Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore harminde (tahriim)   Aaya:

அத்தஹ்ரீம்

Ina jeyaa e payndaale simoore ndee:
الدعوة إلى إقامة البيوت على تعظيم حدود الله وتقديم مرضاته وحده.
அல்லாஹ்வின் வரம்புகளை மதித்து அவனது திருப்பொருத்தத்தை மாத்திரம் முற்படுத்துவதன் அடிப்படையில் குடும்பங்களை நிலைநிறுத்துவதற்கு அழைப்பு விடுத்தலும்

یٰۤاَیُّهَا النَّبِیُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكَ ۚ— تَبْتَغِیْ مَرْضَاتَ اَزْوَاجِكَ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
66.1. தூதரே! அல்லாஹ் உமக்கு அனுமதித்த அடிமைப் பெண் மாரியாவை அனுபவிப்பதை ஏன் தடைசெய்து கொள்கிறீர்? இதன்மூலம் ரோஷம் கொண்ட உம் மனைவியரைத் திருப்திப்படுத்த விரும்புகிறீரா? அல்லாஹ் உம்மை மன்னிக்கக்கூடியவனாகவும் உம்மீது மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
قَدْ فَرَضَ اللّٰهُ لَكُمْ تَحِلَّةَ اَیْمَانِكُمْ ۚ— وَاللّٰهُ مَوْلٰىكُمْ ۚ— وَهُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
66.2. அல்லாஹ் உங்களுக்காக, நீங்கள் சத்தியத்தை முறித்துக்கொள்ள விரும்பினால் அதற்கான பரிகாரத்தை விதித்துள்ளான். அல்லாஹ்வே உங்களுக்கு உதவி செய்யக்கூடியவன். அவன் அடியார்களுக்கு நன்மைதரக்கூடியதை நன்கறிந்தவனாகவும் தான் அமைத்த சட்டங்களில், விதிகளில் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
وَاِذْ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعْضِ اَزْوَاجِهٖ حَدِیْثًا ۚ— فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَیْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ ۚ— فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا ؕ— قَالَ نَبَّاَنِیَ الْعَلِیْمُ الْخَبِیْرُ ۟
66.3. அல்லாஹ்வின் தூதர் ஹப்ஸாவிடம் பிரத்தியேகமாக, நிச்சயமாக தன் அடிமைப் பெண் மாரியாவை இனி நெருங்கப்போவதில்லை என்று கூறியதை நினைவு கூர்வீராக! ஹப்ஸா அத்தகவலை ஆயிஷாவிடம் தெரிவித்தார். அல்லாஹ் தன் தூதருக்கு அவரது இரகசியம் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிவித்த போது அவர் ஹப்ஸாவைக் கண்டித்து அவர் கூறியவற்றில் சிலதைக் கூறிக்காட்டினார். இன்னும் சிலதைக் கூறவில்லை. அதற்கு ஹப்ஸா அவரிடம், “உங்களுக்கு யார் இதனை அறிவித்தது” என்று கேட்டார். அதற்கு தூதர், “அனைத்தையும் நன்கறிந்தவனும் மறைவான அனைத்தையும் அறிந்தவனுமான அல்லாஹ்தான் அறிவித்தான்” என்று கூறினார்.
Faccirooji aarabeeji:
اِنْ تَتُوْبَاۤ اِلَی اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا ۚ— وَاِنْ تَظٰهَرَا عَلَیْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِیْلُ وَصَالِحُ الْمُؤْمِنِیْنَ ۚ— وَالْمَلٰٓىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِیْرٌ ۟
66.4. உங்கள் இருவர் மீதும் பாவமன்னிப்புக் கோருவது கடமையாகும். ஏனெனில், தன் அடிமைப் பெண்ணைப் பிரிந்து அவளை தன் மீது தடைசெய்துகொள்ளும் அல்லாஹ்வின் தூதர் வெறுக்கும் விடயத்தை உங்கள் இருவரின் உள்ளங்களும் விரும்பின. நீங்கள் இருவரும் மீண்டும் அவரைத் தூண்டிவிடுவதைத் தொடர்ந்தால் நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரின் நேசனும் உதவியாளனுமாவான். ஜிப்ரீலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையாளர்களும் அவரின் உதவியாளர்களாகவும் நேசர்களாகவும் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாகவும் அவரை நோவினை செய்வோருக்கெதிராக உதவுவோராகவும் உள்ளனர்.
Faccirooji aarabeeji:
عَسٰی رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ یُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَیْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓىِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓىِٕحٰتٍ ثَیِّبٰتٍ وَّاَبْكَارًا ۟
66.5. அவரது இறைவன் தன் தூதர் உங்களை விவாகரத்து செய்துவிட்டால் உங்களை விட சிறந்த மனைவியரை தன் தூதருக்கு வழங்கலாம். அந்த மனைவியர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாகவும், அவனுக்கு வழிப்படுபவர்களாகவும் தம் பாவங்களிலிருந்து மன்னிப்புக்கோரக்கூடியவர்களாகவும், இறைவனை வணங்கக்கூடியவர்களாவும், நோன்பு நோற்கக்கூடியவர்களாவும், விதவைகளாகவும், யாருமே தீண்டாத கன்னியர்களாகவும் இருப்பார்கள். ஆயினும் தூதர் அவர்களை விவாகரத்து செய்யவில்லை.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِیْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَیْهَا مَلٰٓىِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟
66.6. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடுமையான (நரக) நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். அது மனிதர்களாலும் கற்களாலும் எரிக்கப்படுகிறது. அந்த நெருப்பின் மீது கடுமையான வானவர்கள் இருக்கிறார்கள். அதில் நுழைபவர்களுடன் கடுமையாக இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில்லை. எவ்வித தயக்கமுமின்றி தங்களுக்கு அவன் இடும் கட்டளைகளை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْیَوْمَ ؕ— اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
66.7. மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடம் கூறப்படும்: “அல்லாஹ்வை நிராகரித்தவர்களே! இன்றைய தினம் நீங்கள் செய்த நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களுக்காக சாக்குப்போக்குகள் கூறாதீர்கள். உங்களின் சாக்குப்போக்குகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. நிச்சயமாக இன்றைய தினம், உலகில் நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதரையும் பொய்ப்பித்து செயற்பட்டதற்கே கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• مشروعية الكَفَّارة عن اليمين.
1. சத்தியத்தை முறித்ததற்கு பரிகாரம் விதித்தல்.

• بيان منزلة النبي صلى الله عليه وسلم عند ربه ودفاعه عنه.
2. இறைவனிடத்தில் நபியவர்களின் அந்தஸ்ததையும் அவரை அவன் பாதுகாத்தமையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• من كرم المصطفى صلى الله عليه وسلم مع زوجاته أنه كان لا يستقصي في العتاب فكان يعرض عن بعض الأخطاء إبقاءً للمودة.
3. தனது மனைவிமார்களுடனான நபியவர்களின் நற்பண்பின் விளைவாகவே முழுமையாக கடிந்துகொள்ளவில்லை. அன்பைப் பேணும் விதமாக சில தவறுகளைப் புறக்கணிப்பவர்களாக இருந்தார்.

• مسؤولية المؤمن عن نفسه وعن أهله.
4. நம்பிக்கையாளன் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பொறுப்பாளனாவான்.

 
Firo maanaaji Simoore: Simoore harminde (tahriim)
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude