Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (185) அத்தியாயம்: அல்பகரா
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ— فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ— وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ— یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ— وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
2.185. ரமலான் மாதத்தில் "லைலத்துல் கத்ர்" என்றும் கண்ணியமிக்க இரவில்தான் முஹம்மது நபியின்மீது குர்ஆன் இறங்கத் தொடங்கியது. அல்லாஹ் அதனை மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கினான். அதில் நேர்வழி மற்றும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்தல் ஆகிய தெளிவான ஆதாரங்களும், உள்ளன. எனவே ரமலான் மாதத்தை அடைபவர் பயணத்தில் அல்லாமல், ஆரோக்கியமாக இருந்தால் அவர்மீது நோன்பு நோற்பது கடமையாகும். உங்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ பயணியாகவோ இருப்பவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னுடைய சட்டங்களின்மூலம் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். இது ஏனெனில், நீங்கள் நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை நிறைவுபடுத்துவதற்காகவும், அதன் முடிவில் வருகின்ற பெருநாளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கவும் அதனை முழுமைப்படுத்தவும் உதவியமைக்காக அவனைத் தக்பீர் கூறி புகழ்வதற்காகவும் அவன் விரும்பும் மார்க்கத்தின்பால் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும்தான்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• فَضَّلَ الله شهر رمضان بجعله شهر الصوم وبإنزال القرآن فيه، فهو شهر القرآن؛ ولهذا كان النبي صلى الله عليه وسلم يتدارس القرآن مع جبريل في رمضان، ويجتهد فيه ما لا يجتهد في غيره.
1. குர்ஆனை இறக்கி நோன்பை விதியாக்கி அல்லாஹ் ரமலான் மாதத்தை சிறப்பித்துள்ளான். இது குர்ஆனுடைய மாதமாகும். எனவேதான் நபியவர்கள் இந்த மாதத்தில் ஜீப்ரீலுடன் சேர்ந்து குர்ஆனைப் படிப்பவர்களாக இருந்தார்கள். ஏனைய மாதங்களில் செய்யாதளவு அதிக வணக்கங்களில் இந்த மாதத்தில் ஈடுபடுவார்கள்.

• شريعة الإسلام قامت في أصولها وفروعها على التيسير ورفع الحرج، فما جعل الله علينا في الدين من حرج.
2. இஸ்லாமிய அடிப்படைகளும் கிளைச்சட்டங்களும் இலகுபடுத்தலையும் மற்றும் சங்கடங்களை அகற்றுவதையும் அடிப்படையாகக்கொண்டே அமைந்துள்ளன. அல்லாஹ் இந்த மார்க்கத்தில் நமக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

• قُرْب الله تعالى من عباده، وإحاطته بهم، وعلمه التام بأحوالهم؛ ولهذا فهو يسمع دعاءهم ويجيب سؤالهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு மிக நெருக்கமாக அவர்களைச் சூழ்ந்துள்ளான். மேலும் அவர்களது விடயங்களை நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளான். எனவேதான் அவர்களது பிரார்த்தனையை செவியேற்று அவர்களது வேண்டுதலுக்கு பதிலளிக்கின்றான்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (185) அத்தியாயம்: அல்பகரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக