Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore goongɗinɓe   Aaya:
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟ؕ
23.43. மறுக்கும் இந்த சமூகங்களில் எந்த சமூகமும் தங்களுக்கு வரும் அழிவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முந்தவும் முடியாது, அவர்கள் பலவகையான சாதனங்களைப் பெற்றிருந்தபோதிலும் பிந்தவும் முடியாது.
Faccirooji aarabeeji:
ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ؕ— كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ ۚ— فَبُعْدًا لِّقَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
23.44. பின்னர் நாம் நம் தூதர்களை ஒவ்வொருவராக தொடர்ந்து அனுப்பினோம். எந்தவொரு சமுதாயத்துக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் பொய்ப்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனவே நாம் அந்த சமூகங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிட்டோம். அவர்களைப் பற்றிய மக்கள் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களின் எந்த ஒன்றும் எஞ்சவில்லை. தூதர்கள் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு அழிவு உண்டாகட்டும்.
Faccirooji aarabeeji:
ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰی وَاَخَاهُ هٰرُوْنَ ۙ۬— بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
23.45. பின்னர் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் ஒன்பது சான்றுகளுடனும் தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம். (ஒன்பது சான்றுகள்: கைத்தடி, கை, வெட்டுக்கிளி, பேன்கள், தவளைகள், இரத்தம், வெள்ளம், பஞ்சம், விளைச்சல்களின் குறைபாடு என்பனவாகும்)
Faccirooji aarabeeji:
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِیْنَ ۟ۚ
23.46. அவர்கள் இருவரையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனின் சமூகத்தின் தலைவர்களின்பால் அனுப்பினோம். அவர்கள் கர்வம் கொண்டார்கள். அவர்கள் இருவரின்மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் மக்களின் மீது ஆதிக்கம், அநீதி என்பவற்றினால் மக்களை அடக்குமுறை செய்வோராக இருந்தார்கள்.
Faccirooji aarabeeji:
فَقَالُوْۤا اَنُؤْمِنُ لِبَشَرَیْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عٰبِدُوْنَ ۟ۚ
23.47. அவர்கள் கூறினார்கள்: “எங்களை விட மேலதிகமான எந்தச் சிறப்பையும் பெறாத எங்களைப் போன்ற இரு மனிதர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? அவ்விருவரின் சமூகமான இஸ்ரவேல் மக்களும் நமக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் பணிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.”
Faccirooji aarabeeji:
فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَكِیْنَ ۟
23.48. அவர்கள் இருவரும் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை அவர்கள் பொய்ப்பித்தார்கள். அவர்களின் அந்நிராகரிப்பின் காரணத்தினால் மூழ்கடித்து அழிக்கப்பட்டவர்களாகிவிட்டனர்.
Faccirooji aarabeeji:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
23.49. மூஸாவின் சமூகத்தார் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்று அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நாம் அவருக்கு தவ்ராத்தை வழங்கினோம்.
Faccirooji aarabeeji:
وَجَعَلْنَا ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗۤ اٰیَةً وَّاٰوَیْنٰهُمَاۤ اِلٰی رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِیْنٍ ۟۠
23.50. ஈஸாவையும் அவரது தாய் மர்யமையும் நம்முடைய வல்லமையை அறிவிக்கும் சான்றாக ஆக்கினோம். அவள் தந்தையின்றி ஈஸாவை வயிற்றில் சுமந்தாள். நாம் பூமியின் உயரமான இடத்தில் அவர்கள் இருவரையும் ஒதுங்கவைத்தோம். அது வசிப்பதற்கு உகந்த தரைமட்டமான தொடராக ஓடும் நீருள்ள இடமாக இருந்தது.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ— اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟ؕ
23.51. தூதர்களே! நான் உங்களுக்கு அனுமதித்த தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். மார்க்கம் கூறும் நற்செயல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் நான் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை.
Faccirooji aarabeeji:
وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ ۟
23.52. -தூதர்களே!- உங்களின் மார்க்கம் இஸ்லாம் என்னும் ஒரே மார்க்கம்தான். நான் உங்களின் இறைவனாவேன். என்னைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. எனவே என் கட்டளைகளைச் செயல்படுத்தி நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.
Faccirooji aarabeeji:
فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ زُبُرًا ؕ— كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَیْهِمْ فَرِحُوْنَ ۟
23.53. அவர்களுக்குப் பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்தில் கருத்துவேறுபட்டு தங்களிடையே பல பிரிவினர்களாகி விட்டார்கள். ஒவ்வொரு கூட்டமும் தான் பின்பற்றும் மார்க்கமே அல்லாஹ்வுக்குப் பிடித்தமான மார்க்கம் என்று திருப்திப்பட்டுக்கொள்கிறது. மற்றவர்களிடம் உள்ளவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
Faccirooji aarabeeji:
فَذَرْهُمْ فِیْ غَمْرَتِهِمْ حَتّٰی حِیْنٍ ۟
23.54. -தூதரே!- அவர்கள் மீது வேதனை இறங்கும் நேரம் வரை அவர்களை அறியாமையிலும் தடுமாற்றத்திலும் விட்டுவிடுவீராக.
Faccirooji aarabeeji:
اَیَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِیْنَ ۟ۙ
23.55,56. தங்களிடம் உள்ளதைக்கொண்டு பூரிப்படையும் இந்த கூட்டத்தினர் இவ்வுலக வாழ்வில் நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களும் பிள்ளைகளும் தமக்குக் கிடைக்கவேண்டிய நன்மை விரைவாக வழங்கப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். நாம் அவர்களுக்கு அவகாசம் அளித்து, அவர்களை விட்டுப்பிடிக்கும் பொருட்டே நாம் அவர்களுக்கு இவற்றையெல்லாம் அளிக்கின்றோம். ஆனாலும் அவர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.
Faccirooji aarabeeji:
نُسَارِعُ لَهُمْ فِی الْخَیْرٰتِ ؕ— بَلْ لَّا یَشْعُرُوْنَ ۟
23.55,56. தங்களிடம் உள்ளதைக்கொண்டு பூரிப்படையும் இந்த கூட்டத்தினர் இவ்வுலக வாழ்வில் நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களும் பிள்ளைகளும் தங்களுக்குக் கிடைத்த விரைவான நன்மை என்று எண்ணுகிறார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கும் பொருட்டு, அவர்களைப் படிப்படியாக தண்டிக்கும் பொருட்டே நாம் அவர்களுக்கு இவற்றையெல்லாம் அளிக்கின்றோம். ஆனாலும் அவர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.
Faccirooji aarabeeji:
اِنَّ الَّذِیْنَ هُمْ مِّنْ خَشْیَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۙ
23.57. நிச்சயமாக யார் நம்பிக்கைகொண்டு, நல்லுபகாரம் செய்து கொண்டும் தங்கள் இறைவனை அஞ்சுகிறார்களோ,
Faccirooji aarabeeji:
وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟ۙ
23.58. யார் அவனது வேதத்தின் வசனங்களை நம்புகிறார்களோ,
Faccirooji aarabeeji:
وَالَّذِیْنَ هُمْ بِرَبِّهِمْ لَا یُشْرِكُوْنَ ۟ۙ
23.59. யார் தங்கள் இறைவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குகிறார்களோ,
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• الاستكبار مانع من التوفيق للحق.
1. கர்வம் சத்தியத்தை அடைந்துகொள்வதற்குத் தடையாக இருக்கின்றது.

• إطابة المأكل له أثر في صلاح القلب وصلاح العمل.
2. உணவில் தூய்மையைப் பேணுவது உள்ளம் மற்றும் செயல்களின் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும்.

• التوحيد ملة جميع الأنبياء ودعوتهم.
3. ஓரிறைக் கொள்கையே நபிமார்கள் அனைவரின் மார்க்கமும், அழைப்புமாகும்.

• الإنعام على الفاجر ليس إكرامًا له، وإنما هو استدراج.
4. தீயவருக்கு அருள் புரிவது அவனுக்கு மரியாதையல்ல. அது அவனை விட்டுப்பிடிப்பதே.

 
Firo maanaaji Simoore: Simoore goongɗinɓe
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude