ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ් * - පරිවර්තන පටුන

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

අර්ථ කථනය පරිච්ඡේදය: සූරා අල් කියාමා   වාක්‍යය:

ஸூரா அல்கியாமா

لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟
இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குலம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ
ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَخَسَفَ الْقَمَرُ ۟ۙ
இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمُسْتَقَرُّ ۟ؕ
அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
(நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்பீராக!)
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
அவ்வாறல்ல! (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
இன்னும் மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ بَاسِرَةٌ ۟ۙ
இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் (விகாரமாக) இருக்கும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அது அறிந்துகொள்ளும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
அவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَقِیْلَ مَنْ ٚ— رَاقٍ ۟ۙ
இன்னும், ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டால்,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
இன்னும், நிச்சயமாக இது (உலகை விட்டு போவதற்குரிய) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
இன்னும், (மறுமை எனும்) கெண்டைக் காலுடன் (உலகம் எனும்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمَسَاقُ ۟ؕ۠
அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
ஆக, அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
பிறகு, அவன் தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
பிறகு, உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
மனிதன், எண்ணுகிறானா, தான் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுவான் என்று?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். ஆக, (அவனை இறைவன்) படைத்தான். இன்னும், (அவனை முழு மனிதனாக பார்ப்பவனாக செவியுறுபவனாக பேசுபவனாக) சரிப்படுத்தினான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ؕ
ஆக, அவனிலிருந்து ஆண், பெண் இனத்தவர்களை அவன் படைக்கிறான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
இ(த்தகைய பேராற்றல் உள்ள இறை)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
 
අර්ථ කථනය පරිච්ඡේදය: සූරා අල් කියාමා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ් - පරිවර්තන පටුන

ශුද්ධ වූ අල් කුර්ආනයේ අර්ථයන් හි දෙමළ පරිවර්තනය. උමර් ෂරීෆ් බින් අබ්දුස්සලාම් විසින් පරිවර්තනය කරන ලදී.

වසන්න