அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்இஸ்ரா

external-link copy
1 : 17

سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟

புனிதமான மஸ்ஜிதிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை (முஹம்மது நபி)க்கு தன் அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) காண்பிப்பதற்காக அவரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ம் மஸ்ஜி)தைச் சுற்றி அருள்வளம் புரிந்தோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
2 : 17

وَاٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِیْ وَكِیْلًا ۟ؕ

மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
3 : 17

ذُرِّیَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؕ— اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ۟

நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றியவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார். info
التفاسير:

external-link copy
4 : 17

وَقَضَیْنَاۤ اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ فِی الْكِتٰبِ لَتُفْسِدُنَّ فِی الْاَرْضِ مَرَّتَیْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِیْرًا ۟

இஸ்ராயீலின் சந்ததிக(ளே! உங்க)ளுக்கு நிச்சயம் பூமியில் இருமுறை விஷமம் செய்வீர்கள்; (இறைவனுக்கு எதிராக) நிச்சயம் பெரும் பெருமை கொள்வீர்கள் என்று வேதத்தில் அறிவித்தோம். info
التفاسير:

external-link copy
5 : 17

فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰىهُمَا بَعَثْنَا عَلَیْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّیَارِ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا ۟

அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வரும்போது கடுமையான பலமுடைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது. info
التفاسير:

external-link copy
6 : 17

ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَیْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِیْرًا ۟

பிறகு, உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை திருப்பினோம். செல்வங்கள் இன்னும் ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
7 : 17

اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُمْ ۫— وَاِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕ— فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ لِیَسُوْٓءٗا وُجُوْهَكُمْ وَلِیَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّلِیُتَبِّرُوْا مَا عَلَوْا تَتْبِیْرًا ۟

நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே. (அவைதான் துன்பப்படும்.) மறுமுறை வந்தபோது, (மீண்டும் அந்த அடியார்கள்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்கும், முதல் முறை மஸ்ஜிதில் நுழைந்தவாறு (இம்முறையும்) அதில் நுழைவதற்கும், அவர்கள் மிகைத்தவற்றையெல்லாம் அழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் அனுப்பினோம்). info
التفاسير: