Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore wimmboolo hayre   Aaya:
قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّیْ ۚ— فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّیْ جَعَلَهٗ دَكَّآءَ ۚ— وَكَانَ وَعْدُ رَبِّیْ حَقًّا ۟ؕ
18.98. துல்கர்னைன் கூறினார்: “இந்தத் தடுப்பு என் இறைவனின் கருணையாகும். இது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கும் அவர்கள் பூமியில் குழப்பம் விழைவிப்பதற்கும் மத்தியில் தடையாக இருக்கின்றது. அதிலிருந்து அவர்களை தடுக்கிறது. மறுமை நாளுக்கு முன்னர் அவர்கள் வெளியாவதற்கு என் இறைவன் குறித்த நேரம் வந்துவிட்டால் அது பூமியோடு தரைமட்டமாகிவிடும். (அந்த மதில்) தரைமட்டமாகி யஃஜுஜ், மஃஜுஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். இதில் எந்த மாறுபாடும் இல்லை.
Faccirooji aarabeeji:
وَتَرَكْنَا بَعْضَهُمْ یَوْمَىِٕذٍ یَّمُوْجُ فِیْ بَعْضٍ وَّنُفِخَ فِی الصُّوْرِ فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۟ۙ
18.99. இறுதிக் காலத்தில் சில படைப்பினங்களை இன்னும் சிலருடன் கலந்ததாக நாம் ஆக்கிவிடுவோம். சூர் ஊதப்படும். விசாரிப்பதற்காகவும், கூலி வழங்கவும் நாம் படைப்பினங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.
Faccirooji aarabeeji:
وَّعَرَضْنَا جَهَنَّمَ یَوْمَىِٕذٍ لِّلْكٰفِرِیْنَ عَرْضَا ۟ۙ
18.100. நிராகரிப்பாளர்கள் நரகை களங்கம் இல்லாமல் நேரடியாகப் காண்பதற்காக நரகத்தை அவர்களுக்கு நாம் தெளிவாக வெளிப்படுத்துவோம்.
Faccirooji aarabeeji:
١لَّذِیْنَ كَانَتْ اَعْیُنُهُمْ فِیْ غِطَآءٍ عَنْ ذِكْرِیْ وَكَانُوْا لَا یَسْتَطِیْعُوْنَ سَمْعًا ۟۠
18.101. உலகில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் குருடர்களாக இருந்த நிராகரிப்பாளர்களுக்காக அதனை வெளிப்படுத்துவோம். அதனை விட்டும் தடுக்கும் திரை அவர்களது கண்களில் காணப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க சக்திபெற்றவர்களாக இருக்கவில்லை.
Faccirooji aarabeeji:
اَفَحَسِبَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ یَّتَّخِذُوْا عِبَادِیْ مِنْ دُوْنِیْۤ اَوْلِیَآءَ ؕ— اِنَّاۤ اَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِیْنَ نُزُلًا ۟
18.102. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் என்னைவிடுத்து, என் அடியார்களான தூதர்களையும், வானவர்களையும், ஷைத்தான்களையும் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? நாம் நிராகரிப்பாளர்களுக்காக நரகத்தை தங்குமிடமாக தயார்படுத்தியுள்ளோம்.
Faccirooji aarabeeji:
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْاَخْسَرِیْنَ اَعْمَالًا ۟ؕ
18.103. -தூதரே!- நீர் கேட்பீராக: -மக்களே- “தனது செயல்களினால் மக்களில் அதிக இழப்பிற்குரியவர் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”
Faccirooji aarabeeji:
اَلَّذِیْنَ ضَلَّ سَعْیُهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَهُمْ یَحْسَبُوْنَ اَنَّهُمْ یُحْسِنُوْنَ صُنْعًا ۟
18.104. அவர்கள் மறுமை நாளில் இவ்வுலகில் செய்த தங்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுவதைக் காண்பார்கள். தமது நடவடிக்கையில் அவர்கள் நல்லவர்களே எனவும் தமது செயல்களினால் பயன்பெறலாம் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையோ அதற்கு மாற்றமாகும்.
Faccirooji aarabeeji:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ وَلِقَآىِٕهٖ فَحَبِطَتْ اَعْمَالُهُمْ فَلَا نُقِیْمُ لَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ وَزْنًا ۟
18.105. அவர்கள்தாம் தங்களின் இறைவன் ஒருவனே என்று அறிவிக்கக்கூடிய அவனுடைய சான்றுகளையும் மறுமையில் அவனை சந்திப்பதையும் நிராகரித்தார்கள். அவர்கள் அவற்றை நிராகரித்ததனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது.
Faccirooji aarabeeji:
ذٰلِكَ جَزَآؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوْا وَاتَّخَذُوْۤا اٰیٰتِیْ وَرُسُلِیْ هُزُوًا ۟
18.106. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நான் இறக்கிய வசனங்களையும் எனது தூதர்களையும் பரிகாசமாக எடுத்துக் கொண்டதனால் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டுள்ள கூலி நரகமே.
Faccirooji aarabeeji:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۟ۙ
18.107. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு அவர்களைக் கௌரவிக்கும் விதமாக உயர்ந்த சுவனங்களை தங்குமிடமாகப் பெறுவார்கள்.
Faccirooji aarabeeji:
خٰلِدِیْنَ فِیْهَا لَا یَبْغُوْنَ عَنْهَا حِوَلًا ۟
18.108. அவர்கள் என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள். அவர்கள் அங்கிருந்து மாறுவதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் நிச்சயமாக அதற்கு ஈடான கூலியே கிடையாது.
Faccirooji aarabeeji:
قُلْ لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمٰتِ رَبِّیْ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ اَنْ تَنْفَدَ كَلِمٰتُ رَبِّیْ وَلَوْ جِئْنَا بِمِثْلِهٖ مَدَدًا ۟
18.109. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவனின் வார்த்தைகள் ஏராளமானவை. அவனுடைய வார்த்தைகளை எழுதுவதற்கு கடலிலுள்ள நீர் அனைத்தும் மையாக இருந்தாலும் அவனுடைய வார்த்தைகள் முடிவடைவதற்கு முன்னரே கடலில் நீர் தீர்ந்துவிடும், அதனுடன் வேறு கடல்களையும் சேர்த்துக் கொண்டால் அவையும் தீரந்துவிடும்.”
Faccirooji aarabeeji:
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَمَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ رَبِّهٖ فَلْیَعْمَلْ عَمَلًا صَالِحًا وَّلَا یُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا ۟۠
18.110. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக “உண்மையாக வணக்கத்திற்குரிய உங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை” என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது. எனவே தம் இறைவனின் சந்திப்பைக் குறித்து அஞ்சுபவர் அவனுடைய மார்க்கத்தின்படி அமல் புரியட்டும், அதிலே தனது இறைவனின் மீது உளத்தூய்மையோடு இருக்கட்டும். வணக்க வழிபாட்டில் தன் இறைவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிட வேண்டாம்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• إثبات البعث والحشر بجمع الجن والإنس في ساحات القيامة بالنفخة الثانية في الصور.
1. இரண்டாவது முறை சூர் ஊதப்படும் போது மனிதர்கள், ஜின்கள் அனைவரும் மறுமை மைதானத்தில் ஒன்று சேர்க்கப்படுவதன் மூலம் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும், ஒன்று திரட்டுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

• أن أشد الناس خسارة يوم القيامة هم الذين ضل سعيهم في الدنيا، وهم يظنون أنهم يحسنون صنعًا في عبادة من سوى الله.
2. நிச்சயமாக மறுமை நாளில் யாருடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுமோ அவர்கள்தாம் இவ்வுலகில் மனிதர்களில் அதிக இழப்பிற்குரியவர்கள். அவர்கள் நற்செயல் செய்வதாக நினைத்துக்கொண்டு அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்கினார்கள்.

• لا يمكن حصر كلمات الله تعالى وعلمه وحكمته وأسراره، ولو كانت البحار والمحيطات وأمثالها دون تحديد حبرًا يكتب به.
3. அல்லாஹ்வின் வார்த்தைகளையும், அறிவையும், நுணுக்கத்தையும், இரகசியங்களையும் வரையறுத்துவிட முடியாது. கடல்களும், சமுத்திரங்களும் அவற்றைப் போன்றவையும் வரையறையின்றி மையாக இருந்து எழுதப்பட்டாலும் சரியே.

 
Firo maanaaji Simoore: Simoore wimmboolo hayre
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude