Qurani Kərimin mənaca tərcüməsi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Ayə: (11) Surə: ən-Nur
اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ— لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ— بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ— وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟
24.11. -நம்பிக்கையாளர்களே!- நிச்சயமாக (விசுவாசிகளின் அன்னை ஆயிஷாவைக் குறித்து) அவதூறு கூறியவர்கள் உங்களிலுள்ள ஒரு பிரிவினர்தாம். அவர்கள் இட்டுக்கட்டியதை உங்களுக்குத் தீங்காக எண்ண வேண்டாம். மாறாக அது உங்களுக்கு நன்மையானதாகும். ஏனெனில் அதில் நம்பிக்கையாளர்களுக்கு கூலியும் சோதனையும் உண்டு என்பதுடன் முஃமின்களின் தாய் நிரபராதி என்பதும் நிரூபனமாகிறது. அவர் மீது விபச்சார அவதூறு கூறுவதில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் அவதூறு கூறி அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கான கூலி உண்டு. இந்த அவதூறை ஆரம்பித்து இதில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது. இது நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபைய் இப்னு சலூலைக் குறிப்பதாகும்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• تركيز المنافقين على هدم مراكز الثقة في المجتمع المسلم بإشاعة الاتهامات الباطلة.
1. தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி முஸ்லிம் சமூகத்தில் உள்ள நம்பிக்கையின் நிலையங்களைத் தகர்ப்பதில் நயவஞ்சகர்கள் கவனம் செலுத்தல்.

• المنافقون قد يستدرجون بعض المؤمنين لمشاركتهم في أعمالهم.
2. நயவஞ்சகர்கள் தங்களின் செயல்களில் சில நம்பிக்கையாளர்களையும் கூட்டாக்கிக்கொள்வதற்கு அவர்களைப் படிப்படியாக அவர்கள் தம் பக்கம் இழுக்கிறார்கள்.

• تكريم أم المؤمنين عائشة رضي الله عنها بتبرئتها من فوق سبع سماوات.
3. ஏழு வானங்களுக்கும் மேலிருந்து இறைவன் அன்னை ஆயிஷாவை நிரபராதியாக்கி கண்ணியப்படுத்தியுள்ளான்.

• ضرورة التثبت تجاه الشائعات.
4. வதந்திகளின் போது உறுதிப்படுத்துவது இன்றியமையாதது.

 
Mənaların tərcüməsi Ayə: (11) Surə: ən-Nur
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tərcumənin mündəricatı

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Bağlamaq