Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்மாயிதா   வசனம்:
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْلَمُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
5.104. சில கால்நடைகளைத் தடைசெய்வதன் மூலம் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறும் இவர்களிடம், “அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் அறிந்துகொள்வதற்காக அல்லாஹ் இறக்கிய குர்ஆனின் பக்கமும் தூதரின் நடைமுறையின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால், “எங்கள் முன்னோர்களிடமிருந்து நாங்கள் அனந்தரமாகப் பெற்ற கொள்கைகளும், வார்த்தைகளும் நடைமுறைகளுமே, எங்களுக்குப் போதுமானவை” என்று கூறுகிறார்கள். அவை எவ்வாறு அவர்களுக்குப் போதுமானதாக இருக்க முடியும்? அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவுமல்லவா இருந்தனர்! எனவே அவர்களையும் விட மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களைப் பின்பற்றமாட்டார்கள். அவர்கள் மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அரபு விரிவுரைகள்:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلَیْكُمْ اَنْفُسَكُمْ ۚ— لَا یَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَیْتُمْ ؕ— اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
5.105. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்; உங்களை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மக்களின் வழிகேட்டால் உங்களுக்குத் தீங்கு நேராது. நீங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளிகள் அல்ல. நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நீங்களை நேர்வழியில் இருப்பதற்கான அடையாளமேயாகும். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். இவ்வுலகில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
அரபு விரிவுரைகள்:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَیْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِیْنَ الْوَصِیَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَیْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِیْبَةُ الْمَوْتِ ؕ— تَحْبِسُوْنَهُمَا مِنْ بَعْدِ الصَّلٰوةِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِیْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ۙ— وَلَا نَكْتُمُ شَهَادَةَ ۙ— اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِیْنَ ۟
5.106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு மரணத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டால் உயில் எழுதும்போது முஸ்லிம்களில் நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தில் இருந்து மரணம் சமீபித்து இரு முஸ்லிமான சாட்சிகள் கிடைக்காவிட்டால் நிராகரிப்பாளர்களிலிருந்து இரு ஆண்களைச் சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்விருவரின் சாட்சியங்களில் சந்தேகம் ஏற்பட்டால் ஒரு தொழுகைக்குப் பின் அவர்களை அமரவைத்து “தங்களின் சாட்சியத்தை எதற்குப் பதிலாகவும் நாங்கள் விற்றுவிட மாட்டோம், எந்த உறவினருக்குச் சார்பாகவும் நடக்கமாட்டோம் தம்மிடமுள்ள அல்லாஹ்வுக்குரிய எந்தவொரு சாட்சியத்தையும் நாங்கள் மறைத்துவிட மாட்டோம், அவ்வாறு செயல்பட்டால் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட பாவிகள்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து வாக்குறுதி பெற்றுக் கொள்ளுங்கள்.
அரபு விரிவுரைகள்:
فَاِنْ عُثِرَ عَلٰۤی اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ یَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِیْنَ اسْتَحَقَّ عَلَیْهِمُ الْاَوْلَیٰنِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَیْنَاۤ ۖؗ— اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
5.107. சத்தியம் பெற்ற பின்னர் அவர்கள் பொய் சாட்சி அல்லது பொய்ச் சத்தியம் செய்ததாக அல்லது தமது சாட்சியில் மோசடி இழைத்துள்ளதாகத் தெரியவந்தால் அவர்களுக்குப் பகரமாக இறந்தவரின் நெருங்கிய சொந்தங்களிலிருந்து வேறு இருவர் உண்மையான விடயத்துக்கு சாட்சி கூறட்டும் அல்லது சத்தியம் செய்யட்டும். அவர்கள், ‘அவ்விருவரும் தாம் உண்மையாளர்கள் நம்பிக்கையானவர்கள் எனக் கூறிய சாட்சியத்தை விடவும் அவர்கள் பொய்யர்கள் மோசடிசெய்பவர்கள் என்ற நமது சாட்சியே சிறந்தது நாம் பொய்ச் சத்தியம் செய்யவில்லை.நாம் பொய் சாட்சி கூறினால் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய அக்கிரமக்காரர்களாகிவிடுவோம்” என அவர்கள் சத்தியம் செய்யட்டும்.
அரபு விரிவுரைகள்:
ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰی وَجْهِهَاۤ اَوْ یَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَیْمَانٌ بَعْدَ اَیْمَانِهِمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
108. சாட்சியத்தில் சந்தேகம் ஏற்படும் போது தொழுகைக்குப் பிறகு இரு சாட்சிகளிடமும் சத்தியம் பெறுவது இருவரின் சாட்சியங்களை மறுப்பது ஆகியவையே அவ்விருவரும் மார்க்க முறைப்படி சாட்சியம் கூறுவதற்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் சாட்சியத்தை திரித்துவிடவோ மாற்றிவிடவோ அதில் துரோகமிழைத்துவிடவோ மாட்டார்கள். அனந்தரக்காரர்களின் சத்தியங்களினால் தங்களின் சத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுமோ தாங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சுவதற்கும் இதுதான் சிறந்த வழிமுறையாகும். சாட்சியத்திலும் சத்தியத்திலும் பொய் கூறுவதையும் மோசடி செய்வதையும் தவிர்த்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்களைச் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவிசாய்த்துக் கேளுங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• إذا ألزم العبد نفسه بطاعة الله، وأمر بالمعروف ونهى عن المنكر بحسب طاقته، فلا يضره بعد ذلك ضلال أحد، ولن يُسْأل عن غيره من الناس، وخاصة أهل الضلال منهم.
1. அடியான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தன்னால் இயன்றவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்டால் மற்றவர்களின் வழிகேடு அவனுக்கு எந்த தீங்கையும் அளிக்காது. அவனிடம் ஏனைய மனிதர்களைக் குறித்து குறிப்பாக வழிகேடர்களைக் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது.

• الترغيب في كتابة الوصية، مع صيانتها بإشهاد العدول عليها.
2. உயிலை எழுதுமாறும் அதற்கு நீதிமிக்க சாட்சிகளை ஏற்படுத்தி அதனைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

• بيان الصورة الشرعية لسؤال الشهود عن الوصية.
3. உயிலைக் குறித்து சாட்சிகளிடம் விசாரிக்கும் முறை குறித்து மார்க்க வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்மாயிதா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக