Qurani Kərimin mənaca tərcüməsi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Ayə: (45) Surə: əl-Maidə
وَكَتَبْنَا عَلَیْهِمْ فِیْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ۙ— وَالْعَیْنَ بِالْعَیْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ— وَالْجُرُوْحَ قِصَاصٌ ؕ— فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ— وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
5.45. நாம் தவ்ராத்தில் யூதர்கள் மீது பின்வரும் விஷயத்தை கடமையாக்கினோம்: “வேண்டுமென்றே ஒரு மனிதரைக் கொலை செய்பவர் அதற்குப் பகரமாக கொலை செய்யப்படுவார். வேண்டுமென்றே கண்ணை நோண்டி எடுத்தவரின் கண்ணும் நோண்டி எடுக்கப்படும். வேண்டுமென்றே மூக்கை அறுத்தவரின் மூக்கும் அறுக்கப்படும். வேண்டுமென்றே காதை வெட்டியவரின் காதும் வெட்டப்படும். வேண்டுமென்றே பல்லை பிடுங்கியவரின் பல்லும் பிடுங்கப்படும். காயங்களுக்கு சமமான அளவு காயப்படுத்தப்படுவார்கள். யாரேனும் குற்றவாளியை மன்னித்துவிட்டால் அநியாயம் இழைத்தவரை மன்னித்ததனால் அது மன்னித்தவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்துவிடும். பழிவாங்குவதிலும் ஏனைய விடயங்களிலும் அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்கள்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• تعداد بعض صفات اليهود، مثل الكذب وأكل الربا ومحبة التحاكم لغير الشرع؛ لبيان ضلالهم وللتحذير منها.
1. பொய்கூறுதல், வட்டி வாங்கி உண்ணுதல், மார்க்கத்திற்கு வெளியே தீர்ப்புக்கேட்பதை விரும்புதல் போன்ற யூதர்களின் சில பண்புகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது அவர்களது வழிகேட்டைத் தெளிவுபடுத்தி அதனை எச்சரிப்பதற்காகவுமே.

• بيان شرعة القصاص العادل في الأنفس والجراحات، وهي أمر فرضه الله تعالى على من قبلنا.
2. உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கேற்ப நியாயமான முறையில் பழிவாங்கப்பட வேண்டும். இது அல்லாஹ் நமக்கு முன்னுள்ளவர்கள் மீது விதித்த கடமையாகும்.

• الحث على فضيلة العفو عن القصاص، وبيان أجرها العظيم المتمثّل في تكفير الذنوب.
3. பழிவாங்காமல் மன்னிப்பதன் சிறப்பு தெளிவாகிறது. பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமளவுக்கு மகத்தான கூலி அதற்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• الترهيب من الحكم بغير ما أنزل الله في شأن القصاص وغيره.
4. பழிவாங்குதல் மற்றும் இன்னபிற விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமல் இருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
Mənaların tərcüməsi Ayə: (45) Surə: əl-Maidə
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Tərcumənin mündəricatı

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Bağlamaq