Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (48) Sura: Suratu Al'anfal
وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ— فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ— وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
8.48. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த பின்வரும் அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: “இணைவைப்பாளர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினான். அவர்களிடம் கூறினான்: “இன்று உங்களை மிகைப்பவர்கள் யாரும் இல்லை. நான் உங்களுக்கு உதவிபுரியக் கூடியவன். உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவன்.” நம்பிக்கையாளர்களுடன் உதவிபுரியும் வானவர்களும், இணைவைப்பாளர்களுடன் கைவிடும் ஷைத்தானும் சேர்ந்து கொண்டு இரு அணிகளும் சந்தித்த போது ஷைத்தான் பின்வாங்கி ஓடிவிட்டான். அவன் இணைவைப்பாளர்களிடம் கூறினான்: “உங்களைவிட்டும் நான் நீங்கி விட்டேன். நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிவதற்காக வந்த வானவர்களை நான் காண்கிறேன். அல்லாஹ் என்னை அழித்து விடுவான் என்று நான் அஞ்சுகிறேன். அவன் தண்டிப்பதில் கடுமையானவன். அவனுடைய தண்டனையை யாராலும் தாங்க முடியாது.”
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• البَطَر مرض خطير ينْخَرُ في تكوين شخصية الإنسان، ويُعَجِّل في تدمير كيان صاحبه.
1. கர்வம் மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் அரிப்பை உண்டாக்கும் ஆபத்தான நோயாகும். அது அவனது அழிவைத் துரிதப்படுத்துகிறது.

• الصبر يعين على تحمل الشدائد والمصاعب، وللصبر منفعة إلهية، وهي إعانة الله لمن صبر امتثالًا لأمره، وهذا مشاهد في تصرفات الحياة.
2. பொறுமையே துன்பங்களையும் கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்கு உதவிபுரிகிறது. பொறுமைக்கு ஆன்மீகப் பலனும் உண்டு. அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்படும் விதமாக பொறுமை காத்தோருக்கு அல்லாஹ் உதவி புரிவதே அப்பயனாகும். வாழ்வின் பல்வேறு நடவடிக்கைகளிலும் இதை உணரமுடியும்.

• التنازع والاختلاف من أسباب انقسام الأمة، وإنذار بالهزيمة والتراجع، وذهاب القوة والنصر والدولة.
3. முரண்பாடுகளும், கருத்து வேற்றுமைகளும் சமூகம் பிளவுபடுவதற்கான காரணிகளில் ஒன்றாகும். அது சமூகம் தோல்வியுற்று பின்வாங்கிவிடும் என்பதற்கும், பலத்தையும் வெற்றியையும் நாட்டையும் இழக்க வேண்டி வரும் என்பதற்குமான எச்சரிக்கையாகும்.

• الإيمان يوجب لصاحبه الإقدام على الأمور الهائلة التي لا يُقْدِم عليها الجيوش العظام.
4. இறை நம்பிக்கை, பெரும் படைகள் கூட செய்யத் துணியாத பாரிய விடயங்களைச் செய்வதற்கான துணிவை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

 
Fassarar Ma'anoni Aya: (48) Sura: Suratu Al'anfal
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa