Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (38) Sura: Suratu Al'nahl
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ— لَا یَبْعَثُ اللّٰهُ مَنْ یَّمُوْتُ ؕ— بَلٰی وَعْدًا عَلَیْهِ حَقًّا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
16.38. உயிர் கொடுத்து எழுப்பப்படுவதைப் பொய்பிக்கக்கூடிய இவர்கள் உறுதியாக, எல்லை கடந்து, சத்தியமிட்டுக் கூறுகிறார்கள், “அல்லாஹ் மரணித்தவர்களை ஒருபோதும் எழுப்ப மாட்டான் என்று.” அவர்களிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவன் மரணித்தவர்களை நிச்சயம் உயிர் கொடுத்து எழுப்புவான். இது அவனுடைய உறுதியான வாக்குறுதியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் மரணித்தவர்களை அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை அறியமாட்டார்கள். எனவேதான் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதை மறுக்கிறார்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• العاقل من يعتبر ويتعظ بما حل بالضالين المكذبين كيف آل أمرهم إلى الدمار والخراب والعذاب والهلاك.
1. பொய்பித்து வழிகெட்டவர்களுக்கு ஏற்பட்ட இறுதி முடிவான சேதத்தையும், அழிவையையும், வேதனையையும் கொண்டு உபதேசம், படிப்பினை பெற்றுக்கொள்பவனே அறிவாளியாவான்.

• الحكمة من البعث والمعاد إظهار الله الحقَّ فيما يختلف فيه الناس من أمر البعث وكل شيء.
2. மறுமையில் படைப்புகள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதன் நோக்கம், உயிர் கொடுத்து எழுப்புதல் போன்ற உலகில் மக்கள் முரண்பட்டுக்கொண்டிருந்த அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ் சத்தியத்தை தெளிவுபடுத்துவதாகும்.

• فضيلة الصّبر والتّوكل: أما الصّبر: فلما فيه من قهر النّفس، وأما التّوكل: فلأن فيه الثقة بالله تعالى والتعلق به.
3. பொறுமை மற்றும் அல்லாஹ்வையே சார்ந்திருத்தலின் சிறப்பு தெளிவாகிறது. பொறுமையினால் மனிதன் தன் மனதைக் அடக்கிக்கொள்கின்றான். அல்லாஹ்வையே நம்பி அவனுடனே சம்பந்தப்பட்டிருத்தல் தவக்குலில் உண்டு.

• جزاء المهاجرين الذين تركوا ديارهم وأموالهم وصبروا على الأذى وتوكّلوا على ربّهم، هو الموطن الأفضل، والمنزلة الحسنة، والعيشة الرّضية، والرّزق الطّيّب الوفير، والنّصر على الأعداء، والسّيادة على البلاد والعباد.
4. தமது வீடுகளையும், சொத்துகளையும் துறந்து புலம்பெயர்ந்து நோவினைகளை பொறுமையாக எதிர்கொண்டு தமது இறைவனைச் சார்ந்திருப்போருக்கான கூலி, சிறந்த வசிப்பிடமும் உயர்ந்த அந்தஸ்தும், விரும்பிய வாழ்வும், தாராளமான நல்ல வாழ்வாதாரமும், எதிரிகளின் மீது வெற்றியும் நாடுகளையும் அடியார்களையும் ஆட்சி செய்வதுமாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (38) Sura: Suratu Al'nahl
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa