ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
71 : 15

قَالَ هٰۤؤُلَآءِ بَنَاتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ

“(இதோ!) இவர்கள் என் பெண் மக்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்)” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
72 : 15

لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟

(நபியே!) உம் வாழ்வின் சத்தியம்! நிச்சயமாக இவர்கள்(-சிலைவணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகின்றனர். info
التفاسير:

external-link copy
73 : 15

فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ

ஆகவே, (அவர்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. info
التفاسير:

external-link copy
74 : 15

فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ

அவர்கள் மீது களிமண்ணின் கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்; அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
75 : 15

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟

நிச்சயமாக இதில் நுண்ணறிவாளர்களுக்கு அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
76 : 15

وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟

நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான) பாதை யில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது. info
التفاسير:

external-link copy
77 : 15

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ

நிச்சயமாக அதில் நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. info
التفاسير:

external-link copy
78 : 15

وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ

நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள். info
التفاسير:

external-link copy
79 : 15

فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ— وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠

ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான வழியில்தான் உள்ளன. info
التفاسير:

external-link copy
80 : 15

وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ

‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள். info
التفاسير:

external-link copy
81 : 15

وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ

அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். அவற்றைப் புறக்கணித்தவர்களாக (அவர்கள்) இருந்தனர். info
التفاسير:

external-link copy
82 : 15

وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟

அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர். info
التفاسير:

external-link copy
83 : 15

فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ

(அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்க அவர்களை சப்தம் பிடித்தது. info
التفاسير:

external-link copy
84 : 15

فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ

அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை. info
التفاسير:

external-link copy
85 : 15

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ— وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟

வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்கே தவிர நாம் படைக்கவில்லை. நிச்சயம் (குறிப்பிட்ட) மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக. info
التفاسير:

external-link copy
86 : 15

اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟

நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
87 : 15

وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟

(நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் வசனங்களில் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்குக் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
88 : 15

لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟

இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் எதைக் கொண்டு சுகமளித்தோமோ அதன் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர் (அவற்றை ஆசைப்படாதீர்); அவர்கள் மீது கவலைப்படாதீர். நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (மென்மையாக பணிவுடன் இருப்பீராக!). info
التفاسير:

external-link copy
89 : 15

وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ

“நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக. info
التفاسير:

external-link copy
90 : 15

كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ

(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (வேதனையை) இறக்கியது போன்றே... (இந்நிராகரிப்பாளர்கள் மீது வேதனையை இறக்கி வைப்போம்.) info
التفاسير: