Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Kəhf   Ayə:
وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ— قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِیْدَ هٰذِهٖۤ اَبَدًا ۟ۙ
18.35. அந்த நிராகரிப்பாளன் நம்பிக்கைகொண்ட தன் தோழனுடன் தோட்டத்திற்கு அதனைக் காண்பிப்பதற்காக வந்தான். அப்போது அவன் நிராகரிப்பால், தற்பெருமையால் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாக இருந்தான். அந்த நிராகரிப்பாளன் கூறினான்: “நீ காணும் இந்த தோட்டம் அழிந்துவிடும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் அது நிலைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.
Ərəbcə təfsirlər:
وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ— وَّلَىِٕنْ رُّدِدْتُّ اِلٰی رَبِّیْ لَاَجِدَنَّ خَیْرًا مِّنْهَا مُنْقَلَبًا ۟ۚ
18.36. மறுமை ஏற்படும் என நான் எண்ணவில்லை. நிலையான வாழ்வு மாத்திரமே உண்டு. ஒருவேளை மறுமை நாள் நிகழ்ந்து மீண்டும் நான் உயிர்பெற்று எழுந்து என் இறைவனிடம் கொண்டுசெல்லப்பட்டாலும் அங்கு இதைவிட சிறந்த தோட்டத்தையே நான் பெறுவேன். ஏனெனில் இந்த உலகில் நான் செல்வந்தனாக இருப்பதால் (மறுமையில்) மீண்டும் உயிர்பெற்று எழுந்த பிறகு செல்வந்தனாகவே இருப்பேன்.”
Ərəbcə təfsirlər:
قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ یُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِیْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ سَوّٰىكَ رَجُلًا ۟ؕ
18.37. நம்பிக்கை கொண்ட அவனுடைய தோழன் பேச்சை தொடர்ந்தவனாக அவனிடம் கூறினான்: “உன் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்து பின்னர் உன்னை விந்திலிருந்து படைத்து, பின்பு உன்னை ஆணாக மாற்றி, உன் உறுப்புகளைச் சீராக்கி, உன்னை முழுமையானவனாக ஆக்கியவனையா நீ நிராகரிக்கிறாய்? இவற்றையெல்லாம் செய்வதற்கு ஆற்றலுள்ளவன் உனக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்குஆற்றலுள்ளவன்.
Ərəbcə təfsirlər:
لٰكِنَّاۡ هُوَ اللّٰهُ رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِرَبِّیْۤ اَحَدًا ۟
18.38. ஆனால் நான் நீ கூறுவதுபோல் நான் கூறமாட்டேன். என்னைப் பொருத்தவரை அல்லாஹ்தான் எனது இறைவன். அவனே நமக்கு அருட்கொடைகளை வழங்கி சிறப்பித்துள்ளான். அப்படிப்பட்ட இறைவனுக்கு வணக்கத்தில் நான் யாரையும் இணையாக்க மாட்டேன். என்று கூறுவேன்.
Ərəbcə təfsirlər:
وَلَوْلَاۤ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ اللّٰهُ ۙ— لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ۚ— اِنْ تَرَنِ اَنَا اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًا ۟ۚ
18.39. நீ உன் தோட்டத்தில் நுழைந்த போது, “எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே. அவனைத் தவிர வேறு எவருக்கும் எந்த சக்தியும் இல்லை” என்று கூறியிருக்கக் கூடாதா! அவனே தான் நாடியதைச் செய்கிறான். அவன் வல்லமை மிக்கவன். நான் உன்னைவிட வசதி குறைந்தவன், பிள்ளைகள் குறைந்தவன், என நீ கருதினாலும் கூட.
Ərəbcə təfsirlər:
فَعَسٰی رَبِّیْۤ اَنْ یُّؤْتِیَنِ خَیْرًا مِّنْ جَنَّتِكَ وَیُرْسِلَ عَلَیْهَا حُسْبَانًا مِّنَ السَّمَآءِ فَتُصْبِحَ صَعِیْدًا زَلَقًا ۟ۙ
18.40. அல்லாஹ் உன் தோட்டத்தைவிட சிறந்த ஒன்றை எனக்கு வழங்குவதையும், உன் தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை அனுப்பி, அது கால்கள் வழுக்கும், எதுவும் முளையாத வெட்ட வெளியாகுவதையும் நான் எதிர்பார்த்துள்ளேன்.
Ərəbcə təfsirlər:
اَوْ یُصْبِحَ مَآؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِیْعَ لَهٗ طَلَبًا ۟
18.41. அல்லது அதன் நீர் பூமியில் வற்றிவிடலாம். அதனால் எவ்வித சாதனத்தின் மூலமும் உன்னால் அதனை அடையமுடியாது போய்விடும். அதன் நீர் வற்றிவிட்டால் அது நிலைத்திருக்காது.
Ərəbcə təfsirlər:
وَاُحِیْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ یُقَلِّبُ كَفَّیْهِ عَلٰی مَاۤ اَنْفَقَ فِیْهَا وَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا وَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُشْرِكْ بِرَبِّیْۤ اَحَدًا ۟
18.42. விசுவாசியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நிராகரிப்பாளனின் தோட்டத்தின் பழங்களை அழிவு சூழ்ந்துகொண்டது. அதனைக் கண்ட அவன் அதனைப் பராமரிப்பதற்காக செலவிட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கைபிசைந்து நின்றான். திராட்சை மரத்தின் கிளைகள் அழிந்து அத்தோட்டம் அடியோடு வீழ்ந்து கிடந்தது. அவன் கூறினான்: “நான் என் இறைவனை மட்டுமே நம்பிக்கைகொண்டிருக்க வேண்டுமே! வணக்கத்தில் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!
Ərəbcə təfsirlər:
وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًا ۟ؕ
18.43. அந்த நிராகரிப்பாளனுக்கு அவன் மீது இறங்கிய வேதனையைத் தடுக்கக்கூடிய எந்தக் கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன்தான் தன் கூட்டத்தினரைக்கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தான். அவனாலும் அவனது தோட்டத்தை அல்லாஹ் அழிப்பதைத் தடுக்க முடியவில்லை.
Ərəbcə təfsirlər:
هُنَالِكَ الْوَلَایَةُ لِلّٰهِ الْحَقِّ ؕ— هُوَ خَیْرٌ ثَوَابًا وَّخَیْرٌ عُقْبًا ۟۠
18.44. இந்த இடத்தில் உதவி அல்லாஹ் ஒருவன் மட்டுமே செய்ய முடியும். அவன் நம்பிக்கைகொண்ட தன் நேசர்களுக்கு நன்மையளிப்பதில் சிறந்தவன். அவன் அவர்களுக்குப் பலமடங்கு நன்மைகளை வழங்குகிறான். சிறப்பான முடிவை வழங்குவதிலும் அவனே சிறந்தவன்.
Ərəbcə təfsirlər:
وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِیْمًا تَذْرُوْهُ الرِّیٰحُ ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقْتَدِرًا ۟
18.45. -தூதரே!- உலக இன்பங்களைக் கண்டு ஏமாறுபவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுவீராக: அது அழிந்துவிடுவதிலும் விரைவாக தீர்ந்துவிடுவதிலும் மழை நீருக்கு ஒப்பானதாகும். நாம் அதனை வானத்திலிருந்து இறக்குகின்றோம். அந்த நீரின் மூலம் பூமியில் தாவரம் செழித்து வளர்கின்றது. பின்னர் அவை காற்றால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகுகளாகி விடுகின்றன. அந்தப் பூமி பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். அவனுக்கு இயலாதது எதுவும் கிடையாது. அவன் தான் நாடியவற்றை உயிருடன் விட்டுவைக்கிறான். தான் நாடியவற்றை அழித்து விடுகிறான்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• على المؤمن ألا يستكين أمام عزة الغني الكافر، وعليه نصحه وإرشاده إلى الإيمان بالله، والإقرار بوحدانيته، وشكر نعمه وأفضاله عليه.
1. நம்பிக்கையாளன் நிராகரித்த செல்வந்தனின் பணத்திமிருக்கு முன்னால் அடங்கிச் செல்லக்கூடாது. அவனுக்கு அறிவுரை வழங்கி அல்லாஹ்வை நம்பி அவனது ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதன் பக்கம் அவனை அழைக்க வேண்டும்.

• ينبغي لكل من أعجبه شيء من ماله أو ولده أن يضيف النعمة إلى مُولِيها ومُسْدِيها بأن يقول: ﴿ما شاءَ اللهُ لا قُوَّةَ إلَّا بِاللهِ﴾.
2. யாருக்காவது தனது சொத்து மற்றும் பிள்ளைச் செல்வங்களின் மூலம் பூரிப்பு ஏற்பட்டால் உடனே அவர்கள், “அல்லாஹ் நாடியதே கிடைத்துள்ளது. அவனைத்தவிர வேறு எவருக்கும் எந்த சக்தியும் இல்லை” என்று கூறி அருட்கொடையாளனின்பால் அவற்றை இணைத்துவிட வேண்டும்.

• إذا أراد الله بعبد خيرًا عجل له العقوبة في الدنيا.
3. அல்லாஹ் ஒரு அடியாருக்கு நன்மையை நாடினால் அவருக்கு இவ்வுலகிலேயே தண்டனை வழங்கிவிடுகிறான்.

• جواز الدعاء بتلف مال من كان ماله سبب طغيانه وكفره وخسرانه.
4. ஒருவரின் செல்வம் அவருடைய நிராகரிப்புக்கும், வரம்புமீறலுக்கும், அழிவுக்கும் காரணமாக அமைந்தால் அவரது சொத்தை அழிக்குமாறு பிரார்த்தனை செய்யலாம்.

 
Mənaların tərcüməsi Surə: əl-Kəhf
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq