Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (38) Simoore: Simoore anfaali
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّنْتَهُوْا یُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ ۚ— وَاِنْ یَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِیْنَ ۟
8.38. -தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த உம் சமூகத்தாரிடம் கூறுவீராக: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர்கள் நிராகரிக்காமல், நம்பிக்கைகொண்டவர்களை அவனுடைய பாதையை விட்டுத் தடுக்காமல் அவர்கள் விலகிக் கொண்டால் அல்லாஹ் அவர்கள் முன்னர் செய்த பாவங்களை மன்னித்துவிடுவான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது முந்தைய பாவங்களை அழித்துவிடக் கூடியதாகும் அவர்கள் நிராகரிப்பின் பக்கம் மீண்டும் திரும்பினால், முந்தைய சமூகங்களுக்கான அல்லாஹ்வின் வழிமுறையே செல்லுபடியாகும். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்த போது அல்லாஹ் அவர்களை துரிதமாகத் தண்டித்தான்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• الصد عن المسجد الحرام جريمة عظيمة يستحق فاعلوه عذاب الدنيا قبل عذاب الآخرة.
1. மஸ்ஜிதுல் ஹராமை விட்டு மக்களைத் தடுப்பது மிகப் பெரிய குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மறுவுலகில் தண்டனை பெற முன் இவ்வுலகிலேயே தண்டனைக்குத் தகுதியானவர்கள்.

• عمارة المسجد الحرام وولايته شرف لا يستحقه إلّا أولياء الله المتقون.
2. மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பது பெரும் பேறாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடிய அவனுடைய நேசர்களே அதற்குத் தகுதியானவர்களாவர்.

• في الآيات إنذار للكافرين بأنهم لا يحصلون من إنفاقهم أموالهم في الباطل على طائل، وسوف تصيبهم الحسرة وشدة الندامة.
3. அசத்தியப் பாதையில் தாம் செலவு செய்யும் செல்வங்களால் எதையும் பெற மாட்டார்கள். அதனால் இழப்பிற்கும் கடுமையான வருத்தத்திற்கும் அவர்கள் ஆளாவார்கள் என நிராகரிப்பாளர்களுக்கு மேற்கூறிய வசனங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

• دعوة الله تعالى للكافرين للتوبة والإيمان دعوة مفتوحة لهم على الرغم من استمرار عنادهم.
4. நிராகரிப்பாளர்கள் பிடிவாதத்தில் நிலைத்திருந்தாலும் கூட பாவமன்னிப்புக் கோருவதற்கும் நம்பிக்கை கொள்வதற்குமான, அவர்களுக்கான அல்லாஹ்வின் அழைப்பு திறந்தே உள்ளது.

• من كان الله مولاه وناصره فلا خوف عليه، ومن كان الله عدوًّا له فلا عِزَّ له.
5. யாருக்கு அல்லாஹ் பாதுகாவலனாகவும் உதவியாளனாகவும் இருக்கின்றானோ அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. யாருக்கு அல்லாஹ் பகைவனாகிவிட்டானோ அவனுக்கு எந்த கண்ணியமும் இல்லை.

 
Firo maanaaji Aaya: (38) Simoore: Simoore anfaali
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude