Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (64) Sura: Al'ma'ida
وَقَالَتِ الْیَهُوْدُ یَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ— غُلَّتْ اَیْدِیْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ— بَلْ یَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ— یُنْفِقُ كَیْفَ یَشَآءُ ؕ— وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ؕ— وَاَلْقَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ— كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ— وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
5.64. யூதர்கள் தங்களுக்கு பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டபோது, “நலவு மற்றும் நன்கொடையை விட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது. தன்னிடத்தில் இருப்பதை எம்மை விட்டும் அவன் தடுத்துக்கொண்டான்.” எனக் கூறினார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நற்காரியத்தையும், நன்கொடையையும் விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கரங்கள் நலவையும் நன்கொடையையும் அள்ளிவழங்குபவை. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான். அவன் அள்ளியும் கொடுக்கிறான் குறைத்தும் கொடுக்கிறான். அவனைத் தடுப்பவரோ நிர்ப்பந்திப்பவரோ யாரும் இல்லை. தூதரே! அல்லாஹ் உம்மீது இறக்கியது யூதர்களுக்கு - அவர்களின் பொறாமையினால் - வரம்புமீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தும். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து போருக்கான முன்னேற்பாடுகளை செய்யும் போதெல்லாம் அல்லது போர்மூட்டுவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் அவர்களின் ஒன்றிணைவை சிதைத்து பலத்தைப் போக்கிவிடுகின்றோம். அவர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்கான பணிகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு பூமியில் குழப்பம் விளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். குழப்பக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• ذمُّ العالم على سكوته عن معاصي قومه وعدم بيانه لمنكراتهم وتحذيرهم منها.
1. ஒரு அறிஞன் தனது சமூகத்தில் நிலவும் பாவங்களைப் பற்றிப் பேசாமலும் அவர்களது வெறுக்கத்தக்க விடயங்களைத் தெளிவுபடுத்தாமலும் எச்சரிக்காமலும் இருப்பது கண்டிக்கப்பட்டுள்ளது.

• سوء أدب اليهود مع الله تعالى، وذلك لأنهم وصفوه سبحانه بأنه مغلول اليد، حابس للخير.
2. யூதர்கள் அல்லாஹ்வுடைய விடயத்தில் மோசமாக நடந்து கொண்டனர். அதுதான், அல்லாஹ்வை நற்காரியங்கள் செய்யாமல் தடுத்து வைத்துக் கொள்பவன் என அவர்கள் வர்ணித்தமையாகும்.

• إثبات صفة اليدين، على وجه يليق بذاته وجلاله وعظيم سلطانه.
3. அல்லாஹ்வின் தகுதிக்கும் அந்தஸ்திற்கும் அதிகாரத்திற்கும் ஏற்ற இரு கரங்கள் அவனுக்கு உள்ளன.

• الإشارة لما وقع فيه بعض طوائف اليهود من الشقاق والاختلاف والعداوة بينهم نتيجة لكفرهم وميلهم عن الحق.
4. யூதர்கள் நிராகரிப்பு மற்றும் சத்தியத்தை விட்டும் நெறிபிறழ்ந்ததனால் அவர்களில் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவு, முரண்பாடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
Fassarar Ma'anoni Aya: (64) Sura: Al'ma'ida
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa