Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (70) Sura: Suratu Al'taubah
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬— وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ— اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
9.70. நிராகரித்த சமூகங்களான நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்ராஹீம் ஆகியோரின் சமுதாயங்களும் மத்யன்வாசிகளும், லூத்தின் சமூகமும் செய்தவை, அவர்களுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய தகவல் இந்த நயவஞ்சகர்களை அடையவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. அவனது தூதர்கள் அவர்களை எச்சரித்திருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வையும் அவன் அனுப்பிய தூதர்களையும் நிராகரித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தனர்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• سبب العذاب للكفار والمنافقين واحد في كل العصور، وهو إيثار الدّنيا على الآخرة والاستمتاع بها، وتكذيب الأنبياء والمكر والخديعة والغدر بهم.
1. எல்லா காலகட்டங்களிலும் நிராகரிப்பாளர்களுக்கு நயவஞ்சகர்களுக்கும் வழங்கப்படும் தண்டனைக்கான காரணம் ஒன்றுதான். அது, அவர்கள் மறுமையைவிட இவ்வுலக இன்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்; இறைத் தூதர்களை நிராகரித்து அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதாகும்.

• إهلاك الأمم والأقوام الغابرة بسبب كفرهم وتكذيبهم الأنبياء فيه عظة وعبرة للمعتبر من العقلاء.
2. முந்தைய சமூகங்கள் தங்களின் நிராகரிப்பினாலும் இறைத்தூதர்களை மறுத்ததனாலும் அழிக்கப்பட்டார்கள். இதில் அறிவுடையவர்களுக்கு அறிவுரையும் படிப்பினையும் இருக்கின்றது.

• أهل الإيمان رجالًا ونساء أمة واحدة مترابطة متعاونة متناصرة، قلوبهم متحدة في التوادّ والتحابّ والتعاطف.
3. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொள்ளும் பின்னிப்பினைந்த ஒரு சமுதாயமாகும். அன்பு, பாசம் மற்றும் அனுதாபம் ஆகியவற்றில் அவர்களது உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்.

• رضا رب الأرض والسماوات أكبر من نعيم الجنات؛ لأن السعادة الروحانية أفضل من الجسمانية.
4. பூமி மற்றும் வானங்களின் இறைவனின் திருப்பொருத்தம் சுவன இன்பங்களை விட பெரியதாகும். ஏனெனில் ஆன்மீக மகிழ்ச்சி உடலியல் மகிழ்ச்சியை விட சிறந்ததாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (70) Sura: Suratu Al'taubah
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa