Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore Yuusuf   Aaya:
وَمَا تَسْـَٔلُهُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ؕ— اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
12.104. -தூதரே!- அவர்கள் விளங்கியிருந்தால் உம்மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஏனெனில் நீர் குர்ஆனுக்கோ அவர்களை அழைக்கும் விஷயத்திற்கோ அவர்களிடம் எந்தக் கூலியையும் எதிர்பார்க்கவில்லை. குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அறிவுரையேயாகும்.
Faccirooji aarabeeji:
وَكَاَیِّنْ مِّنْ اٰیَةٍ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَمُرُّوْنَ عَلَیْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ۟
12.105. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றைக் குறித்து கவனம் செலுத்தாமலும் சிந்திக்காமலும் அவற்றைப் புறக்கணித்தவாறு அவர்கள் கடந்து சென்று விடுகிறார்கள். அவற்றை பற்றி அவர்கள் திரும்பி பார்ப்பதும் கிடையாது.
Faccirooji aarabeeji:
وَمَا یُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ۟
12.106. அல்லாஹ்தான் படைப்பாளன், வாழ்வாதாரம் அளிப்பவன், உயிர்பிப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதை மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொண்டாலும் அவர்கள் அல்லாஹ்வுடன் இணைத்து வேறு சிலைகளை வணங்குகின்றனர். அவனுக்கு பிள்ளை உண்டு என வாதிடுகின்றனர்.
Faccirooji aarabeeji:
اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِیَهُمْ غَاشِیَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
12.107. இந்த இணைவைப்பாளர்கள் தம்மால் தடுக்க முடியாத தம்மை வியாபிக்கும் அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகில் தங்களைத் தாக்கிவிடக் கூடும் என்பது குறித்து அச்சமற்று இருக்கிறார்களா? அல்லது மறுமை வருவதை உணர்ந்து அதற்குத் தயாராகுவதற்குக் கூட வாய்ப்புக் கிடைக்காமல், மறுமை நாள் அவர்களிடம் திடீரென வந்து விடுவதை அச்சமற்று இருக்கிறார்களா?. அதனால் தானா அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை?!
Faccirooji aarabeeji:
قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫— عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ— وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟
12.108. -தூதரே!- நீர் அழைக்கக் கூடியவரிடம் கூறுவீராக: “இது எனது வழி. இதன் பக்கம் தெளிவான ஆதாரத்துடன் நானும் என் வழிகாட்டுதலையும், வழிமுறையையும் பின்பற்றியவர்களும் மக்களை அழைக்கின்றோம். அவனது கண்ணியத்துக்குப் பொருத்தமற்ற அல்லது அவனது பூரணத்தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தும் அவனோடு இணைக்கப்பட்ட அனைத்தை விட்டும் நான் பரிசுத்தப்படுத்துகின்றேன். நான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவன் அல்ல. மாறாக நான் அவனை மட்டுமே ஒருமைப்படுத்தி வணங்கக்கூடியவன் ஆவேன்.
Faccirooji aarabeeji:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰی ؕ— اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اتَّقَوْا ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
12.109. -தூதரே!- உமக்கு முன் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். வானவர்களை அல்ல. உமக்கு வஹி அறிவித்தவாறே அவர்களுக்கு வஹி அறிவித்தோம். அவர்கள் நகரவாசிகளாக இருந்தார்கள். நாட்டுப்புறத்தவர்களாக அல்ல. அவர்களின் சமூகங்கள் அவர்களை நிராகரித்ததனால் நாம் அந்த சமூகங்களை அழித்து விட்டோம். உம்மை நிராகரிப்பவர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் படிப்பினை பெறவில்லையா? இவ்வுலகில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் இன்பங்களே சிறந்ததாகும். இதுதான் சிறந்தது என்பதை புரிந்து கொள்ளவில்லையா? எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி -அவற்றில் மிகப் பெரியது ஈமான் கொள்வது- அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவற்றில் மிகப் பெரியது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது, இறைவனை அஞ்சுங்கள்.
Faccirooji aarabeeji:
حَتّٰۤی اِذَا اسْتَیْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ— فَنُجِّیَ مَنْ نَّشَآءُ ؕ— وَلَا یُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟
12.110. நாம் அனுப்பிய தூதர்களின் எதிரிகளுக்கு நாம் அவகாசம் அளிக்கின்றோம். அவர்களை விட்டுப்பிடிப்பதற்காக தண்டனையை அவர்களுக்கு நாம் துரிதப்படுத்துவதில்லை. அவர்களை அழிப்பது தாமதமாகி விட்டால் அவர்களின் அழிவில் தூதர்கள் நம்பிக்கையிழந்து மறுத்தவர்களுக்கு தண்டனையும் முஃமின்களுக்கு பாதுகாப்பும் உண்டு என தூதர்கள் பொய்தான் கூறியுள்ளார்கள் என்று நிராகரிப்பாளர்கள் எண்ணும் போது நம் உதவி நம் தூதர்களை வந்தடைகிறது. நிராகரிப்பாளர்களைத் தாக்கும் வேதனையிலிருந்து நாம் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நாம் வேதனையை இறக்கும் போது குற்றம் செய்த சமூகத்தை விட்டும் அதனை தடுக்க முடியாது.
Faccirooji aarabeeji:
لَقَدْ كَانَ فِیْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِی الْاَلْبَابِ ؕ— مَا كَانَ حَدِیْثًا یُّفْتَرٰی وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ كُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
12.111. தூதர்கள் மற்றும் முந்தைய சமூகங்களின் சம்பவங்களிலும் யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் சம்பவங்களிலும் நல்ல அறிவுடைய மக்களுக்கு உபதேசம் இருக்கின்றது. அதனை உள்ளடக்கிய குர்ஆன் அல்லாஹ்வின் மீது பொய்யாக புனைந்து கூறப்பட்ட வாக்கல்ல. ஆனால் அது தனக்கு முன்னர் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவசியமான ஒவ்வொரு சட்டத்தையும் வழிமுறையையும் விவரிக்கக் கூடியதாகவும் நன்மையான விஷயங்களின் பக்கம் வழிகாட்டக் கூடியதாகவும் நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதிலிருந்து பயனடைவார்கள்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• أن الداعية لا يملك تصريف قلوب العباد وحملها على الطاعات، وأن أكثر الخلق ليسوا من أهل الهداية.
2. அழைப்பாளனால் உள்ளங்களைப் புரட்டவோ கீழ்ப்படியும்படி மக்களை நிர்ப்பந்திக்கவோ முடியாது. மக்களில் பெரும்பாலானோர் நேர்வழி பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.

• ذم المعرضين عن آيات الله الكونية ودلائل توحيده المبثوثة في صفحات الكون.
3. பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடக்கும் அல்லாஹ்வின் சான்றுகளையும் ஏகத்துவத்தின் ஆதாரங்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பவர்கள் இழிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

• شملت هذه الآية ﴿ قُل هَذِهِ سَبِيلِي...﴾ ذكر بعض أركان الدعوة، ومنها: أ- وجود منهج:﴿ أَدعُواْ إِلَى اللهِ ﴾. ب - ويقوم المنهج على العلم: ﴿ عَلَى بَصِيرَةٍ﴾. ج - وجود داعية: ﴿ أَدعُواْ ﴾ ﴿أَنَا﴾. د - وجود مَدْعُوِّين: ﴿ وَمَنِ اتَّبَعَنِي ﴾.
4. (இது என்னடைய வழி) எனும் வசனம் பிரச்சாரத்தின் சில கூறுகளைக் குறிப்பிட்டுள்ளது. ஒன்று வழிமுறை இருத்தல். (அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்). இரண்டு வழிமுறை அறிவின் படி அமைய வேண்டும். (அறிவுடன்) மூன்று பிரச்சாரகர் இருத்தல். (நான்) (அழைக்கிறேன்) நான்கு அழைக்கப்படுவோர் (என்னைப் பின்பற்றியோரும்).

 
Firo maanaaji Simoore: Simoore Yuusuf
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude