Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
23 : 59

هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ— سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟

59.22,23. அவனே அல்லாஹ். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை படைப்புகள் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன். info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• من علامات توفيق الله للمؤمن أنه يحاسب نفسه في الدنيا قبل حسابها يوم القيامة.
1. மறுமை நாளின் கேள்விகணக்குக்கு முன்னரே உலகில் சுய பரிசோதனை செய்துகொள்வது அல்லாஹ் நம்பிக்கையாளனுக்கு செய்யும் உதவின் அடையாளமாகும். info

• في تذكير العباد بشدة أثر القرآن على الجبل العظيم؛ تنبيه على أنهم أحق بهذا التأثر لما فيهم من الضعف.
2.பெரும் மலையில் அல்குர்ஆன் ஏற்படுத்தும் கடும் தாக்கத்தை அடியார்களுக்கு ஞாபகமூட்டுவதன் மூலம் பலவீனமிக்க அவர்களே மிகவும் இந்தத் தாக்கத்தை உணரத் தகுதியானவர்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. info

• أشارت الأسماء (الخالق، البارئ، المصور) إلى مراحل تكوين المخلوق من التقدير له، ثم إيجاده، ثم جعل له صورة خاصة به، وبذكر أحدها مفردًا فإنه يدل على البقية.
3. (படைப்பவன், உருவாக்குபவன், உருவம் கொடுப்பவன்) ஆகிய திருநாமங்கள் படைப்பினம் உருவாக்கப்படும் கட்டங்களான, நிர்ணயித்தல், பின்பு உருவாக்குதல், பின்பு அதற்கே உரிய பிரத்தியேக தோற்றத்தை வழங்குதல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அவற்றில் ஒன்றை மாத்திரம் தனியாகக் குறிப்பிடுவது அது ஏனையவற்றையும் அறிவிக்கும். info