Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Alhijr   Aya:
الَّذِیْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِیْنَ ۟
15.91. அவர்கள் குர்ஆனை பல பிரிவுகளாக மாற்றினார்கள். இவை சூனியம், இவை ஜோதிடம், இவை கவிதை என்றும் அவர்கள் கூறினார்கள்.
Tafsiran larabci:
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.92. -தூதரே!- உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக மறுமை நாளில் அதனைக் கூறுபோட்ட அனைவரிடமும் கேட்டே தீருவோம்.
Tafsiran larabci:
عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
15.93. அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவை குறித்தும் அவர்களிடம் நாம் விசாரித்தே ஆகுவோம்.
Tafsiran larabci:
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
15.94. -தூதரே!- எதன் பக்கத் அழைப்பு விடுக்குமாறு அல்லாஹ் உமக்கு கட்டளையிட்டானோ அதனை எடுத்துரைப்பீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதையும் செய்வதையும் பொருட்படுத்தாதீர்.
Tafsiran larabci:
اِنَّا كَفَیْنٰكَ الْمُسْتَهْزِءِیْنَ ۟ۙ
15.95. அவர்களைக் கண்டு நீர் அஞ்சாதீர். பரிகாசம் செய்யக்கூடிய நிராகரிக்கும் குறைஷித் தலைவர்கள் விஷயத்தில் நாமே உமக்குப் போதுமானவர்கள்.
Tafsiran larabci:
الَّذِیْنَ یَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
15.96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் இணைவைப்பின் மோசமான விளைவை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
Tafsiran larabci:
وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ یَضِیْقُ صَدْرُكَ بِمَا یَقُوْلُوْنَ ۟ۙ
15.97. -தூதரே!- அவர்கள் உம்மை பொய்பிப்பதனால், பரிகாசம் செய்வதனால் நிச்சயமாக உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதை நாம் நன்கு அறிவோம்.
Tafsiran larabci:
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟ۙ
15.98. அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனை தூய்மைப்படுத்தி, அவனுடைய பரிபூரணமான பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவன் பக்கமே தஞ்சம் புகுந்து கொள்வீராக. அல்லாஹ்வை வணங்கி தொழுகையில் ஈடுபடுபவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக. இதனால் உமது உள்ளம் உணரும் நெருக்கடியிலிருந்து நீர் விடுபடலாம்.
Tafsiran larabci:
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰی یَاْتِیَكَ الْیَقِیْنُ ۟۠
15.99. மரணம் உம்மை அடையும் வரை உம் இறைவனை வணங்குவதில் நிலைத்திருப்பீராக.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• عناية الله ورعايته بصَوْن النبي صلى الله عليه وسلم وحمايته من أذى المشركين.
1. அல்லாஹ்வின் அருள் மற்றும் அக்கறையின் வெளிப்பாடு, அவன் தன் தூதரை இணைவைப்பாளர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாத்துள்ளான்.

• التسبيح والتحميد والصلاة علاج الهموم والأحزان، وطريق الخروج من الأزمات والمآزق والكروب.
2. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ்வின் தூய்மையை பறைசாற்றுவது), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வைப் புகழ்வது) என்று கூறுவது, தொழுகையைக் கடைப்பிடிப்பது கவலைகள் மற்றும் துக்கத்திற்கான சிகிச்சையாக உள்ளது. அவை நெருக்கடி, துன்பம் மற்றும் கஷ்டங்களிலிருந்து வெளியேற்றும் பாதைகளாகும்.

• المسلم مطالب على سبيل الفرضية بالعبادة التي هي الصلاة على الدوام حتى يأتيه الموت، ما لم يغلب الغشيان أو فقد الذاكرة على عقله.
3. ஒரு முஸ்லிம் மரணிக்கும் வரை தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு, அல்லாஹ்வை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளான். ஆனால் மயக்கம் அல்லது சுயநினைவை இழக்கும் சமயத்தில் அவனுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• سمى الله الوحي روحًا؛ لأنه تحيا به النفوس.
4. வஹியை அல்லாஹ் உயிர் எனக் குறிப்பிட்டுள்ளான். ஏனெனில் அதன் மூலமே ஆன்மாக்கள் உயிர் வாழ்கின்றன.

• مَلَّكَنا الله تعالى الأنعام والدواب وذَلَّلها لنا، وأباح لنا تسخيرها والانتفاع بها؛ رحمة منه تعالى بنا.
5. அல்லாஹ் எம்மீது கொண்ட கருணையினால் கால்நடைகளை எமக்கு உரிமையாக்கி எமக்கு அவற்றைக் கட்டுப்படச் செய்துள்ளான். அவற்றை வசப்படுத்தி பயன்பெற அனுமதித்துள்ளான்.

 
Fassarar Ma'anoni Sura: Alhijr
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa