Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூஸுப்   வசனம்:
یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ— اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟
12.87. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் பற்றிய செய்தியை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் தன் அடியார்களின் துன்பத்தைப் போக்குவான் என்பதில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிராகரித்த மக்கள் மட்டுமே அல்லாஹ் துன்பங்களைப் போக்கி விடுதலையளிப்பான் என்பதில் நம்பிக்கை இழப்பார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையை, அவன் தன் அடியார்களுக்கு வழங்கும் மறைவான அருட்கொடைகளை அறிய மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ— اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟
12.88. தமது தந்தையின் கட்டளையின் படி அவர்கள் செயற்பட்டு, யூஸுஃபையும் அவரது சகோதரரரையும் தேடிச் சென்றனர். அவர்கள் யூஸுஃபிடம் வந்த போது கூறினார்கள்: “வறுமையும் கஷ்டமும் எங்களைப் பாதித்துள்ளது. நாங்கள் அற்ப பொருளையே கொண்டுவந்துள்ளோம். இதற்கு முன்னர் எங்களுக்கு நிறைவாக தானியங்கள் தந்தவாறு இப்பொழுதும் நிறைவாக தானியங்கள் தாருங்கள். அதிகப்படியாக தர்மமும் செய்யுங்கள். அல்லது எங்களின் அற்ப பொருள்களைக் கண்டுகொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்யக்கூடியவர்களுக்கு அழகிய முறையில் கூலி வழங்குகின்றான்.
அரபு விரிவுரைகள்:
قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟
12.89. அவர்களின் பேச்சைக் கேட்ட யூஸுஃபின் உள்ளம் அவர்கள் மீது கொண்ட கருணையால் உருகிவிட்டது. தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் கேட்டார்: “யூஸுஃபுடனும் அவருடைய சகோதரருடனும் நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீர்கள் என்பதை அறிந்தேயுள்ளீர்கள். அப்போது நீங்கள் செய்த செயலின் விளைவைக் குறித்து அறியாதவர்களாக இருந்தீர்கள்.”
அரபு விரிவுரைகள்:
قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ— قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ— قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ— اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
12.90. அவர்கள் திடுக்கிட்டார்கள். “நீர்தான் யூஸுஃபா” என்று கேட்டார்கள். யூஸுஃப் அவர்களிடம் கூறினார்: “ஆம். நான்தான் யூஸுஃப். என்னுடன் இருக்கும் இவர் என் சொந்த சகோதரர். நாங்கள் இருந்த நிலையிலிருந்து எங்களை விடுவித்து, எங்களின் அந்தஸ்தை உயர்த்தி அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக அவருடைய செயல் நன்மையான செயலாகும். நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்காக அதனைப் பாதுகாக்கிறான்.
அரபு விரிவுரைகள்:
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَیْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕیْنَ ۟
12.91. அவருடைய சகோதரர்கள் தாங்கள் அவருடன் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களை விட உமக்குப் பரிபூரணமான பண்புகளை வழங்கி உம்மை சிறப்பித்துள்ளான். நாங்கள் உம்முடன் நடந்து கொண்ட விதத்தில் தவறிழைத்த அநியாயக்காரர்களாக இருந்தோம்.”
அரபு விரிவுரைகள்:
قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَ ؕ— یَغْفِرُ اللّٰهُ لَكُمْ ؗ— وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
12.92. யூஸுஃப் அவர்கள் கூறிய காரணங்களை ஏற்றுக்கொண்டார். அவர் கூறினார்: “இன்றைய தினம் உங்களைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்விடம் உங்களுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். அவன் கருணையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கருணையாளனாக இருக்கின்றான்.
அரபு விரிவுரைகள்:
اِذْهَبُوْا بِقَمِیْصِیْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰی وَجْهِ اَبِیْ یَاْتِ بَصِیْرًا ۚ— وَاْتُوْنِیْ بِاَهْلِكُمْ اَجْمَعِیْنَ ۟۠
12.93. தம் தந்தையின் பார்வைக்கு ஏற்பட்ட நிலமையை அவர்கள் அவரிடம் கூறிய போது அவர் அவர்களிடம் தன் சட்டையைக் கொடுத்துக் கூறினார்: “எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் போடுங்கள். அவருடைய பார்வை திரும்பி விடும். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.”
அரபு விரிவுரைகள்:
وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟
12.94. பயணக் குழு எகிப்திலிருந்து புறப்பட்டு ஊர் எல்லையைத் தாண்டியதும் தன் பிள்ளைகளிடமும் ஊரில் தன் அருகில் இருந்தோரிடமும் யஃகூப் கூறினார்: “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை உணர்கிறேன். “தான் அறியாததைக் கூறும் புத்தியையிழந்த கிழவர்” என்று கூறி நீங்கள் என்னை மடையனாக்கி புத்தியிழந்தவர் என்பீர்கள்.
அரபு விரிவுரைகள்:
قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِیْ ضَلٰلِكَ الْقَدِیْمِ ۟
12.95. அவரைச் சுற்றியிருந்த அவரது பிள்ளைகள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களிடம் யூஸுஃபுக்குள்ள மதிப்பினாலும் மீண்டும் அவரைக் காணமுடியும் என்ற எண்ணத்தாலும் உங்களின் முன்னைய மாயையிலேயே இருக்கின்றீர்கள்.”
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• عظم معرفة يعقوب عليه السلام بالله حيث لم يتغير حسن ظنه رغم توالي المصائب ومرور السنين.
1. விரும்பியதைப் பெறுவதற்கு அல்லாஹ்வின்மீது முழுமையாக நம்பிக்கைவைத்து அவன் ஏற்படுத்திய வழிமுறைகளைக் கையாள வேண்டும். அவனுடைய அருளிலிருந்து நம்பிக்கையிழந்துவிடக்கூடாது.

• من خلق المعتذر الصادق أن يطلب التوبة من الله، ويعترف على نفسه ويطلب الصفح ممن تضرر منه.
2. அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருதல், அதை ஒத்துக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கோருதல் ஆகியவை உண்மையாக மன்னிப்புக் கேட்பவரின் குணங்களாகும்.

• بالتقوى والصبر تنال أعظم الدرجات في الدنيا وفي الآخرة.
3. இறை அச்சம், பொறுமை ஆகியவற்றின் மூலமே இம்மையிலும் மறுமையிலும் பெரும் அந்தஸ்துகளை அடையலாம்.

• قبول اعتذار المسيء وترك الانتقام، خاصة عند التمكن منه، وترك تأنيبه على ما سلف منه.
4. தவறிழைத்தவரின் மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்வதோடு பழிவாங்கக் கூடாது, குறிப்பாக அதிகாரம் கைவரப் பெற்ற பிறகு. அவருடைய கடந்தகால குற்றங்களுக்காக கண்டிப்பதையும் விட்டுவிட வேண்டும்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூஸுப்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக