Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
163 : 2

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠

2.163. மனிதர்களே! வணக்கத்திற்குரிய உங்கள் இறைவன் ஒருவனே. அவன் தன்னிலும் தனது பண்புகளிலும் தனித்தவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் அளவிலாக் கருணையாளன்; தனது அடியார்களுக்கு கருணைகாட்டுபவன். அவன் அவர்களுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை அளித்திருக்கிறான். info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• الابتلاء سُنَّة الله تعالى في عباده، وقد وعد الصابرين على ذلك بأعظم الجزاء وأكرم المنازل.
1. சோதனை அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய நியதியாகும். அதைப் பொறுமையுடன் எதிர்கொள்பவர்களுக்கு அழகிய கூலியையும் கண்ணியமான அந்தஸ்தையும் தருவதாக அவன் வாக்களித்துள்ளான். info

• مشروعية السعي بين الصفا والمروة لمن حج البيت أو اعتمر.
2. ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே "சயீ" செய்ய வேண்டும். info

• من أعظم الآثام وأشدها عقوبة كتمان الحق الذي أنزله الله، والتلبيس على الناس، وإضلالهم عن الهدى الذي جاءت به الرسل.
3. அல்லாஹ் இறக்கிய சத்தியத்தை மறைத்தல், மக்களைக் குழப்புதல், தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலை விட்டும் மக்களைத் தடுத்தல் ஆகியவை பெரும் பாவமாகவும் கடும் தண்டனைக்கு உரியதாகவும் இருக்கின்றது. info