Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: ən-Nisa   Ayə:

அந்நிஸா

Surənin məqsədlərindən:
تنظيم المجتمع المسلم وبناء علاقاته، وحفظ الحقوق، والحث على الجهاد، وإبطال دعوى قتل المسيح.
முஸ்லிம் சமூகத்தை ஒழுங்குபடுத்தி அதன் தொடர்புகளைக் கட்டியெழுப்புதலும், உரிமைகளைப் பாதுகாத்தலும், போராடுவதற்கு ஆர்வமூட்டுதலும், ஈஸா நபி கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வாதத்தை மறுத்தலும்.

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا ۟
4.1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மாதான் உங்களின் தந்தை ஆதமாவார். அவரிலிருந்து அவரது மனைவியும் உங்களின் தாயுமான ஹவ்வாவைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந்து பல மனிதர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான். "அல்லாஹ்வுக்காக இவ்வாறு செய்யுமாறு உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று எந்த அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களை இணைக்கும் உறவுகளைத் துண்டிப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டுத் தப்பமுடியாது. மாறாக அவன் அவற்றை எண்ணி வைத்துள்ளான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Ərəbcə təfsirlər:
وَاٰتُوا الْیَتٰمٰۤی اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِیْثَ بِالطَّیِّبِ ۪— وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰۤی اَمْوَالِكُمْ ؕ— اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِیْرًا ۟
4.2. பொறுப்பாளிகளே! உங்களிடம் இருக்கும் அநாதைகள் பருவ வயதை அடைந்து அவர்கள் புரிந்து நடந்துகொள்வோராகவும் இருந்தால் அவர்களின் செல்வங்களை முழுமையாக வழங்கிவிடுங்கள். அவர்களிடமிருந்து தரமான பொருட்களைப் பெற்று மோசமான பொருட்களை திருப்பி அளித்து அனுமதிக்கப்பட்டதற்குப் பகரமாக தடைசெய்யப்பட்டதை மாற்றி எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்துவிடாதீர்கள். நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது.
Ərəbcə təfsirlər:
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰی فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ— فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ— ذٰلِكَ اَدْنٰۤی اَلَّا تَعُوْلُوْا ۟ؕ
4.3. உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைப் பெண்களைத் திருமணம் முடித்து, அவர்களுக்குரிய மணக்கொடையை குறைத்துவிடுவதனாலோ அல்லது மோசமாக நடந்துகொள்ளுவதனாலோ நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் அவர்களை விட்டுவிட்டு மற்ற பெண்களில் நீங்கள் விரும்பியவர்களை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ மணமுடித்துக் கொள்ளுங்கள். அவர்களிடையே உங்களால் நியாயமாக நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் ஒருத்தியை மட்டும் போதுமாக்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடிமைப் பெண்களுக்கு மனைவிகளுக்குரிய உரிமைகள் அவசியமற்றது. அநாதைகளுடைய விடயமாகவும் ஒரு திருமணம் முடித்துக் கொள்வது அல்லது தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்களைஅனுபவிப்பது சம்பந்தமாகவும் வசனங்களில் இடம்பெற்ற இந்த விடயங்களே நீங்கள் அநீதி இழைக்காமலிருப்பதற்கு மிக நெருக்கமானதாகும்.
Ərəbcə təfsirlər:
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ؕ— فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَیْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِیْٓـًٔا مَّرِیْٓـًٔا ۟
4.4. பெண்களுக்கு மணக்கொடைகளை அவசியம் அளித்துவிடுங்கள். நீங்கள் அளித்த மணக்கொடையில் அவர்கள் எதையேனும் உங்களுக்கு வற்புறுத்தலின்றி மனமுவந்து விட்டுக்கொடுத்தால் அதனை தாராளமாக உண்ணுங்கள். அதில் எந்தக் குற்றமும் இல்லை.
Ərəbcə təfsirlər:
وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَكُمُ الَّتِیْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِیٰمًا وَّارْزُقُوْهُمْ فِیْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
4.5. பொறுப்பாளர்களே! உங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிக்கும் செல்வங்களை அதனைச் சரியாக பராமரிக்கத் தெரியாதவர்களிடம் வழங்காதீர்கள். இந்த செல்வங்களை அல்லாஹ் அடியார்களின் நன்மைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இப்படிப்பட்டவர்கள் சொத்துக்களைப் பாதுகாக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவற்றிலிருந்து அவர்களுக்கு செலவுசெய்யுங்கள், ஆடை வழங்குங்கள். அவர்களிடம் நல்ல வார்த்தையைக் கூறுங்கள். “நீங்கள் பக்குவ வயதை, பராமரிக்கும் தகுதியை அடைந்துவிட்டால் நாங்கள் உங்களிடம் ஒப்படைத்துவிடுவோம்” என்பது போன்ற அழகிய வாக்குறுதிகளைக் கூறுங்கள்.
Ərəbcə təfsirlər:
وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ— فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ— وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ— وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ— وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ— فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ— وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
4.6. பொறுப்பாளர்களே! அவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களின் செல்வங்களிலிருந்து சிறிது வழங்கி அவர்களை சோதித்துப் பாருங்கள். அவர்கள் அதனை நல்லமுறையில் கையாண்டால், நீங்கள் அவர்களிடம் பக்குவத்தைக் கண்டால் அவர்களின் செல்வங்களை முழுமையாக அவர்களிடம் வழங்கிவிடுங்கள். உங்களுக்கு தேவை ஏற்பட்டால் அல்லாஹ் எடுத்துக்கொள்ள அனுமதித்த அளவை மீறி அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுவிடாதீர்கள். அவர்கள் பருவ வயதை அடைந்து சொத்துக்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற பயத்தால் அவசர அவசரமாக விழுங்கிவிடாதீர்கள்.போதுமான அளவு செல்வத்தைப் பெற்றிருப்பவர் அவர்களின் செல்வங்களை எடுக்காது தவிர்ந்துகொள்ளட்டும். உங்களில் ஏழ்மைநிலையில் இருப்பவர் தேவைக்கேற்ப அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுகொள்ளட்டும். அவர்கள் பருவ வயதை அடைந்து பக்குவத்தையும் பெற்ற பின் அவர்களின் செல்வத்தை அவர்களின் வசம் ஒப்படைக்கும்போது உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே இதற்கு சாட்சியாளனாக இருப்பதற்கும் அடியார்களின் செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதற்கும் போதுமானவன்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• الأصل الذي يرجع إليه البشر واحد، فالواجب عليهم أن يتقوا ربهم الذي خلقهم، وأن يرحم بعضهم بعضًا.
1. மனித இனத்தின் மூலம் ஒருவர்தான். எனவே அவர்கள் தங்களைப் படைத்த இறைவனான அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஒருவருக்கொருவர் கருணையோடு நடந்துகொள்ள வேண்டும்.

• أوصى الله تعالى بالإحسان إلى الضعفة من النساء واليتامى، بأن تكون المعاملة معهم بين العدل والفضل.
2. பலவீனமான பெண்கள், அநாதைகள் விஷயத்தில் நியாயமாகவும் நல்லமுறையிலும் நடந்துகொள்ளும்படி அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

• جواز تعدد الزوجات إلى أربع نساء، بشرط العدل بينهن، والقدرة على القيام بما يجب لهن.
3. ஒரு ஆண் நான்கு பெண்கள்வரை மணமுடித்துக் கொள்ளலாம். ஆனால் அவன் அவர்களிடையே நியாயமாக நடந்துகொள்பவனாகவும் அவர்களைப் பராமரிக்கும் அளவு சக்தியுடையவனாகவும் இருக்க வேண்டும்.

• مشروعية الحَجْر على السفيه الذي لا يحسن التصرف، لمصلحته، وحفظًا للمال الذي تقوم به مصالح الدنيا من الضياع.
4. செல்வங்களைப் பராமரிக்கத் தெரியாதவரின் நலனை கருத்தில்கொண்டும் உலக நலவுகள் நிறைவேறுவதற்குத் தேவையான பணம் வீணாகுவதைத் தடுக்கும் பொருட்டும் அவர் மீது பணத்தைக் கையாள்வதற்குத் தடை விதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
Mənaların tərcüməsi Surə: ən-Nisa
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq