Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (105) Sura: Suratu Al'an'am
وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ وَلِیَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَیِّنَهٗ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
6.105. அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் விதம் விதமாக தெளிவுபடுத்தியது போன்று, வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், அறிவுரைகள் அடங்கிய வசனங்களையும் நாம் விதம் விதமாக எடுத்துரைக்கிறோம். ஆனாலும் “இது வஹியே அல்ல. உமக்கு முந்தைய வேதக்காரர்களிடமிருந்தே நீர் இதை கற்றுக் கொண்டீர்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவார்கள். நம்பிக்கைகொண்ட முஹம்மதுடைய சமூகத்தினருக்கு விதம் விதமான அத்தாட்சிகளை தெளிவுபடுத்துவதன் மூலம் நாம் மக்களுக்கு சத்தியத்தை விதம் விதமாகத் தெளிவுபடுத்துகிறோம். அவர்களே சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுகிறார்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• تنزيه الله تعالى عن الظلم الذي ترسِّخُه عقيدة (الجَبْر)، وبيان أن كفر العباد وشركهم أمر يحدث باختيارهم.
1. நிர்ப்பந்த கொள்கை அழுத்திக்கூறும் அநீதி என்பதிலிருந்து அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்தல். அடியார்களின் நிராகரிப்பும் இணைவைப்பும் அவர்களின் தெரிவினால் ஏற்பட்டதே என்பதைத் தெளிவுபடுத்தல்.

• ليس بمقدور نبي من الأنبياء أن يأتي بآية من عند نفسه، أو متى شاء، بل ذلك أمر مردود لله تعالى، فهو القادر وحده على ذلك، وهو الحكيم الذي يُقَدِّر نوع الآية ووقت إظهارها.
2. தங்களின் புறத்திலிருந்து அல்லது தாங்கள் விரும்பிய சமயத்தில் எந்தவொரு சான்றையும் கொண்டுவரும் ஆற்றல் எந்த நபியிடமும் இல்லை. அது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உட்பட்டவையாகும். அவன் மட்டுமே சான்றுகளைக் கொண்டு வருவதற்கு முழு சக்தியுடையவன். என்ன விதமான அத்தாட்சி அதனை எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என்பதை நிர்ணியிக்கும் ஞானமிக்கவன் அவனே.

• النهي عن سب آلهة المشركين حذرًا من مفسدة أكبر وهي التعدي بالسب على جناب رب العالمين.
3. பெரும் தீமையைத் தவிர்ப்பதற்காக இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவதே அந்த பெரும் தீமையாகும்.

• قد يحول الله سبحانه وتعالى بين العبد والهداية، ويُصرِّف بصره وقلبه على غير الطاعة؛ عقوبة له على اختياره الكفر.
4. அடியானுக்கும் நேர்வழிக்குமிடையே சில வேளை அல்லாஹ் குறுக்கிடுகிறான். அடியான் நிராகரிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்குத் தண்டனையாக அவனது பார்வையையும் உள்ளத்தையும் இறைவழிபாட்டை விட்டும் திருப்பிவிடுகிறான்.

 
Fassarar Ma'anoni Aya: (105) Sura: Suratu Al'an'am
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa