதர்களின் கூற்றும் அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.
تەفسیرە عەرەبیەکان:
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ؕ
ஆக, யார் நாடுவாரோ இதன் மூலம் அவர் உபதேசம் பெறுவார்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا یَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ— هُوَ اَهْلُ التَّقْوٰی وَاَهْلُ الْمَغْفِرَةِ ۟۠
அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (நமது) அச்சத்திற்கும் மன்னிப்புக்கும் மிகத் தகுதியானவன்.
تەفسیرە عەرەبیەکان:
 
وه‌رگێڕانی ماناكان سوره‌تی: سورەتی المدثر
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف - پێڕستی وه‌رگێڕاوه‌كان

وەرگێڕاوی ماناکانی قورئانی پیرۆز بۆ زمانی تامیلی، وەرگێڕان: شيخ عمر شريف بن عبدالسلام.

داخستن