Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Hədid   Ayə:
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الصِّدِّیْقُوْنَ ۖۗ— وَالشُّهَدَآءُ عِنْدَ رَبِّهِمْ ؕ— لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
57.19. அல்லாஹ்வின்மீதும் தூதர்களின் மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்பவர்கள்தாம் அவனிடத்தில் உண்மையாளர்களும் தமது இறைவனிடத்தில் சாட்சியாளர்களுமாவர். அவர்களுக்கு தயார்செய்யப்பட்ட கண்ணியமான கூலியும் உண்டு. மறுமை நாளில் அவர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து தங்களின் தூதர்மீது இறக்கப்பட்ட வசனங்களை பொய்யெனக் கூறுபவர்கள்தாம் நரகவாசிகளாவர். அவர்கள் மறுமை நாளில் நரகத்தில் நிரந்தமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.
Ərəbcə təfsirlər:
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ— كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ— وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ— وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
57.20. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உடல்களுக்கான விளையாட்டும் உள்ளங்களுக்கான வேடிக்கையும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளும் அலங்காரமும் உங்களிடையே அதிகமான செல்வங்களை, குழந்தைகளை, இன்பம், ஆட்சியதிகாரத்தைக்கொண்டும் பெருமையடிப்பதுமாகும். அதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதனால் விளையும் பயிர்கள் விவசாயியை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. பின்னர் அப்படியே இருக்காமல் இந்த பசுமையான பயிர்கள் காய்ந்துவிடுகின்றன. -பார்ப்பவனே!- பசுமையாக இருந்ததன் பின் மஞ்சள் நிறமாகி விடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அல்லாஹ் அவற்றை குப்பை கூளங்களாக்கி விடுகின்றான். மறுமையில் நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கடுமையான வேதனையும் நம்பிக்கைகொண்ட அல்லாஹ்வின் அடியார்களின் பாவங்களுக்கு மன்னிப்பும் அவனது திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்க்கை நிலையற்ற அழியக்கூடிய பொருளேயன்றி வேறில்லை. யார் மறுமையின் இன்பங்களைவிடுத்து அழியக்கூடிய இவ்வுலக வாழ்வை தேர்ந்தேடுத்துக் கொண்டாரோ அவர்தான் ஏமாற்றத்திற்கும் இழப்பிற்கும் உள்ளானவர் ஆவார்.
Ərəbcə təfsirlər:
سَابِقُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَالْاَرْضِ ۙ— اُعِدَّتْ لِلَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ؕ— ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
57.21. -மனிதர்களே!- நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் பாவமன்னிப்புத் தேடுதல் மற்றும் ஏனைய வணக்கங்களான நற்செயல்களின்பால் விரையுங்கள். அதன் மூலம் நீங்கள் வானம் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தைப் பெறலாம். தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்பவர்களுக்காக இச்சுவனத்தை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான். இந்தக் கூலி அல்லாஹ்வின் அருளாகும். அவன் தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது மகத்தான அருளுடையவனாவான்.
Ərəbcə təfsirlər:
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَلَا فِیْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ؕ— اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟ۙ
57.22. பூமியில் ஏற்படுகின்ற வரட்சியும் மற்றவைகளும் உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் ஒவ்வொன்றும், நாம் படைப்புகளை படைப்பதற்கு முன்னரே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது.
Ərəbcə təfsirlər:
لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ ۟ۙ
57.23. -மனிதர்களே!- இது நீங்கள் இழந்தவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் இருப்பதற்காகவும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு கர்வம் கொள்ளாமல் சந்தோசமாக இருப்பதற்காகவும்தான். நிச்சயமாக அல்லாஹ் தான் வழங்கியவற்றைக் கொண்டு மக்களிடம் கர்வம்கொள்ளக்கூடிய எவரையும் நேசிப்பதில்லை.
Ərəbcə təfsirlər:
١لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ ؕ— وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
57.24. கட்டாயமாக செலவழிக்க வேண்டியதை செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து மற்றவர்களையும் கஞ்சத்தனம் செய்யுமாறு ஏவுவபர்கள் நஷ்டமடைபவர்களாவர். யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அவர் அவனுக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது. நிச்சயமாக அவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாவான். அவன் தன் அடியார்களின் அடிபணிதலின்பால் தேவையுடையவன் அல்ல. அவன் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாவான்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• الزهد في الدنيا وما فيها من شهوات، والترغيب في الآخرة وما فيها من نعيم دائم يُعينان على سلوك الصراط المستقيم.
1. உலகிலும் அதன் இச்சைகளிலும் பற்றற்று இருப்பது, மறுமையிலும் அங்குள்ள நிரந்தர இன்பத்திலும் நாட்டம்கொள்வது ஆகிய இரண்டும் நேர்வழியில் செல்வதற்கு உதவக்கூடிய காரணிகளாக இருக்கின்றன.

• وجوب الإيمان بالقدر.
2. விதியை நம்புவதன் அவசியம்.

• من فوائد الإيمان بالقدر عدم الحزن على ما فات من حظوظ الدنيا.
3. உலகில் இழந்தவற்றை எண்ணி மனிதன் கவலைகொள்ளமல் இருப்பது விதியின்மீது நம்பிக்கைகொண்டதன் பயனில் உள்ளதாகும்.

• البخل والأمر به خصلتان ذميمتان لا يتصف بهما المؤمن.
4. கஞ்சத்தனமும் அதன்படி செயல்பட ஏவுவது போன்ற இரண்டு பண்புகளும் மோசமான பண்புகளாகும். நம்பிக்கையாளன் இவ்விரண்டையும்கொண்டு வர்ணிக்கப்பட மாட்டான்.

 
Mənaların tərcüməsi Surə: əl-Hədid
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq