Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்பகரா   வசனம்:
وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ— قَالُوْا هٰذَا الَّذِیْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ؕ— وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
2.25. முன்னர் கூறப்பட்ட எச்சரிக்கை நிராகரிப்பாளர்களுக்குரியதாகும். தூதரே! அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வூட்டும் சொர்க்கச் சோலைகள் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றின் தூய்மையான பழங்களிலிருந்து அவர்களுக்கு உணவளிக்கப்படும்போதெல்லாம் அவை உலகிலுள்ள பழங்களை ஓத்திருப்பதைப்பார்த்து, இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வடிவத்திலும் பெயரிலும் ஒத்த, சுவையில் வேறுபட்ட பழங்கள் அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும். மனித மனமும் இயல்பும் வெறுக்கும் இவ்வுலகில் உள்ளோரிடம் காணப்படும் அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கிய தூய்மையான துணைகளும் சொர்க்கத்தில் அவர்களுக்கு உண்டு. முடிந்துவிடும் உலக இன்பத்திற்கு மாற்றமாக என்றும் முடிவடையாத நிரந்தரமான இன்பத்தில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.
அரபு விரிவுரைகள்:
اِنَّ اللّٰهَ لَا یَسْتَحْیٖۤ اَنْ یَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ— وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَیَقُوْلُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ— یُضِلُّ بِهٖ كَثِیْرًا وَّیَهْدِیْ بِهٖ كَثِیْرًا ؕ— وَمَا یُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِیْنَ ۟ۙ
2.26. தான் விரும்பும் உதாரணங்களைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அவன் கொசுவையோ அல்லது அதைவிடச் சிறியதையோ, பெரியதையோ உதாரணங்களாகக் கூறுகிறான். இவ்விஷயத்தில் மக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், அவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்கள், அவனை நிராகரிப்பவர்கள். இந்த இருவரில் அவன்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அவன் கூறியதை உண்மைப்படுத்தி, இதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்கிறார்கள். ஆனால், அவனை நிராகரிப்பவர்களோ, கொசு, ஈ, சிலந்தி போன்ற அற்பமான படைப்பினங்களையா உதாரணம் கூறுவது? என்று பரிகாசமாகக் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கான பதிலை அல்லாஹ்வே கூறுகிறான்: இந்த உதாரணங்களில் வழிகாட்டல்களும் அறிவுரைகளும் மக்களுக்குச் சோதனையும் இருக்கின்றன. இவற்றைச் சிந்திக்காத காரணத்தால் அவர்களில் அதிகமானவர்களை அவன் வழிதவறச் செய்கிறான். அவர்களில் இவற்றின் மூலம் படிப்பினை பெற்ற அதிகமானோருக்கு அவன் வழிகாட்டவும் செய்கிறான். வழிகேட்டிற்குத் தகுதியானவர்களைத்தான் வழிகேட்டில் ஆழ்த்துகிறான். நயவஞ்சகர்களைப் போல அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களே அவர்கள்.
அரபு விரிவுரைகள்:
الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ ۪— وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
2.27. தன்னை மட்டுமே வணங்குமாறும், முன் சென்ற தூதர்கள் அறிவித்துவிட்டுச் சென்ற தனது தூதரைப் பின்பற்றுமாறும் அல்லாஹ் அவர்களிடம் செய்த உடன்படிக்கையை அவர்கள் முறித்துவிடுகிறார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிக்கும் இவர்கள் அவன் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த சொந்தங்களையும் துண்டித்துவிடுகிறார்கள். பாவங்களின் மூலம் பூமியில் குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்கள்.
அரபு விரிவுரைகள்:
كَیْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْیَاكُمْ ۚ— ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
2.28. நிராகரிப்பாளர்களே! உங்களின் விஷயம் ஆச்சரியமானது. அல்லாஹ்வை எப்படித்தான் மறுக்கிறீர்கள்!? அவனுடைய வல்லமைக்குரிய சான்றுகளை உங்களுக்குள்ளும் நீங்கள் காண்கிறீர்களே!? ஒன்றும் இல்லாத நிலையில் நீங்கள் இருந்தீர்கள். அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு உயிரளித்தான். பின்னர் மீண்டும் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் மீண்டும் உங்களுக்கு உயிர்கொடுப்பான். நீங்கள் செய்த செயல்களுக்கு அவன் உங்களிடம் விசாரணை செய்வதற்காக அவனிடமே நீங்கள் திரும்ப வேண்டும்.
அரபு விரிவுரைகள்:
هُوَ الَّذِیْ خَلَقَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا ۗ— ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ؕ— وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
2.29. பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள் மற்றும் எண்ண முடியாத எத்தனையோ படைப்பினங்களை அல்லாஹ் ஒருவனே உங்களுக்காகப் படைத்திருக்கிறான். அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்ததை அனுபவித்து அவற்றின் மூலம் பயனடைகிறீர்கள். பின்னர் வானத்தைப் படைக்க விரும்பி, அதனை சமமான ஏழு வானங்களாகப் படைத்தான். அவனது அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• من كمال النعيم في الجنة أن ملذاتها لا يكدرها أي نوع من التنغيص، ولا يخالطها أي أذى.
1. சுவன இன்பத்தின் பரிபூரணத் தன்மையில் ஒன்று, அதன் இன்பங்களில் எவ்விதக் கலங்கமும் இருக்காது. அதனுடன் எவ்விதத் தொல்லையும் கலந்திடவும் செய்யாது என்பதாகும்.

• الأمثال التي يضربها الله تعالى لا ينتفع بها إلا المؤمنون؛ لأنهم هم الذين يريدون الهداية بصدق، ويطلبونها بحق.
2. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே அவன் கூறும் உதாரணங்களிலிருந்து பலனடைவார்கள். ஏனெனில், உண்மையாகவே நேர்வழியை விரும்புவதோடு அதைத் தேடுபவர்களாகவும் உள்ளவர்கள் அவர்களே.

• من أبرز صفات الفاسقين نقضُ عهودهم مع الله ومع الخلق، وقطعُهُم لما أمر الله بوصله، وسعيُهُم بالفساد في الأرض.
3. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிப்பது, மனிதர்களுடன் செய்த வாக்குறுதியை முறிப்பது, அல்லாஹ் சேர்த்து வாழுமாறு கட்டளையிட்ட இரத்த உறவுகளைத் துண்டிப்பது, பூமியில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வது இவை அனைத்தும் பாவிகளின் பிரதான பண்புகளாகும்.

• الأصل في الأشياء الإباحة والطهارة؛ لأن الله تعالى امتنَّ على عباده بأن خلق لهم كل ما في الأرض.
4. அனைத்துப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டது, தூய்மையானது என்பதே அடிப்படை விதியாகும். ஏனெனில், அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் தனது அடியார்களுக்காகவே படைத்துள்ளதாக கூறிக்காட்டியுள்ளான்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்பகரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக