Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߕߊߟߏ߲ߕߊߟߏ߲ߓߊ   ߟߝߊߙߌ ߘߏ߫:
وَمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ ؕ— وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِیَ الْحَیَوَانُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
29.64. இந்த உலக வாழ்க்கை -இதிலுள்ள இன்பங்கள்- அதன் மீது உள்ளம் மோகம் கொண்டவர்களுக்கு வீணும் விளையாட்டுமேயாகும். அது மிக விரைவில் முடிந்துவிடும். நிலையாக இருக்காது. நிச்சயமாக மறுமையின் வீடே நிலைத்திருக்கக்கூடிய உண்மையான வாழ்க்கையாகும். அவர்கள் அறிந்திருந்தால் நிலையானதை விட்டுவிட்டு அழியக்கூடியதை முற்படுத்தியிருக்க மாட்டார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاِذَا رَكِبُوْا فِی الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬— فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ اِذَا هُمْ یُشْرِكُوْنَ ۟ۙ
29.65. இணைவைப்பாளர்கள் கடலில் கப்பல்களில் பயணம் செய்தால் மூழ்கிவிடாமல் தங்களைக் காப்பாற்றுமாறு அல்லாஹ் ஒருவனிடமே மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் அவன் அவர்களைக் மூழ்குவதில் இருந்து காப்பாற்றிவிட்டால் அவனுடன் சேர்த்து அவர்களது தெய்வங்களை வணங்கி இணைவைப்பாளர்களாக மாறிவிடுகின்றனர்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ۙۚ— وَلِیَتَمَتَّعُوْا ۥ— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
29.66. நாம் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உலக வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பதற்காகவும் அவர்கள் இணைவைப்பாளர்களாகி மாறிவிட்டார்கள். பின்பு இதன் தீய விளைவை மரணிக்கும் வேளையில் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَوَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّیُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ ؕ— اَفَبِالْبَاطِلِ یُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ یَكْفُرُوْنَ ۟
29.67. கடலில் மூழ்கிவிடாமல் அவர்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வின் அருட்கொடையை மறுப்பவர்கள் நாம் அவர்களுக்கு வழங்கிய மற்றொரு அருட்கொடையை நினைத்துப் பார்க்க வேண்டாமா? அது நாம் அவர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பான பூமியை அளித்துள்ளோம், அவர்கள் அல்லாதவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவர்களது பெண்கள், பிள்ளைகள் ஆகியோர் சிறைபிடிக்கப்படுகின்றனர். சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. போலியாக எண்ணிய அசத்திய தெய்வங்களின் மீது நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் நிராகரிக்கிறார்களா?
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَآءَهٗ ؕ— اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟
29.68. அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவனோடு இணைத்து பொய்யாக இட்டுக்கட்டுபவனைவிட அல்லது தூதர் கொண்டுவந்த சத்தியத்தை பொய் என்று கூறுபவனைவிட மிகப்பெரும் அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிராகரிப்பாளர்களுக்கும் அவர்களைப் போன்றவர்களுக்கும் நரகத்தில் இருப்பிடம் இருக்கின்றது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالَّذِیْنَ جٰهَدُوْا فِیْنَا لَنَهْدِیَنَّهُمْ سُبُلَنَا ؕ— وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِیْنَ ۟۠
29.69. யார் நம்முடைய திருப்தியை நாடி தமது ஆன்மாவுடன் போராடுவார்களோ நாம் அவர்களுக்கு நேரான வழியை அடையும் பாக்கியத்தை அளிப்போம். நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்து வழிகாட்டுவதன் மூலம் நன்மை செய்வோருடன் இருக்கின்றான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• لجوء المشركين إلى الله في الشدة ونسيانهم لأصنامهم، وإشراكهم به في الرخاء؛ دليل على تخبطهم.
1. இணைவைப்பாளர்கள் கஷ்டமான சூழ்நிலைகளில் அல்லாஹ்விடம் மட்டுமே அடைக்கலம் தேடி தமது சிலைகளை மறந்து விடுவதும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் அவனுக்கு இணைகளை ஏற்படுத்துவதும் அவர்களின் தடுமாற்றத்திற்கான ஆதாரமாகும்.

• الجهاد في سبيل الله سبب للتوفيق إلى الحق.
2. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வது சத்தியத்தை அடைவதற்கான பாக்கியமாக இருக்கின்றது.

• إخبار القرآن بالغيبيات دليل على أنه من عند الله.
3. மறைவானவற்றை குர்ஆன் அறிவிப்பது அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதற்கான ஆதாரமாகும்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߕߊߟߏ߲ߕߊߟߏ߲ߓߊ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲