Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߤߎ߯ߘߎ߫   ߟߝߊߙߌ ߘߏ߫:
وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا یَزَالُوْنَ مُخْتَلِفِیْنَ ۟ۙ
11.118. -தூதரே!- உம் இறைவன் மக்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது நிலைத்திருக்கும் ஒரு சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவன் ஆக்கியிருப்பான். ஆயினும் அவன் அவ்வாறு நாடவில்லை. மன இச்சையைப் பின்பற்றுவதனாலும் அநியாயம் செய்வதனாலும் அவர்கள் எப்போதும் அதில் முரண்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ؕ— وَلِذٰلِكَ خَلَقَهُمْ ؕ— وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
11.119. ஆயினும் நேர்வழியை அடைவதற்கு உம் இறைவன் கருணை காட்டியோரைத் தவிர. அவர்கள் அவனை ஒருமைப்படுத்துவதில் முரண்பட மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளைக் கொண்ட இந்த சோதனைக்காகவே அவன் அவர்களைப் படைத்துள்ளான். அவர்களில் துர்பாக்கியசாலிகளும், பாக்கியசாலிகளும் இருக்கிறார்கள். -தூதரே!- மனித, ஜின் இனத்தில் ஷைத்தான்களைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன் என்று உம் இறைவன் ஆரம்பத்திலே விதித்த அவனுடைய வார்த்தை நிறைவேறி விட்டது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَكُلًّا نَّقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ— وَجَآءَكَ فِیْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
11.120. -தூதரே!- உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்களின் செய்திகளில் நாம் உமக்கு எடுத்துரைக்கும் ஒவ்வொரு செய்தியையும் உமது உள்ளத்தை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்தவே கூறுகிறோம். இந்த அத்தியாயத்தில் சந்தேகமற்ற சத்தியமும் நிராகரிப்பாளர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலைக் கொண்டு பயனடையும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டலும் உம்மிடம் வந்துள்ளது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَقُلْ لِّلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ ؕ— اِنَّا عٰمِلُوْنَ ۟ۙ
11.121. -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாத அவனை ஒருமைப்படுத்தாதவர்களிடம் நீர் கூறுவீராக: “சத்தியத்தைப் புறக்கணித்து அதனை விட்டும் தடுக்கும் உங்களின் வழியில் நீங்கள் செயல்படுங்கள். சத்தியத்தில் உறுதியாக இருந்து அதன்பால் மக்களை அழைத்து அதில் பொறுமையாக இருந்து நாங்களும் எங்களின் வழியில் செயல்படுகிறோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَانْتَظِرُوْا ۚ— اِنَّا مُنْتَظِرُوْنَ ۟
11.122. எங்கள் மீது இறங்கக் கூடியதை நீங்கள் எதிர்பாருங்கள். உங்கள் மீது இறங்கக் கூடியதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَیْهِ یُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَیْهِ ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
11.123. வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றின் அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறைவதில்லை. மறுமை நாளில் அவன் பக்கமே அனைத்து விவகாரங்களும் திரும்பும். எனவே -தூதரே!- அவனை மட்டுமே வணங்குவீராக. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருப்பீராக. நீங்கள் செய்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• بيان الحكمة من القصص القرآني، وهي تثبيت قلب النبي صلى الله عليه وسلم وموعظة المؤمنين.
1.குர்ஆன் கூறும் சம்பவங்களின் நோக்கம், நபியவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்துவதும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவதுமாகும்.

• انفراد الله تعالى بعلم الغيب لا يشركه فيه أحد.
2. மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதில் அவனுக்கு எந்த இணையும் இல்லை.

• الحكمة من نزول القرآن عربيًّا أن يعقله العرب؛ ليبلغوه إلى غيرهم.
3. குர்ஆன் அரபு மொழியில் இறக்கப்பட்டதன் நோக்கம், அரபுக்கள் அதனைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

• اشتمال القرآن على أحسن القصص.
4.அல்குர்ஆன் அழகிய சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߤߎ߯ߘߎ߫
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲