Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அஷ்ஷுஅரா   வசனம்:
مَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یُمَتَّعُوْنَ ۟ؕ
26.207. அவர்கள் உலகில் அனுபவித்துக் கொண்டிருந்த இன்பங்களில் எது அவர்களுக்குப் பயனளிக்கும். அவையனைத்தும் முடிந்துவிட்டன. எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
அரபு விரிவுரைகள்:
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۟
26.208. தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்காமல் நாம் எந்த சமூகத்தையும் அழித்ததில்லை.
அரபு விரிவுரைகள்:
ذِكْرٰی ۛ۫— وَمَا كُنَّا ظٰلِمِیْنَ ۟
26.209. உபதேசம், ஞாபகமூட்டலாக இருக்கும்பொருட்டு அவ்வாறு செய்தோம். நாம் தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்கிய பின்னர் அவர்களைத் தண்டிப்பதனால் நாம் அநீதி இழைப்போரல்ல.
அரபு விரிவுரைகள்:
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّیٰطِیْنُ ۟ۚ
26.210. ஷைத்தான்கள் இந்த குர்ஆனைக் கொண்டு தூதரின் உள்ளத்தில் இறங்குவதில்லை.
அரபு விரிவுரைகள்:
وَمَا یَنْۢبَغِیْ لَهُمْ وَمَا یَسْتَطِیْعُوْنَ ۟ؕ
26.211. தூதரின் உள்ளத்தில் அல்குர்ஆனை எடுத்துக்கொண்டு இறங்குவது ஷைத்தான்களுக்குத் தகுமானதன்று. அவர்கள் அதற்கு சக்திபெறவும் மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۟ؕ
26.212. அவர்களால் அது முடியாது. ஏனெனில் அவர்கள் வானத்தில் குறித்த இடத்தை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். பிறகு எவ்வாறு அவர்களால் வானத்தை அடைய முடியும்? அங்கிருந்து வஹியைக் கொண்டு இறங்க முடியும்?
அரபு விரிவுரைகள்:
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِیْنَ ۟ۚ
26.213. அல்லாஹ்வுடன் அவனுக்கு இணையாக வேறு கடவுளை வணங்காதே. அதனால் நீ வேதனை செய்யப்பட்டவர்களில் ஒருவராகிவிடுவாய்.
அரபு விரிவுரைகள்:
وَاَنْذِرْ عَشِیْرَتَكَ الْاَقْرَبِیْنَ ۟ۙ
26.214. -தூதரே!- உம் சமூகத்தில் உம் நெருங்கிய உறவினர்கள் இணைவைப்பில் நிலைத்திருந்து, அல்லாஹ்வின் வேதனை அவர்களைத் தாக்காதிருப்பதற்காக ஒவ்வொருவராக அவர்களை எச்சரிக்கை செய்வீராக.
அரபு விரிவுரைகள்:
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
26.215. சொல்லால், செயலால் உம்மைப் பின்பற்றும் உமக்கு அருகில் உள்ள நம்பிக்கையாளர்களிடம் நீர் மென்மையாகவும், அன்போடும் நடந்துகொள்ளும்.
அரபு விரிவுரைகள்:
فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟ۚ
26.216. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துமாறும் வழிப்படுமாறும் நீர் அவர்களுக்கு இட்ட கட்டளைக்கு அவர்கள் பதிலளிக்காமல் உமக்கு மாறு செய்தால் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களைவிட்டும் பாவங்களைவிட்டும் நான் நீங்கிவிட்டேன்.”
அரபு விரிவுரைகள்:
وَتَوَكَّلْ عَلَی الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
26.217. உம்முடைய எல்லா விவகாரங்களிலும் தன் எதிரிகளைத் தண்டிக்கும் யாவற்றையும் மிகைத்தவனை சார்ந்திருப்பீராக. அவன் அவர்களில் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களின் மீது மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
அரபு விரிவுரைகள்:
الَّذِیْ یَرٰىكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
26.218. நீர் தொழுகைக்காக எழும்போது அவன் உம்மைப் பார்க்கிறான்.
அரபு விரிவுரைகள்:
وَتَقَلُّبَكَ فِی السّٰجِدِیْنَ ۟
26.219. தொழுபவர்களுடன் நீர் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்வதையும் அவன் பார்க்கிறான். நீர் செய்யும் செயல்களோ மற்றவர்கள் செய்யும் செயல்களோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
அரபு விரிவுரைகள்:
اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
26.220. நிச்சயமாக நீர் உம் தொழுகையில் ஓதக்கூடிய குர்ஆனையும் திக்ருகளையும் அவன் செவியேற்கக்கூடியவன். உம் எண்ணங்களையும் அவன் நன்கறிந்தவன்.
அரபு விரிவுரைகள்:
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰی مَنْ تَنَزَّلُ الشَّیٰطِیْنُ ۟ؕ
26.221. நீங்கள் இந்த குர்ஆனை எடுத்துக்கொண்டு இறங்குவதாக எண்ணும் ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
அரபு விரிவுரைகள்:
تَنَزَّلُ عَلٰی كُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
26.222. அதிகம் பொய் சொல்லக்கூடிய, அதிகமாக பாவங்கள் புரியக்கூடிய ஒவ்வொரு சோதிடர்களின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
یُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۟ؕ
26.223. ஷைதான்கள் வானுலகில் திருட்டுத்தனமாக செய்திகளைச் செவியேற்கின்றார்கள். அவற்றை தன் தோழர்களான சோதிடர்களில் காதுகளில் போட்டுவிடுகிறார்கள். பெரும்பாலான சோதிடர்கள் பொய்யர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு விடயத்தில் உண்மை கூறினாலும் அதனோடு நூறு பொய்களை சொல்லிவிடுகிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَالشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۟ؕ
26.224. முஹம்மது கவிஞர்களில் உள்ளவர்தான் என நீங்கள் கூறும் கவிஞர்களை நேரான பாதையை விட்டும் வழிதவறியவர்களே பின்பற்றுகிறார்கள். அவர்கள் கவிஞர்கள் கூறும் கவிதைகளை அறிவிக்கிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
اَلَمْ تَرَ اَنَّهُمْ فِیْ كُلِّ وَادٍ یَّهِیْمُوْنَ ۟ۙ
26.225. -தூதரே!- நிச்சயமாக அவர்களின் வழிகேட்டின் வெளிப்பாடுதான் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அவர்கள் தடுமாறித் திரிவதாகும் என்பதை நீர் பார்க்கவில்லையா? சில சமயத்தில் புகழ்கிறார்கள், சில சமயத்தில் இகழ்கிறார்கள். சில சமயங்களில் இவையிரண்டையும் தவிர மற்ற விஷயங்களையும் கூறுகிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَاَنَّهُمْ یَقُوْلُوْنَ مَا لَا یَفْعَلُوْنَ ۟ۙ
26.226. மேலும் அவர்கள் செய்யாததை இவ்வாறு செய்தோம் என பொய் கூறுகிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ— وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
26.227. ஆயினும் நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து, அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர்ந்து அநீதி இழைக்கப்பட்டபிறகு அல்லாஹ்வின் எதிரிகளுக்கு பதில் கொடுத்த கவிஞர்களைத்தவிர. ஹஸ்ஸான் இப்னு சாபித் போன்றவர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அநியாயம் இழைக்கப்பட்டு அவனுடைய அடியார்களின் மீது வரம்புமீறியவர்கள் தாம் எங்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள். அவர்கள் கடுமையான நிலைப்பாடு, துல்லியமான விசாரணையின் பக்கமே திரும்பவேண்டும்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• إثبات العدل لله، ونفي الظلم عنه.
1. அல்லாஹ்வின் நீதியை நிரூபித்து அவனை விட்டும் அநீதியை மறுத்தல்.

• تنزيه القرآن عن قرب الشياطين منه.
2. ஷைத்தான்கள் நெருங்க முடியாதவாறு குர்ஆன் பரிசுத்தப்படுத்தப்படல்.

• أهمية اللين والرفق للدعاة إلى الله.
3. அல்லாஹ்வின் பால் மக்களை அழைப்பவருக்கு, மென்மையும், பணிவும் இன்றியமையாதது.

• الشعر حَسَنُهُ حَسَن، وقبيحه قبيح.
4. நல்ல கவிதைகள் விரும்பத்தக்கவை. தீய கவிதைகள் வெறுக்கத்தக்கவை.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அஷ்ஷுஅரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக