Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (113) Sura: Suratu Al'nisaa
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ یُّضِلُّوْكَ ؕ— وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَضُرُّوْنَكَ مِنْ شَیْءٍ ؕ— وَاَنْزَلَ اللّٰهُ عَلَیْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ؕ— وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَیْكَ عَظِیْمًا ۟
4.113. தூதரே! அல்லாஹ் உம்மைப் பாதுகாத்து அருள் புரியவில்லையென்றால் தமக்குத் தாமே துரோகமிழைக்கும் இவர்களில் ஒரு கூட்டத்தினர் சரியான தீர்ப்பை விட்டும் உம்மை வழிகெடுக்க முடிவுசெய்து, நீரும் நியாயமின்றி தீர்ப்பளித்திருப்பீர். உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே வழிகெடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் செயல்களின் விளைவு அவர்களின் பக்கமே திரும்பும். உமக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பிருப்பதால் அவர்களால் உமக்கு எந்தத்தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உம்மீது குர்ஆனையும், சுன்னாவையும் இறக்கியுள்ளான். இதற்கு முன்னர் நீர் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத் தந்துள்ளான். நபித்துவம் மற்றும் தவறிலிருந்து பாதுகாப்பு என்பவற்றின் மூலம் அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடை மகத்தானது.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• النهي عن المدافعة والمخاصمة عن المبطلين؛ لأن ذلك من التعاون على الإثم والعدوان.
1. அசத்தியவாதிகளைப் பாதுகாப்பதற்காக வாதிடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது பாவத்திற்கும் அநியாயத்திற்கும் துணைபோவதாகும்.

• ينبغي للمؤمن الحق أن يكون خوفه من الله وتعظيمه والحياء منه فوق كل أحد من الناس.
2. உண்மையான நம்பிக்கையாளன் அனைத்து மக்களை விடவும் அல்லாஹ்வையே அதிகம் அஞ்சவும், கண்ணியப்படுத்தவும், வெட்கப்படவும் வேண்டும்.

• سعة رحمة الله ومغفرته لمن ظلم نفسه، مهما كان ظلمه إذا صدق في توبته، ورجع عن ذنبه.
3. தனக்குத்தானே அநியாயமிழைத்துக்கொண்டவர் அவர் செய்த அநீதி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தான் செய்த செயல்களுக்கு உண்மையாகவே மன்னிப்புக் கோரி தனது தவறிலிருந்து மீண்டுவிட்டால் அவருக்கும் அல்லாஹ்வின் விசாலமான அருளும் மன்னிப்யும் உண்டு.

• التحذير من اتهام البريء وقذفه بما لم يكن منه؛ وأنَّ فاعل ذلك قد وقع في أشد الكذب والإثم.
4. குற்றமற்ற அப்பாவியைச் சந்தேகித்து அவர்செய்யாததை அவர் மீது அவதூறு கூறுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவ்வாறு செய்பவர் பெரும் பொய்யிலும் பாவத்திலுமே வீழ்ந்துவிடுகிறார்.

 
Fassarar Ma'anoni Aya: (113) Sura: Suratu Al'nisaa
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa