Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore Lukmaan   Aaya:
اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَسْبَغَ عَلَیْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ؕ— وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟
31.20. -மனிதர்களே!- வானங்களிலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றையும் பூமியிலுள்ள உயிரினங்கள், செடிகொடிகள், தாவரங்கள் ஆகியவற்றையும் அல்லாஹ் உங்களின் பயன்பாட்டிற்காக இலகுவாக்கித் தந்துள்ளான் என்பதையும் உங்களின் மீது கண்ணுக்கு தெரியும் வெளிப்படையான அழகிய தோற்றம் அமைப்பு போன்ற தன் அருட்கொடைகளையும் அந்தரங்கமான பகுத்தறிவு, கல்வி போன்ற தன் அருட்கொடைகளையும் முழுமைப்படுத்தியுள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இந்த அருட்கொடைகளுக்குப் பின்னரும் மக்களில் அல்லாஹ்விடமிருந்து வஹி சார்ந்த அறிவோ, அல்லது சிறந்த புத்தியோ, அல்லது அவனிடமிருந்து இறங்கிய தெளிவான வேதமோ இன்றி அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் தர்க்கம் செய்கிறார்கள்.
Faccirooji aarabeeji:
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ الشَّیْطٰنُ یَدْعُوْهُمْ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟
31.21. அல்லாஹ்வின் ஏகத்துவம் சம்பந்தமாக தர்க்கம் செய்யும் இவர்களிடம், “அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியதைப் பின்பற்றுங்கள்” என்று கூறப்பட்டால், “நாங்கள் அதனைப் பின்பற்ற மாட்டோம். மாறாக எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் பெற்றுக்கொண்ட சிலை வணக்கத்தையே பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். -சிலை வணக்கத்தினால் அவர்களை வழிகெடுப்பதன் மூலம்- அவர்களை மறுமை நாளின் நரக வேதனையின் பால் ஷைத்தான் அழைத்தாலும் அவர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவார்களா?
Faccirooji aarabeeji:
وَمَنْ یُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَی اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ؕ— وَاِلَی اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
31.22. யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்க வழிபாட்டை உரித்தாக்கி அமல்களை நல்ல முறையில் செய்து அவன்பால் முன்னோக்கினாரோ அவர், தப்ப விரும்பும் ஒருவர் பற்றிப்பிடிக்கும் உறுதியான கயிற்றை பலமாகப் பற்றிக்கொண்டார். ஏனெனில் அது அறுபட்டு விடுமோ என அஞ்சவேண்டியதில்லை எனும் அளவுக்கு உறுதியானதாகும். விவகாரங்கள் அனைத்தின் முடிவும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. எனவே அவன் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான்.
Faccirooji aarabeeji:
وَمَنْ كَفَرَ فَلَا یَحْزُنْكَ كُفْرُهٗ ؕ— اِلَیْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
31.23. -தூதரே!- அல்லாஹ்வை நிராகரிப்பவரின் நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அவர்கள் உலகில் செய்த தீய செயல்களைக்குறித்து நாம் அவர்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப அவர்களுக்குத் கூலி வழங்குவோம். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளதை நன்கறியக்கூடியவன். அவற்றில் உள்ள எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Faccirooji aarabeeji:
نُمَتِّعُهُمْ قَلِیْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰی عَذَابٍ غَلِیْظٍ ۟
31.24. நாம் அவர்களுக்கு இவ்வுலகில் அளிக்கும் இன்பங்களைக் கொண்டு சிறிதுகாலம் வரை அவர்களை அனுபவிக்கச் செய்வோம். பின்னர் கடுமையான வேதனையான நெருப்பு வேதனையில் அவர்களைத் தள்ளிவிடுவோம்.
Faccirooji aarabeeji:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
31.25. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம், “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால் “அல்லாஹ்தான்” என்று அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கு எதிராக ஆதாரத்தை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவர்களில் பெரும்பாலானோர் அறியாமையினால் புகழுக்குரியவனை அறியாமல் இருக்கிறார்கள்.
Faccirooji aarabeeji:
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
31.26. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து அதிகாரம் செலுத்தி திட்டமிடும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. நிச்சயமாக அவன் தன் படைப்புகள் அனைத்தையும் விட்டுத் தேவையற்றவனாகவும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழப்பட்டவனாகவும் இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
وَلَوْ اَنَّمَا فِی الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ یَمُدُّهٗ مِنْ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
31.27. நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு எழுதுகோல்களாக ஆக்கப்பட்டு கடலும் அதனோடு இன்னும் ஏழு கடல்களும் மையாக மாறினாலும் கூட அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. ஏனெனில் அவற்றுக்கு முடிவு இல்லை. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்மிடலில் அவன் ஞானம் மிக்கவன்.
Faccirooji aarabeeji:
مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
31.28. -மனிதர்களே!- உங்களைப் படைப்பதும் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதும் ஒரு உயிரை படைப்பதும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது போன்ற இலகுவானதுதான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கக்கூடியவன். ஒரு சப்தத்தை செவியுறுவதற்கு மற்றொரு சப்தம் அவனுக்கு இடையூறாக இருக்காது. அவன் பார்க்கக்கூடியவன். ஒன்றைப் பார்க்கும் போது மற்றொன்று அவனுக்கு இடையூறாக இருக்காது. இவ்வாறே ஒருவரைப் படைப்பதும் அவரை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும் மற்றவரைப் படைப்பதற்கும் அவரை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் இடையூறாக அமையாது.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• نعم الله وسيلة لشكره والإيمان به، لا وسيلة للكفر به.
1. அல்லாஹ்வின் அருட்கொடைகள் நன்றி செலுத்துவதற்கும் நம்பிக்கைகொள்வதற்கும் காரணமாக அமைய வேண்டுமே அன்றி அவனை நிராகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது.

• خطر التقليد الأعمى، وخاصة في أمور الاعتقاد.
2. குருட்டுத்தனமாக பின்பற்றுவதன் தீய விளைவு தெளிவாகிறது. குறிப்பாக நம்பிக்கை விடயத்தில்.

• أهمية الاستسلام لله والانقياد له وإحسان العمل من أجل مرضاته.
3. அல்லாஹ்வுக்கு அடிபணிவது மற்றும் அவனுடைய திருப்திக்காக நற்செயல்கள் புரிவதன் அவசியம் தெளிவாகிறது.

• عدم تناهي كلمات الله.
4. அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் முடிவடையாதவை.

 
Firo maanaaji Simoore: Simoore Lukmaan
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude