அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (22) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ— وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
3.22. இந்தப் பண்புகளை உடையவர்களின் செயல்கள் வீணாகிவிட்டன. அவர்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளாததால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவற்றைக்கொண்டு அவர்களால் பயனடைய முடியாது. மறுமைநாளின் வேதனையை விட்டும் காக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• من أعظم ما يُكفِّر الذنوب ويقي عذاب النار الإيمان بالله تعالى واتباع ما جاء به الرسول صلى الله عليه وسلم.
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுவதே மிகப் பிரதானமாக பாவங்களுக்குப் பரிகாரமாக அமைவதோடு நரக வேதனையை விட்டும் பாதுகாக்கும்.

• أعظم شهادة وحقيقة هي ألوهية الله تعالى ولهذا شهد الله بها لنفسه، وشهد بها ملائكته، وشهد بها أولو العلم ممن خلق.
2. மிகப்பெரிய உண்மையும் சாட்சியமும், "வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே"என்பதாகும். எனவேதான் அல்லாஹ்வே இதற்கு சாட்சி கூறுகின்றான். அவனது படைப்பினங்களில் வானவர்களும் கல்வியாளர்களும் சாட்சி கூறுகிறார்கள்.

• البغي والحسد من أعظم أسباب النزاع والصرف عن الحق.
3. சர்ச்சைக்கும், சத்தியத்தை விட்டும் திரும்புதற்கும் முக்கிய காரணிகள் அத்துமீறலும் பொறாமையுமே.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (22) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக