Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore nagge   Aaya:
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
2.270. அல்லாஹ்வின் திருப்தியை நாடி குறைவாகவோ நிறைவாகவோ நீங்கள் செலவுசெய்த செலவீனங்கள் அல்லது உங்கள் மீது கடமையில்லாத ஒரு வணக்கத்தை நீங்களாகவே உங்கள் மீது விதித்து நேர்ச்சை செய்தவைகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் வீணாகிவிடாது. அவன் உங்களுக்கு மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவான். தம்மீது கடமையானவற்றை வழங்காத அநியாயக்காரர்களுக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களுக்கும் மறுமைநாளில் வேதனையிலிருந்து காக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
Faccirooji aarabeeji:
اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ— وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— وَیُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَیِّاٰتِكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
2.271. நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படுத்தினால் அதுவும் நல்லதுதான். நீங்கள் அவற்றை மறைமுகமாக ஏழைகளுக்கு வழங்கினால் அது வெளிப்படையாகச் செய்வதைக் காட்டிலும் சிறந்ததாகும். அதுதான் உளத்தூய்மைக்கு மிகவும் நெருக்கமானது. உளத்தூய்மையுடன் செய்யப்படும் தர்மங்கள் பாவங்களுக்குத் திரையாகவும் மன்னிப்பாகவும் அமைந்துவிடுகின்றன. அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Faccirooji aarabeeji:
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ— وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
2.272. தூதரே! அவர்களுக்கு நேர்வழிகாட்டி, அதற்கு அவர்களைப் பணிய வைப்பது உம்முடைய கடமையல்ல. சத்தியத்தை எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும். பாக்கியம் அளித்து நேர்வழிகாட்டுவது அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். நீங்கள் செய்த தர்மங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான் பயனளிக்கும். அல்லாஹ் அதனை விட்டும் தேவையற்றவன். நீங்கள் செய்யும் செலவுகள் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்கட்டும். அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் அவனது திருப்திக்காகவே செலவுசெய்வார்கள். சிறியதோ பெரியதோ நீங்கள் செய்த தர்மத்திற்கான கூலியை குறைவின்றி நிறைவாகப் பெறுவீர்கள். அல்லாஹ் எவர்மீதும் அநீதி இழைத்துவிட மாட்டான்.
Faccirooji aarabeeji:
لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ— یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ— تَعْرِفُهُمْ بِسِیْمٰىهُمْ ۚ— لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠
2.273. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (போர்) செய்வதனால் வாழ்வாதாரம் தேடுவதற்கு பயணம் மேற்கொள்ளமுடியாத ஏழைகளுக்குச் செலவுசெய்யுங்கள். அவர்கள் மக்களிடம் கையேந்தாமல் தன்மானத்தோடு இருப்பதால் அறியாதவன் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணிவிடுவான். அவர்களது உடலிலும் உடையிலும் தென்படும் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அவர்களைக் காண்பவர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மற்ற ஏழைகளைப்போல மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். செல்வம் மற்றும் அது அல்லாத எதை நீங்கள் செலவுசெய்தாலும் அல்லாஹ் அதனை நன்கறிந்தவன். அதற்காக அவன் உங்களுக்குப் பெரும் கூலியை வழங்கிடுவான்.
Faccirooji aarabeeji:
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ
2.274. இரவிலும் பகலிலும், வெளிப்படையாகவும் மறைவாகவும் வெளிப்பகட்டிற்காக அன்றி அல்லாஹ்வின் திருப்திக்காக செலவு செய்பவர்களுக்கு மறுமைநாளில் அவர்களின் இறைவனிடம் நன்மை இருக்கின்றது. எதிர்காலத்தில் நிகழக்கூடியதை எண்ணி அவர்கள் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளும் கிருபையும் ஆகும்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• إذا أخلص المؤمن في نفقاته وصدقاته فلا حرج عليه في إظهارها وإخفائها بحسب المصلحة، وإن كان الإخفاء أعظم أجرًا وثوابًا لأنها أقرب للإخلاص.
1. நம்பிக்கையாளன் தான் செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே ஆக்கிக் கொண்டால் பொதுநலவைக்கருத்திற்கொண்டு அவற்றை வெளிப்படையாகச் செய்வதிலோ மறைமுகமாகச் செய்வதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆயினும் தர்மங்களை மறைவாகச் செய்வது அதிக நன்மையையும் கூலியையும் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் அதுவே மனத்தூய்மைக்கு நெருக்கமானதாகும்.

• دعوة المؤمنين إلى الالتفات والعناية بالمحتاجين الذين تمنعهم العفة من إظهار حالهم وسؤال الناس.
2. தன்மானத்தால் மக்களிடம் கையேந்தாமல் தவிர்ந்திருக்கும் ஏழைகளின்பக்கம் கவனம் செலுத்தும்படி நம்பிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

• مشروعية الإنفاق في سبيل الله تعالى في كل وقت وحين، وعظم ثوابها، حيث وعد تعالى عليها بعظيم الأجر في الدنيا والآخرة.
3. அனைத்து நிலமைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப்பெரும் நன்மைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

 
Firo maanaaji Simoore: Simoore nagge
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude