Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߛߊ߲ߜߊߟߌߡߊ   ߟߝߊߙߌ ߘߏ߫:
اَفَمَنْ یَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰی ؕ— اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟ۙ
13.19. -தூதரே!- உமது இறைவனிடமிருந்து அல்லாஹ் உம்மீது இறக்கியது சந்தேகமற்ற சத்தியமாகும் என்பதை அறிந்த அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட நம்பிக்கையாளனும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத நிராகரிப்பாளனான குருடனும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக ஆரோக்கியமான சிந்தனைகள் உடையோரே இதன் மூலம் அறிவுரை பெற்றுக் கொள்வார்கள், படிப்பினை பெற்றுக்கொள்வார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
الَّذِیْنَ یُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا یَنْقُضُوْنَ الْمِیْثَاقَ ۟ۙ
13.20. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியையும் அவனுடைய அடியார்களிடம் செய்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள். அல்லாஹ்விடமோ மற்றவர்களிடமோ செய்த ஒப்பந்தங்களை அவர்கள் முறிப்பதில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ ۟ؕ
13.21. அவர்கள்தான் அல்லாஹ் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட உறவுகளுடனும் சேர்ந்து வாழ்கிறார்கள். தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகச் செய்யும் அளவுக்கு அவனை அஞ்சுகிறார்கள். தாங்கள் செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் அல்லாஹ் கணக்கு தீர்த்து விடுவானோ என்று அவர்கள் பயந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் எவரிடம் கடுமையாக விசாரணை செய்யப்படுமோ அவர் அழிந்துவிட்டார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ ۟ۙ
13.22. அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் அவன் அவர்களுக்கு விதித்த மகிழ்ச்சியான, துன்பமான விஷயங்களிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் அவனுடைய திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்கிறார்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையான உரிமைகளை நிறைவேற்றுவார்கள். முகஸ்துதியைத் தவிர்க்க மறைமுகமாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரிக்காக வெளிப்படையாகவும் அவற்றிலிருந்து உபரியாகவும் செலவு செய்கிறார்கள்; தங்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு நன்மை செய்து அவர்களின் தீங்கை நன்மையால் எதிர்கொள்கிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் மறுமை நாளில் சிறந்த முடிவைப் பெறுவார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَالْمَلٰٓىِٕكَةُ یَدْخُلُوْنَ عَلَیْهِمْ مِّنْ كُلِّ بَابٍ ۟ۚ
13.23. இந்த சிறந்த முடிவு சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இன்பமுற்றோராக தங்கியிருப்பார்கள். அங்கு அவற்றில் அவர்களின் தந்தையர், தாய்மார்கள், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நேர்வழியில் நின்றவர்கள் நுழைவதும் அவர்களது இன்பத்தைப் பரிபூரணமாக்கும். வானவர்கள் சுவனத்தின் எல்லா வாயில்கள் வழியாகவும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டே அவர்களிடம் வருவார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَی الدَّارِ ۟ؕ
13.24. “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்” என்று வானவர்கள் அவர்களிடம் வரும் போதெல்லாம் கூறுவார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் அவனுடைய விதியை ஏற்றுக் கொள்வதிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததனால் ஆபத்துகளிலிருந்து நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்பதே அதன் கருத்தாகும். உங்களது இறுதி முடிவான இந்த இறுதி வீடு சிறப்பானதாகி விட்டது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ— اُولٰٓىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
அவர்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அது உறுதிசெய்யப்பட்ட பின்பும் முறிக்கின்றனர்.அல்லாஹ் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த உறவுகளை துண்டித்து வாழ்கின்றனர். அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதன் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். இப்படிப்பட்ட அவர்கள்தான் அல்லாஹ்வின் அருளைவிட்டும் விரட்டப்பட்ட துர்பாக்கியவான்கள். அவர்களின் தீய முடிவு நரகமாகும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— وَفَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ۟۠
13.26. அல்லாஹ் தான் நாடியோருக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடிய அடியார்களுக்கு அதனை சுருக்கியும் விடுகிறான். வாழ்வாதாரம் அதிகமாக வழங்கப்படுவது பாக்கியத்தின், இறைநேசத்தின் அடையாளமும் அல்ல. அது குறைவாக வழங்கப்படுவது துர்பாக்கியத்தின் அடையாளமும் அல்ல. நிராகரிப்பாளர்கள் இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்வுற்று அதன் பக்கம் சாய்ந்து அதனைக் கொண்டு நிம்மதி அடைகின்றனர். மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலகம் அழிந்து விடும் அற்ப இன்பமேயன்றி வேறில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قُلْ اِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ اَنَابَ ۟ۖۚ
13.27. அல்லாஹ்வையும் அவனுடைய சான்றுகளையும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாம் முஹம்மதை நம்புவதற்கு அவரது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கக்கூடிய ஏதேனும் புலன் ரீதியான ஒரு சான்று அவர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? இவ்வாறு கருத்து கூறுபவர்களிடம் -தூதரே- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் நீதியால் தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். பாவமன்னிப்பின் மூலம் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழிகாட்டுகிறான். அத்தாட்சிகளை இறக்கினால்தான் நேர்வழி பெறுவோம் எனக் கூற நேர்வழியொன்றும் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டதல்ல.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ— اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۟ؕ
13.28. அல்லாஹ் நேர்வழிகாட்டிய இவர்கள்தாம் நம்பிக்கையாளர்களாவர். அவனுடைய தூய்மையை பறைசாற்றுவது, அவனைப் புகழ்வது, அவனுடைய வேதத்தை ஓதுவது, அதனைக் கேட்பது போன்ற பல்வேறு வகை திக்ருகளின் மூலம் அவர்களின் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் நினைவால் மாத்திரமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. அதுவே அவற்றுக்குப் பொருத்தமானதாகும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الترغيب في جملة من فضائل الأخلاق الموجبة للجنة، ومنها: حسن الصلة، وخشية الله تعالى، والوفاء بالعهود، والصبر والإنفاق، ومقابلة السيئة بالحسنة والتحذير من ضدها.
1. சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் நற்பண்புகளின்பால் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. அவையாவன: உறவைப் பேணுதல், அல்லாஹ்வை அஞ்சுதல், ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், பொறுமையைக் கடைப்பிடித்தல், (இறை வழியில்) செலவு செய்தல், தீமையை நன்மையால் எதிர்கொள்ளுதல். இதற்கு மாற்றமாக நடப்பதை விட்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

• أن مقاليد الرزق بيد الله سبحانه وتعالى، وأن توسعة الله تعالى أو تضييقه في رزق عبدٍ ما لا ينبغي أن يكون موجبًا لفرح أو حزن، فهو ليس دليلًا على رضا الله أو سخطه على ذلك العبد.
2. வாழ்வாதாரம் அதிகாரங்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. வாழ்வாதாரம் அடியானுக்கு அதிகமாக வழங்கப்படுவதும் அல்லது குறைவாக வழங்கப்படுவதும் அவனுக்கு பூரிப்பையோ அல்லது கவலையையோ ஏற்படுத்தி விடக்கூடாது. அது அடியான் மீது அல்லாஹ் கொண்ட நேசத்தின் அல்லது கோபத்தின் அடையாளம் அல்ல.

• أن الهداية ليست بالضرورة مربوطة بإنزال الآيات والمعجزات التي اقترح المشركون إظهارها.
3. இணைவைப்பாளர்கள் வெளிப்படுத்துமாறு வேண்டும் அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் இறக்குவதுடன் நேர்வழி எப்பொழுதும் தொடர்புபட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

• من آثار القرآن على العبد المؤمن أنه يورثه طمأنينة في القلب.
4. விசுவாசியான அடியானின் உள்ளத்தில் நிம்மதியை ஏற்படுத்துவது அவன் மீது அல்குர்ஆன் ஏற்படுத்தும் தாக்கத்தில் உள்ளதாகும்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߛߊ߲ߜߊߟߌߡߊ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲