Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Vers: (154) Surah / Kapitel: Al -I-‘Imrân
ثُمَّ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنْ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا یَّغْشٰی طَآىِٕفَةً مِّنْكُمْ ۙ— وَطَآىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ یَظُنُّوْنَ بِاللّٰهِ غَیْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِیَّةِ ؕ— یَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَیْءٍ ؕ— قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ؕ— یُخْفُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ مَّا لَا یُبْدُوْنَ لَكَ ؕ— یَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَیْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ— قُلْ لَّوْ كُنْتُمْ فِیْ بُیُوْتِكُمْ لَبَرَزَ الَّذِیْنَ كُتِبَ عَلَیْهِمُ الْقَتْلُ اِلٰی مَضَاجِعِهِمْ ۚ— وَلِیَبْتَلِیَ اللّٰهُ مَا فِیْ صُدُوْرِكُمْ وَلِیُمَحِّصَ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
3.154. இந்த வேதனைக்கும் நெருக்கடிக்கும் பிறகு அல்லாஹ் உங்கள்மீது நிம்மதியையும் நம்பிக்கையையும் இறக்கினான். அதனால் உங்களில் அவனுடைய வாக்குறுதியை உறுதியாக நம்பியவர்களை -அவர்களது உள்ளங்களில் உள்ள அமைதியினால்- சிறு தூக்கம் தழுவிக் கொண்டது. மற்றொரு பிரிவினருக்கு சிறு தூக்கமோ அமைதியோ ஏற்படவில்லை. அவர்கள்தாம் தங்களின் பாதுகாப்பு பற்றி மட்டுமே கவலைகொண்ட நயவஞ்சகர்கள். அவர்கள் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தார்கள். அல்லாஹ்வை மதிப்பிட வேண்டிய முறைப்படி மதிப்பிடாத இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள்போல அவன் தன் தூதருக்கோ அடியார்களுக்கோ உதவிபுரிய மாட்டான் என்று கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறியாத இந்த நயவஞ்சகர்கள், “போருக்குப் புறப்பட்டபோது எங்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருந்திருந்தால் நாங்கள் வெளியேறியிருக்க மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதரே! இவர்களிடம் நீர் கூறுவீராக, “அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவனே தான் நாடியதைக் கட்டளையிடுகிறான், தான் நாடியதை விதிக்கிறான். அவன்தான் நீங்கள் போருக்குப் புறப்பட வேண்டும் என்று விதித்தவனும்.” இந்த நயவஞ்சகர்கள் தங்கள் உள்ளங்களில் உம்மிடம் வெளிப்படுத்தாத சந்தேகத்தையும் கெட்ட எண்ணத்தையும் மறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: “போருக்குப் புறப்படும் விஷயத்தில் எங்களின் ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் நாங்கள் இந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்.” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “கொலைக்களத்தினை விட்டு தூரமாக உங்களின் வீடுகளில் நீங்கள் தங்கியிருந்தாலும் உங்களில் யாருக்கு அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டானோ அவர் தான் கொலைசெய்யப்படும் இடத்தினை நோக்கி புறப்பட்டே இருப்பார். உங்களின் உள்ளங்களிலுள்ள எண்ணங்களையும் நோக்கங்களையும் சோதிப்பதற்காகவும் அதிலுள்ள ஈமானையும் நயவஞ்சகத்தையும் பிரித்துக்காட்டுவதற்காவும் அல்லாஹ் இவ்வாறு விதித்துள்ளான். தன் அடியார்களின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• الجهل بالله تعالى وصفاته يُورث سوء الاعتقاد وفساد الأعمال.
1. அல்லாஹ்வைப் பற்றிய அறியாமை மனிதனிடம் தீய கொள்கையையும் மோசமான செயல்பாடுகளையும் உண்டாக்குகிறது.

• آجال العباد مضروبة محدودة، لا يُعجلها الإقدام والشجاعة، ولايؤخرها الجبن والحرص.
2. அடியார்களின் தவணை வரையறுக்கப்பட்டவையாகும். துணிவும் தைரியமும் அதனை விரைவுபடுத்திவிடாது. கோழைத்தனமும் பேராசையும் அதனைத் தாமதப்படுத்திவிடாது.

• من سُنَّة الله تعالى الجارية ابتلاء عباده؛ ليميز الخبيث من الطيب.
3. நல்லவர்களை தீயவர்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக அடியார்களை சோதிப்பது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

• من أعظم المنازل وأكرمها عند الله تعالى منازل الشهداء في سبيله.
4. தனது பாதையில் வீரமரணம் எய்தியவர்களின் அந்தஸ்து அல்லாஹ்விடம் மிக உயர்ந்த அந்தஸ்துகளில் ஒன்றாகும்.

 
Übersetzung der Bedeutungen Vers: (154) Surah / Kapitel: Al -I-‘Imrân
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Übersetzungen

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Schließen