Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'safat   Aya:
وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ
37.77. நம்பிக்கைகொண்ட அவரது குடும்பத்தினரையும் அவரைப் பின்பற்றியவர்களை மட்டும் நாம் காப்பாற்றினோம். அவரது சமூகத்தின் நராகரிப்பாளர்களான மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
Tafsiran larabci:
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ
37.78. அடுத்துவந்த சமூகங்களில் அவருக்கு நற்பெயரை நிலைத்திருக்கச் செய்தோம். அவர்கள் அதன் மூலம் அவரைப் புகழ்கின்றனர்.
Tafsiran larabci:
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
37.79. பின்னால் வரும் சமூகங்களில் அவரைக் குறித்து எந்த தீங்கான விஷயமும் கூறப்படுவதை விட்டும் பாதுகாப்பு உண்டு. மாறாக புகழும் நற்பெயரும் நிலைத்து நிற்கும்.
Tafsiran larabci:
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
37.80. நிச்சயமாக நாம் நூஹிற்கு வழங்கிய இந்த கூலியைப் போன்றே தனக்கு வணக்கம் மற்றும் அவனுக்கு மாத்திரமே கட்டுப்படும் தன்மை மூலம் நற்செயல் புரிபவர்களுக்கும் நாம் கூலி வழங்குகின்றோம்.
Tafsiran larabci:
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
37.81. நிச்சயமாக நூஹ் நம்பிக்கைகொண்டு, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்ட நம்முடைய அடியார்களில் உள்ளவராவார்.
Tafsiran larabci:
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟
37.82. பின்னர் மற்றவர்களை அவர்களுக்கு அனுப்பிய வெள்ளப் பிரளயத்தால் அழித்துவிட்டோம். அவர்களில் எவரும் எஞ்சியிருக்கவில்லை.
Tafsiran larabci:
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
37.83. நிச்சயமாக அல்லாஹ்வின் ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதில் அவருடன் உடன்பட்ட அவரது மார்க்கத்தைச் சார்ந்தவராக இப்ராஹீம் இருந்தார்.
Tafsiran larabci:
اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟
37.84. அவர் இணைவைப்பிலிருந்து நீங்கிய படைப்புகளின் விடயத்தில் அல்லாஹ்வுக்கு விசுவாசமான தூய உள்ளத்துடன் தனது இறைவனிடம் வந்ததை நினைவு கூர்வீராக.
Tafsiran larabci:
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ
37.85. அவர் இணைவைக்கும் தம் தந்தையிடமும் சமூகத்திடமும் கண்டிக்கும் தோரணையில் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?”
Tafsiran larabci:
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ
37.86. அல்லாஹ் அல்லாத போலியான தெய்வங்களை நீங்கள் வணங்குகிறீர்களா?
Tafsiran larabci:
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
37.87. -என் சமூகமே!- அகிலத்தாரைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனல்லாதவர்களையும் வணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் அவனைச் சந்திக்கும் போது, அவன் உங்களை என்ன செய்வான் என்பதாக நினைக்கிறீர்கள்?
Tafsiran larabci:
فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ
37.88. இப்ராஹீம் தம் சமூகத்தாருடன் வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கு திட்டம் தீட்டியவராக நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
Tafsiran larabci:
فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟
37.89. அவர்களின் திருவிழாவிற்குச் செல்லாமல் இருக்கும் பொருட்டு “நிச்சயமாக நான் நோயாளி” என்று காரணம் கூறினார்.
Tafsiran larabci:
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟
37.90. அவர்கள் அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
Tafsiran larabci:
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ
37.91. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களின் பக்கம் வந்தார். அவற்றைப் பரிகாசம் செய்தவராகக் கேட்டார்: “இணைவைப்பாளர்கள் உங்களுக்காக செய்யும் உணவை நீங்கள் உண்பதில்லையா?
Tafsiran larabci:
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
37.92. உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் நீங்கள் பேசுவதில்லை? உங்களிடம் கேட்பவர்களுக்குப் பதிலளிப்பதில்லை? இது போன்றவையா அல்லாஹ்வை விடுத்து வணங்கப்படுகிறது!.
Tafsiran larabci:
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
37.93. அவற்றின்பால் சென்று அவற்றை உடைப்பதற்காக இப்ராஹீம் அவற்றை தம் வலது கையால் அடித்தார்.
Tafsiran larabci:
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
37.94. இந்த சிலைகளை வணங்குவோர் அவரை முன்னோக்கி விரைந்தோடி வந்தார்கள்.
Tafsiran larabci:
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
37.95. இப்ராஹீம் அவர்களை உறுதியோடு எதிர்கொண்டார். அவர்களைக் கண்டிக்கும் விதமாக அவர்களிடம் கேட்டார்: “உங்கள் கைகளால் நீங்கள் செதுக்கிக்கொண்ட அல்லாஹ் அல்லாத தெய்வங்களை வணங்குகிறீர்களா?”
Tafsiran larabci:
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
37.96. அல்லாஹ்தான் உங்களையும் உங்களின் செயல்களையும் படைத்தான். இந்த சிலைகளும் நீங்கள் செய்தவைகளே. எனவே அவன் ஒருவனே அவனோடு எந்த இணையும் கற்பிக்கப்படாமல் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன்.
Tafsiran larabci:
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟
37.97. அவரை வாதத்தில் எதிர்கொள்ள முடியாத அவர்கள் அதிகாரத்தின் பக்கம் தஞ்சமடைந்தார்கள். இப்ராஹீமை என்ன செய்வது என்பது குறித்து தங்களுக்குள் ஆலோசித்தார்கள். கூறினார்கள்: “அவருக்காக ஒரு கட்டடம் கட்டி அதில் விறகுகளை நிரப்பி நெருப்பை மூட்டுங்கள். பின்னர் அதில் அவரை எறிந்து விடுங்கள்.
Tafsiran larabci:
فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟
37.98. அவருடைய சமூகம் அவரை அழித்து அவரிடமிருந்து விடுபடுவதற்கு ஏற்பாடு செய்து அவருக்க தீங்கு செய்ய நாடியது. ஆனால் நாம் அவருக்கு நெருப்பை குளிர்ச்சியானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கி அவர்களை நஷ்டமடைந்தவர்களாக்கி விட்டோம்.
Tafsiran larabci:
وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
37.99. இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக நான் என் சமூகத்தின் ஊரை விட்டுவிட்டு என் இறைவனை வணங்குவதற்காக அவன்பால் புலம்பெயர்ந்து செல்கின்றேன். என் இறைவன் எனக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையானவற்றை அறிவித்துத் தருவான்.
Tafsiran larabci:
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
37.100. என் இறைவா! தனிமையில் எனக்கு உதவியாகவும் என் சமூகத்திற்கு மாற்றாகவும் இருக்கக்கூடிய நல்ல குழந்தையை வழங்குவாயாக.
Tafsiran larabci:
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟
101. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து ஒரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினோம். அக்குழந்தை வளர்ந்து பொறுமையாளனாக மாறும். அந்தக் குழந்தைதான் இஸ்மாயீல் ஆவார்.
Tafsiran larabci:
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ— قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ— سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟
37.102. இஸ்மாயீல் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தபோது, தன் தந்தையுடன் சேர்ந்து நடந்து திரியும் வயதை அடைந்தபோது அவரது தந்தை இப்ராஹீம் ஒரு கனவு கண்டார். தூதர்களின் கனவு வஹியின் ஒரு பகுதியாகும். அவர் தம் மகனிடம் கனவு பற்றி கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். இது குறித்து உன் கருத்தைக் கூறு.” அதற்கு இஸ்மாயீல் விடையளித்தவராக கூறினார்: “தந்தையே! என்னை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டதைச் செயல்படுத்துங்கள். அல்லாஹ் நாடினால் என்னை அல்லாஹ்வின் தீர்ப்பைப் பொருந்திக்கொண்ட பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• من مظاهر الإنعام على نوح: نجاة نوح ومن آمن معه، وجعل ذريته أصول البشر والأعراق والأجناس، وإبقاء الذكر الجميل والثناء الحسن.
1. அல்லாஹ் நூஹின் மீது புரிந்த அருட்கொடைகளின் வெளிப்பாடுகளில் சில: “நூஹையும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களையும் அவன் காப்பாற்றினான், அவருடைய சந்ததியினரை மனித சமூகத்தின் இனங்களின் அடிப்படைகளாக, வேர்களாக ஆக்கினான், அவருடைய நற்பெயரையும் அழகிய புகழையும் நிலைத்திருக்கச் செய்தான்.

• أفعال الإنسان يخلقها الله ويفعلها العبد باختياره.
2. மனிதனின் செயல்களை அல்லாஹ்வே படைக்கிறான். அடியான் தன் தேர்வின்படியே அவற்றைச் செய்கிறான்.

• الذبيح بحسب دلالة هذه الآيات وترتيبها هو إسماعيل عليه السلام؛ لأنه هو المُبَشَّر به أولًا، وأما إسحاق عليه السلام فبُشِّر به بعد إسماعيل عليه السلام.
3. இந்த வசனங்களின் கருத்து, அவற்றின் ஒழுங்கின்படி அறுக்குமாறு கூறப்பட்டவர் இஸ்மாயீல் அலை அவர்களாகும். ஏனெனில் அவர்தான் முதலாவது நன்மாராயம் கூறப்பட்டவர். இஸ்ஹாக் அலை அவர்கள் கிடைப்பார்கள் என்ற நன்மாராயம் இஸ்மாயீல் அலை அவர்களின் பின்னரே கூறப்பட்டது.

• قول إسماعيل: ﴿سَتَجِدُنِي إِن شَآءَ اْللهُ مِنَ اْلصَّابِرِينَ﴾ سبب لتوفيق الله له بالصبر؛ لأنه جعل الأمر لله.
4.(அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளராகக் கண்டுகொள்வீர்கள்) என்ற இஸ்மாயீல் அலை அவர்களது வார்த்தை அவருக்குப் பொறுமையை அல்லாஹ் வழங்குவதற்கு ஒரு காரணமாகும். ஏனெனில் அவர் அல்லாஹ்விடம் காரியத்தைப் பொறுப்புச் சாட்டியிருந்தார்.

 
Fassarar Ma'anoni Sura: Al'safat
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa