Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu'l-Enbiyâ   Ayet:

ஸூரா அல்அன்பியா

Surenin hedefleri:
إثبات الرسالة وبيان وحدة غاية الأنبياء وعناية الله بهم.
இறைத்தூது உண்டென்பதை நிறுவுதலும் நபிமார்களின் இலக்கையும் அவர்களுக்கான அல்லாஹ்வின் பராமரிப்பையும் தெளிவுபடுத்தல்

اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۟ۚ
21.3. மறுமை நாளில் தமது செயல்களுக்காக விசாரணை நடைபெறுவது மக்களை நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ உலகில் ஈடுபாடுகொண்டதனால் மறுமையைப் புறக்கணித்தவர்களாக அலட்சியத்தில் உள்ளார்கள்.
Arapça tefsirler:
مَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ یَلْعَبُوْنَ ۟ۙ
21.2. தமது இறைவனிடமிருந்து புதிதாக எந்தவொரு குர்ஆன் வசனம் வந்தாலும் அதனை அவர்கள் பயனற்ற முறையிலேயே செவியேற்கிறார்கள். மாறாக அவர்கள் விளையாட்டாகவும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்தாதவர்களாகவுமே செவியேற்கிறார்கள்.
Arapça tefsirler:
لَاهِیَةً قُلُوْبُهُمْ ؕ— وَاَسَرُّوا النَّجْوَی ۖۗ— الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ— اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
21.3. அவர்களின் உள்ளங்கள் அதனைவிட்டும் அலட்சியமாக இருக்கும் நிலையிலேயே செவியேற்கிறார்கள். நிராகரித்து அநியாயக்காரர்களான இவர்கள் தங்களிடையே இரகசியமாக, “தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர் நிச்சயமாக உங்களைப்போன்ற மனிதர்தானே. உங்களைவிட அவருக்கு எந்த சிறப்பும் இல்லையே. அவர் கொண்டுவந்தது சூனியமாகும். நிச்சயமாக அவர் உங்களைப்போன்ற மனிதர்தான், அவர் கொண்டுவந்தது சூனியம்தான் என்பதை அறிந்துகொண்டே அவரைப் பின்பற்றுகிறீர்களா?” என்று கூறிக்கொள்கிறார்கள்.
Arapça tefsirler:
قٰلَ رَبِّیْ یَعْلَمُ الْقَوْلَ فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؗ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
21.4. நபியவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இரகசியமாகக் கூறுவதை என் இறைவன் அறிவான். வானங்களிலும் பூமியிலும் பேசக்கூடியவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்தையும் அவன் அறிவான். அவன் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ— فَلْیَاْتِنَا بِاٰیَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ۟
21.5. மாறாக முஹம்மது கொண்டுவந்ததைக் குறித்து அவர்கள் தடுமாற்றத்தில் இருந்தார்கள். சில சமயங்களில் கூறினார்கள்: “இவை குழப்பமான கனவுகள். இவற்றிற்கு எந்த விளக்கமும் கூறமுடியாது, என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இல்லை, இதற்கு ஒரு அடிப்படையே இல்லாமல் இதனைப் புனைந்து கூறியுள்ளார், என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இவர் ஒரு கவிஞர், என்று. அவர் தம் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் முந்தைய தூதர்கள் கொண்டு வந்ததைப்போல ஒரு அற்புதத்தைக் கொண்டு வரட்டும். முந்தைய தூதர்கள் அற்புதங்களைக் கொண்டுவந்தார்கள். உதாரணமாக மூஸாவின் கைத்தடி, ஸாலிஹின் பெண் ஒட்டகம்.
Arapça tefsirler:
مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا ۚ— اَفَهُمْ یُؤْمِنُوْنَ ۟
21.6. இவ்வாறு ஆலோசனை கூறும் இவர்களுக்கு முன்னால் இவர்களைப்போன்று சான்றுகள் இறக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை கூறி, அவை வழங்கப்பட்ட எந்த ஊர்வாசிகளும் நம்பிக்கைகொள்ளவில்லை. மாறாக அவர்கள் அவற்றை பொய்பித்துவிட்டார்கள் அதனால் அவர்களை நாம் அழித்தோம். இவர்கள் மட்டும் நம்பிக்கைகொள்ளவா போகிறார்கள்?
Arapça tefsirler:
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
21.7. -தூதரே!- நாம் உமக்கு முன்னர் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக அனுப்பி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். நாம் வானவர்களைத் தூதர்களாக அனுப்பவில்லை. நீங்கள் அதனை அறியாதவர்களாக இருந்தால் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
Arapça tefsirler:
وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا یَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِیْنَ ۟
21.8. நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்ணாத சடலமாக ஆக்கவில்லை. மாறாக மற்றவர்களைப் போல அவர்களும் உணவு உண்டார்கள். அவர்கள் உலகில் மரணிக்காமல் நிலைத்திருப்பவர்களுமல்லர்.
Arapça tefsirler:
ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَیْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِیْنَ ۟
21.9. பின்னர் நாம் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். அவர்களையும் நாம் நாடிய நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றி அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
Arapça tefsirler:
لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ كِتٰبًا فِیْهِ ذِكْرُكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
21.10. நாம் உங்களுக்கு குர்ஆனை இறக்கியுள்ளோம். நீங்கள் அதனை உண்மைப்படுத்தி அதன்படி செயல்பட்டால் அதில் உங்களுக்கு கண்ணியமும் பெருமையும் உள்ளது. அதனை நீங்கள் புரியமாட்டீர்களா? எனவே அதனை நம்பிக்கைகொண்டு, அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதன் பால் விரையுங்கள்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• قُرْب القيامة مما يستوجب الاستعداد لها.
1. மறுமை நாள் நெருங்கி வருவது. அதற்காக முன்னேற்பாடுகள் செய்வதைக் கட்டாயமாக்குகின்றது.

• انشغال القلوب باللهو يصرفها عن الحق.
2. மனம் வீணான விஷயங்களில் ஈடுபாடு கொள்வது சத்தியத்தைவிட்டும் திருப்பிவிடுகிறது.

• إحاطة علم الله بما يصدر من عباده من قول أو فعل.
3. அல்லாஹ் அடியார்களின் சொல், செயலை சூழ்ந்து அறிந்துள்ளான்.

• اختلاف المشركين في الموقف من النبي صلى الله عليه وسلم يدل على تخبطهم واضطرابهم.
4. நபியவர்களைக் குறித்த இணைவைப்பாளர்களின் முரணான நிலைப்பாடுகள் அவர்களின் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் காட்டுகிறது.

• أن الله مع رسله والمؤمنين بالتأييد والعون على الأعداء.
5. அல்லாஹ் தூதர்களுடனும் விசுவாசிகளுடனும் ஆதரவளித்துக்கொண்டும் எதிரிகளுக்கு எதிராக உதவி செய்துகொண்டும் இருக்கின்றான்.

• القرآن شرف وعز لمن آمن به وعمل به.
6. அல்குர்ஆன் அதனை நம்பி அதன்படி செயற்பட்டவருக்கு சிறப்பாகவும் கண்ணியமாகவும் உள்ளது.

وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْیَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
21.11. நிராகரித்து, அநீதியிழைத்ததனால் எவ்வளவோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களுக்குப் பின்னர் வேறொரு சமூகத்தை உருவாக்கினோம்.
Arapça tefsirler:
فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَرْكُضُوْنَ ۟ؕ
21.12. அழிக்கப்படுவோர் அடியோடு அழிக்கும் நம்முடைய வேதனையைக் கண்டபோது அழிவிலிருந்து தப்ப, தமது ஊரைவிட்டு விரைந்து ஓடினார்கள்.
Arapça tefsirler:
لَا تَرْكُضُوْا وَارْجِعُوْۤا اِلٰی مَاۤ اُتْرِفْتُمْ فِیْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ۟
21.13. பரிகாசமாக அவர்கள் அழைக்கப்பட்டார்கள்: “ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த உல்லாச வாழ்வின் பக்கம், உங்கள் வசிப்பிடங்களின் பக்கம் திரும்புங்கள். உங்கள் உலகிலிருந்து நீங்கள் எதையேனும் கேட்கப்படலாம்.”
Arapça tefsirler:
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
21.14. இந்த அநியாயக்காரர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொண்டவர்களாகக் கூறினார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட இழப்பே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அநியாயக்காரர்களாகத்தான் இருந்தோம்.”
Arapça tefsirler:
فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰی جَعَلْنٰهُمْ حَصِیْدًا خٰمِدِیْنَ ۟
21.15. அவர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக் கொள்வதும் தங்களுக்கு எதிராக அழிவை வேண்டுவதுமே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் பிரார்த்தனையாக இருந்தது. நாம் அவர்களை அறுவடை செய்யப்பட்ட பயிரைப்போன்று, உயிரற்ற ஜடங்களாக ஆக்கிவிடும் வரை அவ்வாறே கூறிக்கொண்டிருந்தார்கள்.
Arapça tefsirler:
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
21.16. வானத்தையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக நம்முடைய வல்லமையை அறிவிப்பதற்காகவே நாம் அவற்றைப் படைத்துள்ளோம்.
Arapça tefsirler:
لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ ۖۗ— اِنْ كُنَّا فٰعِلِیْنَ ۟
21.17. நாம் மனைவியையோ மகனையோ ஏற்படுத்த நாடியிருந்தால் நம்மிடம் இருப்பவற்றிலிருந்து எடுத்திருப்போம். அதனை விட்டும் நாம் தூய்மையானவர்கள் என்பதனால் நாம் அதனைச் செய்பவர்களல்ல.
Arapça tefsirler:
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَی الْبَاطِلِ فَیَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ— وَلَكُمُ الْوَیْلُ مِمَّا تَصِفُوْنَ ۟
21.18. மாறாக நாம் நம் தூதருக்கு அறிவிக்கும் சத்தியத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் அசத்தியத்தைத் தாக்குகின்றோம். அது அசத்தியத்தை அடித்து நொறுக்கி விடுகிறது. அசத்தியம் அழிந்துவிடுகிறது. -அல்லாஹ்வுக்கு மனைவியோ மகனோ உண்டு என்று கூறக்கூடியவர்களே!- அவனுக்குத் தகுதியில்லாததைக்கொண்டு நீங்கள் வர்ணிப்பதால் உங்களுக்கு அழிவுதான் உண்டாகும்.
Arapça tefsirler:
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
21.19. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனிடம் உள்ள வானவர்கள் அவனை கர்வத்தினால் வணங்காமலிருக்கவும் மாட்டார்கள். வணங்கியதால் களைப்படைந்துவிடவும் மாட்டார்கள்.
Arapça tefsirler:
یُسَبِّحُوْنَ الَّیْلَ وَالنَّهَارَ لَا یَفْتُرُوْنَ ۟
21.20. எப்பொழுதும் அவனைப் புகழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் சோர்வடைவதில்லை.
Arapça tefsirler:
اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ یُنْشِرُوْنَ ۟
21.21. மாறாக இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வாறு செய்ய இயலாத தெய்வங்களை எவ்வாறு அவர்கள் வணங்குகிறார்கள்?!
Arapça tefsirler:
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ— فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
21.22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அல்லாத பல தெய்வங்கள் இருந்தால் அவைகளின் ஆட்சிக்கான போராட்டத்தினால் அவ்விரண்டும் சீர்கெட்டுப் போயிருக்கும். ஆனால் நடைமுறை அதற்கு மாற்றமாகவே உள்ளது. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என இணைவைப்பாளர்கள் பொய்யாக கூறும் வர்ணனைகளை விட்டும் அர்ஷின்அதிபதியான அல்லாஹ் தூய்மையானவன்.
Arapça tefsirler:
لَا یُسْـَٔلُ عَمَّا یَفْعَلُ وَهُمْ یُسْـَٔلُوْنَ ۟
21.23. ஆட்சியதிகாரத்திலும் விதியை நிர்ணயிப்பதிலும் அல்லாஹ் தனித்தவன். அவன் ஏற்படுத்திய விதியை, தீர்ப்பைக் குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அவன் தன் அடியார்களின் செயல்களைக்குறித்து கேள்வி கேட்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ— هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ— الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟
21.24. மாறாக அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அவை வணக்கத்திற்கு தகுதியானவை என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். என்மீது இறக்கப்பட்ட இந்த வேதத்திலும் முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக பெரும்பான்மையான இணைவைப்பாளர்கள் அறியாமையையும், குருட்டுத்தனமாக பின்பற்றுவதையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் புறக்கணிக்கிறார்கள்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الظلم سبب في الهلاك على مستوى الأفراد والجماعات.
1. தனிமனிதர்களானாலும், சமூகங்களானாலும் அநியாயம் இழைப்பது அழிவிற்குக் காரணமாக அமைகிறது.

• ما خلق الله شيئًا عبثًا؛ لأنه سبحانه مُنَزَّه عن العبث.
2. அல்லாஹ் எந்த ஒன்றையும் வீணாகப் படைக்கவில்லை. நிச்சயமாக அவன் வீணாகப் படைப்பதைவிட்டும் தூய்மையானவன்.

• غلبة الحق، ودحر الباطل سُنَّة إلهية.
3. சத்தியம் வெற்றி பெறுவதும் அசத்தியத்தை அழிப்பதும் இறை நியதியாகும்.

• إبطال عقيدة الشرك بدليل التَّمَانُع.
4. “பல தெய்வங்களை வணக்கத்திற்குரியவையாக இருந்தால் வானமும் பூமியும் சிரழிந்துவிடும்” என்ற ஆதாரத்தினடிப்படையில் இணைவைப்புக்கொள்கை தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது.

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِیْۤ اِلَیْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ ۟
21.25. -தூதரே!- உமக்கு முன்னால் அனுப்பிய தூதர்கள் அனைவருக்கும், “நிச்சயமாக என்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. எனவே என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள்” என்றுதான் வஹி அறிவித்தோம்.
Arapça tefsirler:
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ— بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۟ۙ
21.26. இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் வானவர்களை மகள்களாக ஆக்கிக் கொண்டான், என்று.” அவர்கள் கூறும் பொய்களைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மாறாக வானவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமான, கண்ணியமான அடியார்களாவர்.
Arapça tefsirler:
لَا یَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ یَعْمَلُوْنَ ۟
21.27. அவர்கள் தங்கள் இறைவனை முந்திப் பேச மாட்டார்கள். அவன் கட்டளையிடும்வரை எதுவும் பேச மாட்டார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைப்படியே செயல்படுகிறார்கள். அவனது கட்டளைக்கு மாறுசெய்யமாட்டார்கள்.
Arapça tefsirler:
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یَشْفَعُوْنَ ۙ— اِلَّا لِمَنِ ارْتَضٰی وَهُمْ مِّنْ خَشْیَتِهٖ مُشْفِقُوْنَ ۟
21.28. அவன் அவர்களின் முந்தைய மற்றும் பிந்தைய செயல்கள் அனைத்தையும் அறிவான். யாருக்குப் பரிந்துரை கிடைக்க வேண்டுமென விரும்புகிறானோ அவனுக்கு அவனுடைய அனுமதியின்றி அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். அவர்கள் அவன் மீதுள்ள அச்சத்தால் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் அவனுடைய கட்டளைக்கும், விலக்கல்களுக்கும் மாறாகச் செயல்படுவதில்லை.
Arapça tefsirler:
وَمَنْ یَّقُلْ مِنْهُمْ اِنِّیْۤ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِیْهِ جَهَنَّمَ ؕ— كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟۠
21.29. வானவர்களில் யாரேனும், “அல்லாஹ்வை விடுத்து நான்தான் இறைவனாவேன்” என்று கூறியதாக வைத்துக்கொண்டால் நிச்சயமாக நாம் அதற்குத் தண்டனையாக மறுமை நாளில் நிரந்தரமான நரக வேதனையை அளிப்போம். இவ்வாறே நாம் அல்லாஹ்வை நிராகரித்து இணைவைக்கும் அநியாயக்காரர்களுக்கு தண்டனை வழங்குகிறோம்.
Arapça tefsirler:
اَوَلَمْ یَرَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ— وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَیْءٍ حَیٍّ ؕ— اَفَلَا یُؤْمِنُوْنَ ۟
21.30. நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. மழை இறங்குவதற்கு அவற்றிற்கிடையே எந்த இடைவெளியும் இருக்கவில்லை. எனவே நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் நாம் விலங்கு அல்லது தாவரம் ஆகிய ஒவ்வொரு பொருளையும் வானத்திலிருந்து இறங்கும் நீரால் படைத்துள்ளோம் என்பதையும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அறியவில்லையா? அவற்றைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ் ஒருவன் மீது நம்பிக்கைகொள்ளமாட்டார்களா?
Arapça tefsirler:
وَجَعَلْنَا فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِهِمْ وَجَعَلْنَا فِیْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
21.31. பூமி அதிலுள்ளவர்களினால் ஆட்டம் காணாமல் இருப்பதற்காக நாம் அதில் உறுதியான மலைகளை உருவாக்கியுள்ளோம். அவர்கள் தமது பயணங்களில் தாங்கள் விரும்பும் இடங்களுக்கான வழிகாட்டலைப் பெறும் பொருட்டு அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.
Arapça tefsirler:
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ— وَّهُمْ عَنْ اٰیٰتِهَا مُعْرِضُوْنَ ۟
21.32. தூண்களின்றி விழுந்துவிடுவதிலிருந்தும், திருட்டுத்தனமாக ஒட்டுக்கேட்பதிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட கூரையாக நாம் வானத்தை அமைத்துள்ளோம். இணைவைப்பாளர்கள் வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் போன்ற சான்றுகளைப் புறக்கணித்து படிப்பினை பெறாமல் இருக்கிறார்கள்.
Arapça tefsirler:
وَهُوَ الَّذِیْ خَلَقَ الَّیْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
21.33. அல்லாஹ்தான் இரவை ஓய்வெடுப்பதற்காகவும் பகலை சம்பாதிப்பதற்காகவும் அமைத்துள்ளான். அவன் சூரியனை பகலுக்கு ஆதாரமாகவும் சந்திரனை இரவுக்கு ஆதாரமாகவும் அமைத்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் தன் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதைவிட்டு நகர்ந்துவிடுவதுமில்லை, சாய்ந்துவிடுவதுமில்லை.
Arapça tefsirler:
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَ ؕ— اَفَاۡىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ ۟
21.34. -தூதரே!- உமக்கு முன்னால் எந்த மனிதருக்கும் நாம் இந்த வாழ்க்கையில் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வாழ்க்கையில் உமக்கு வழங்கப்பட்ட தவணை நிறைவடைந்து நீர் மரணித்துவிட்டால் அவர்கள் மட்டும் உமக்குப் பிறகு நிரந்தரமாக நிலைத்திருப்பார்களா என்ன? ஒருபோதும் இல்லை.
Arapça tefsirler:
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ— وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً ؕ— وَاِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
21.35. நம்பிக்கைகொண்ட ஆன்மா, நிராகரித்த ஆன்மா என ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் மரணித்தை சுவைத்தே தீர வேண்டும். -மனிதர்களே!- இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு கடமைகளையும் அருட்கொடைகளையும் வேதனைகளையும் அளித்து சோதிக்கின்றோம். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு நம்மிடமே திரும்பிவர வேண்டும். ஏனையவர்களிடம் அல்ல. நாம் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவோம்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• تنزيه الله عن الولد.
1. பிள்ளை ஏற்படுத்திக்கொள்வதைவிட்டு அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல்.

• منزلة الملائكة عند الله أنهم عباد خلقهم لطاعته، لا يوصفون بالذكورة ولا الأنوثة، بل عباد مكرمون.
2. வானவர்கள் அல்லாஹ்வை வணஹ்கி வழிபடுவதற்காகப் படைக்கபட்ட அடியார்கள் என்பதே அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள மதிப்பாகும். அவர்கள் ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ வர்ணிக்கப்பட முடியாதவர்கள். மாறாக அல்லாஹ்வின் கண்ணியமான அடியார்களாவர்.

• خُلِقت السماوات والأرض وفق سُنَّة التدرج، فقد خُلِقتا مُلْتزِقتين، ثم فُصِل بينهما.
3. படிப்படியாகவே வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் சேர்ந்ததாக படைக்கப்பட்டு பின்பு பிரிக்கப்பட்டன.

• الابتلاء كما يكون بالشر يكون بالخير.
4. தீங்கின் மூலம் சோதனை ஏற்படுவது போன்று நலவின் மூலமும் அது ஏற்படும்.

وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ— وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟
21.36. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் உம்மைப் பார்த்தால் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இவர்தான் நீங்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டக்கூடியவரா?” என்று கூறி தங்களைப் பின்பற்றுபவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் உம்மைப் பரிகாசம் செய்வதுடன் அவர்களுக்காக இறக்கப்பட்ட குர்ஆனையும் மறுத்து, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளையும் மறுக்கிறார்கள். எனவே அனைத்துத் தீமைகளும் ஒன்றுசேர இருப்பதால் அவர்களே குறை கூறப்பட மிகத் தகுதியானவர்கள்.
Arapça tefsirler:
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ— سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟
21.37. மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவன் விஷயம் நிகழ்வதற்கு முன்னரே அதை விரைவாக வேண்டுகிறான். அதனால்தான் இணைவைப்பாளர்கள் வேதனையை விரைவாக வேண்டுகிறார்கள். -என் வேதனைக்காக அவசரப்படக்கூடியவர்களே!- நான் உங்களுக்கு நீங்கள் அவசரப்படும் வேதனையைக் காட்டுவேன். எனவே அதனை அவசரமாக வேண்டாதீர்கள்.
Arapça tefsirler:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
21.38. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்கள் அவசரப்பட்டு கேட்கிறார்கள்: -“முஸ்லிம்களே!- இறந்தபின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழும் என்று எங்களுக்கு வாக்களித்த உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது எப்போது நிகழும்? என்பதைக் கூறுங்கள்.”
Arapça tefsirler:
لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
21.39. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளை மறுக்கும் இந்த நிராகரிப்பாளர்கள் அப்போது தங்கள் முகங்களையும் முதுகுகளையும் விட்டு நரக நெருப்பைத் தடுக்க முடியாது என்பதையும் அந்நாளில் அவர்களுக்கு வேதனையை தடுத்து யாரும் உதவிசெய்ய முடியாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமே!. இதை அவர்கள் உறுதியாக அறிந்தால் வேதனையை விரைவாக வேண்ட மாட்டார்கள்.
Arapça tefsirler:
بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
21.40. நெருப்பைக்கொண்டு செய்யப்படும் இந்த வேதனை அவர்கள் அறிந்த நிலையில் அவர்களிடம் வராது. மாறாக திடீரென அவர்களிடம் வரும். அவர்கள் அதனைத் தடுக்க சக்திபெறமாட்டார்கள். பாவமன்னிப்புக் கோரி அருளைப் பெறும் அளவுக்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
Arapça tefsirler:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
21.41. -தூதரே!- உம் சமூகம் உம்மை பரிகாசம் செய்தால் நீர் ஒன்றும் அதற்குப் புதுமையானவர் அல்ல. உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்களை வேதனை சூழ்ந்துகொண்டது. அதனைக் கொண்டு அவர்களது தூதர்கள் அவர்களை அச்சுறுத்திய போது அதனை அவர்கள் இவ்வுலகில் பரிகாசம் செய்துகொண்டிருந்தனர்.
Arapça tefsirler:
قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ— بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟
21.42. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “அளவிலாக் கருணையாளன் உங்கள் மீது வேதனையை இறக்கி உங்களை அழிக்க நாடினால் இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவர் யார்? மாறாக அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரைகளை நினைவுபடுத்துவதையும் அவனின் ஆதாரங்களையும் புறக்கணிக்கிறார்கள். அறியாமையினால் அவர்கள் அவற்றைக்குறித்து எதையும் சிந்திப்பதில்லை.
Arapça tefsirler:
اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ— لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟
21.43. அல்லது நம்முடைய வேதனையிலிருந்து அவர்களை தடுக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவை தங்களுக்குக்கூட நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற மாட்டா. தமக்குக்கூட உதவிசெய்ய முடியாதவை எவ்வாறு மற்றவர்களுக்கு உதவிசெய்யும்? அவர்கள் நம்முடைய வேதனையை விட்டும் பாதுகாக்கப்படவும் மாட்டார்கள்.
Arapça tefsirler:
بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ— اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟
21.44. மாறாக இந்த நிராகரிப்பாளர்களையும் அவர்களின் முன்னோர்களையும் விட்டுப்பிடிக்கும் பொருட்டு நாம் அருட்கொடைகளை அள்ளி வழங்கி நீண்ட காலம் வரைக்கும் அனுபவிக்கச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் ஏமாந்து, தங்களின் நிராகரிப்பில் நிலைத்துவிட்டார்கள். நம் அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்து நம் வேதனையை விரைவாக வேண்டும் இவர்கள், நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறத்திலிருந்து, அதிலுள்ளவர்களை அடக்கி, வென்று, குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதைக் கவனித்து, மற்றவர்களுக்கு ஏற்பட்டது இவர்களுக்கும் ஏற்படாமலிருக்க, படிப்பினை பெறமாட்டாரகளா? இவர்கள் ஒருபோதும் மிகைப்பவர்களல்ல. மாறாக அவர்கள் மிகைக்கப்படுபவர்களே.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• بيان كفر من يستهزئ بالرسول، سواء بالقول أو الفعل أو الإشارة.
1. தூதரைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகும். அது சொல்லாகவோ, செயலாகவோ, சைகையாகவோ இருந்தாலும் சரியே.

• من طبع الإنسان الاستعجال، والأناة خلق فاضل.
2. அவசரப்படுவது மனிதனின் இயற்கை தன்மையாகும். நிதானம் சிறந்த பண்பாகும்.

• لا يحفظ من عذاب الله إلا الله.
3. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அல்லாஹ்வைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது.

• مآل الباطل الزوال، ومآل الحق البقاء.
4. அசத்தியத்தின் முடிவு அழிவே. சத்தியத்தின் முடிவு நிலைப்பதே.

قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ— وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟
21.45. -தூதரே!- நீர் கூறுவீராக: “-மக்களே!- என் இறைவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து நான் உங்களை எச்சரிக்கிறேன். ஆயினும் சத்தியத்தை செவியேற்காத செவிடர்களுக்கு, அல்லாஹ்வின் வேதனையைக்கொண்டு எச்சரிக்கப்பட்டால், அவர்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க மாட்டார்கள்.
Arapça tefsirler:
وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
21.46. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களை உம் இறைவனுடைய வேதனையின் ஒரு பகுதி தீண்டிவிட்டால், “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி, முஹம்மது நபி கொண்டுவந்ததை பொய்ப்பித்து அக்கிரமக்காரர்களாக இருந்தோமே” என்று அந்த நேரத்தில் கூறுவார்கள்.
Arapça tefsirler:
وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ— وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ— وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟
21.47. நாம் மறுமையில் மனிதர்களின் செயல்களை எடைபோடுவதற்காக நியாயமான தராசுகளை நிறுவுவோம். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ எவர் மீதும் அநீதி இழைக்கப்படாது. ஒருவரின் எடை மிகவும் குறைவானதாக கடுகளவு செயல் போன்று இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். எங்களது அடியார்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நாமே போதுமானவர்களாவோம்.
Arapça tefsirler:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
21.48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் அதனை நம்பிக்கைகொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும் தங்கள் இறைவனை அஞ்சியவர்களுக்கு நினைவூட்டலாகவும் இருந்தது.
Arapça tefsirler:
الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟
21.49. காணாமலேயே தாம் நம்பிக்கை கொண்டுள்ள இறைவனின் வேதனையை அஞ்சியவர்கள் மறுமையைக்குறித்து அச்சத்தோடு உள்ளனர்.
Arapça tefsirler:
وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ— اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠
21.50. முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அறிவுரை பெற விரும்பக்கூடியவர்களுக்கு உபதேசமாகவம் அறிவுரையாகவும் அதிக பலன்களையும் நன்மைகளையும் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இருந்தும் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அதன்படி செயல்படாமல் மறுக்கிறீர்களா?
Arapça tefsirler:
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
21.51. நாம் இப்ராஹீமுக்கு சிறு வயதிலேயே அவருடைய சமூகத்திற்கு எதிராக ஆதாரத்தை வழங்கினோம். நாம் அவரைக்குறித்து நன்கறிந்தவர்களாக இருந்தோம். எனவேதான் நமது அறிவின் பிரகாரம் அவரது சமூகத்துக்கு எதிராக அவருக்குத் தகுதியான சான்றை வழங்கினோம்.
Arapça tefsirler:
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟
21.52. இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “உங்கள் கைகளால் செய்துகொண்டு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்த சிலைகள்தான் என்ன?”
Arapça tefsirler:
قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟
21.53. அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களை இவற்றை வணங்குபவர்களாகவே கண்டோம். அவர்களைப் பின்பற்றி நாங்களும் இவற்றை வணங்குகிறோம்.”
Arapça tefsirler:
قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
21.54. இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறினார்: -“பின்பற்றுபவர்களான- நீங்களும் பின்பற்றப்படும் உங்கள் முன்னோர்களும் தெளிவான சத்தியத்தை விட்டுவிட்டு தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”
Arapça tefsirler:
قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟
21.55. அவருடைய சமூகத்தார் கேட்டார்கள்: “நீர் எங்களிடம் கூறும் போது உண்மையாகத்தான் கூறுகிறீரா? அல்லது நீர் நகைச் சுவையாகக் கூறுகிறீரா?”
Arapça tefsirler:
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ— وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
21.56. இப்ராஹீம் கூறினார்: “நான் கூறுவது வேடிக்கையல்ல உண்மையே. வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன். வானங்களையும் பூமியையும் படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன் என்று நிச்சயமாக நான் சாட்சி கூறுகின்றேன். உங்களின் சிலைகளுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.
Arapça tefsirler:
وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟
21.57. அவருடைய சமூகத்தினருக்குக் கேட்டுவிடாமல் இப்ராஹீம் கூறினார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் உங்களின் சிலைகளை விட்டு விட்டு உங்கள் பண்டிகைக்குச் சென்ற பிறகு நீங்கள் விரும்பாததை (உங்களின் சிலைகளுக்கு நான் திட்டம் தீட்டுவேன்).”
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• نَفْع الإقرار بالذنب مشروط بمصاحبة التوبة قبل فوات أوانها.
1. மனிதனுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிவதற்கு முன்னரே அவன் பாவத்தை ஒத்துக்கொண்டுவிட்டேன் என்ற நிபந்தனையுடன் மன்னிப்புக் கோரினால்தான் அது அவனுக்குப் பயனளிக்கும்.

• إثبات العدل لله، ونفي الظلم عنه.
2. அல்லாஹ்வின் நீதியை நிரூபித்து, அவனை விட்டும் அநீதியை மறுத்தல்.

• أهمية قوة الحجة في الدعوة إلى الله.
3. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதில் பலமான ஆதாரத்தின் முக்கியத்துவம்.

• ضرر التقليد الأعمى.
4. கண்மூடித்தனமாக பின்பற்றுவதின் பாதிப்பு.

• التدرج في تغيير المنكر، والبدء بالأسهل فالأسهل، فقد بدأ إبراهيم بتغيير منكر قومه بالقول والصدع بالحجة، ثم انتقل إلى التغيير بالفعل.
5. தீமையைத் தடுப்பதில் படிமுறையைக் கையாண்டு முதலில் இலகுவானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவேதான் இப்ராஹீம் அலை அவர்கள் தனது சமூகம் செய்த தீமையை வார்த்தையின் மூலமும் ஆதாரத்தை எடுத்துக்கூறுவதன் மூலமும் தடுக்க ஆரம்பித்தார்கள். பின்பு செயல் ரீதியாகத் தடுத்தார்கள்.

فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟
21.58. இப்ராஹீம் அவர்களது சிலைகளை சிறிய துண்டுகளாக ஆகுமளவு உடைத்துவிட்டார், பெரிய சிலையை மாத்திரம் விட்டுவிட்டார். அவர்கள் அதனிடம் திரும்பி வந்து அவற்றை உடைத்தவனைக் குறித்து கேட்க வேண்டும் என்பதற்காக.
Arapça tefsirler:
قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟
21.59. அவர்கள் திரும்பி வந்து, தங்களின் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களில் சிலர் சிலரிடம் கேட்டார்கள்: “நம்முடைய தெய்வங்களை உடைத்தது யார்? நிச்சயமாக நம்முடைய சிலைகளை உடைத்தவன் அநியாயக்காரனாகத்தான் இருப்பான். அவன் கண்ணியம், புனிதம் என்பவற்றுக்குத் தகுதியானதை இழிவுபடுத்திவிட்டான்.
Arapça tefsirler:
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
21.60. அவர்களில் சிலர் கூறினார்கள்: “ஒரு இளைஞரைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம், அவர் இந்த சிலைகளைக் குறைகூறிக் கொண்டிருந்தார். அவருக்கு இப்ராஹீம் என்று சொல்லப்படும். அவர்தான் இந்த சிலைகளை உடைத்திருக்கலாம்.”
Arapça tefsirler:
قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟
21.61. அவர்களின் தலைவர்கள் கூறினார்கள்: “தான் செய்ததை இப்ராஹீம் ஒத்துக்கொள்வதை அனைவரும் பார்ப்பதற்காக அவரை மக்கள் முன்னிலையில் அழைத்து வாருங்கள். அவ்வாறு அவரே ஏற்றுக்கொள்வது அவருக்கெதிரான, உங்களுக்குச் சார்பான ஆதாரமாகிவிடலாம்.”
Arapça tefsirler:
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
21.62. அவர்கள் இப்ராஹீமை அழைத்து வந்து, அவரிடம் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீயா எங்களுடைய சிலைகளுக்கு இந்த மோசமான செயலைச் செய்தாய்?”
Arapça tefsirler:
قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ— كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟
21.63. இப்ராஹீம் அந்த சிலைகளின் இயலாமையை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அவர்களைப் பரிகாசம் செய்தவராகக் கூறினார்: “நான் இவ்வாறு செய்யவில்லை. மாறாக அவற்றில் பெரிய சிலைதான் இவ்வாறு செய்தது. உங்கள் சிலைகள் பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேட்டுப் பாருங்கள்.”
Arapça tefsirler:
فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ
21.64. அவர்கள் தமக்குள் திரும்பி சிந்தித்தார்கள். நிச்சயமாக அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்றவை, அல்லாஹ்வை விடுத்து அந்த சிலைகளை வணங்கிய அவர்கள் அநியாயக்காரர்களே என்பதை அறிந்துகொண்டார்கள்.
Arapça tefsirler:
ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ— لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟
21.65. பின்னர் மீண்டும் மறுப்பு, பிடிவாதமாகக் கூறினார்கள்: “-இப்ராஹீமே!- நிச்சயமாக இந்த சிலைகள் பேசாது என்பதை நீ உறுதியாக அறிவாய். பிறகு எப்படி அவற்றிடம் கேட்கும்படி எங்களை ஏவுகிறாய்.” அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக மாற்ற நாடினார்கள். ஆனால் அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகிவிட்டது.
Arapça tefsirler:
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ
21.66. இப்ராஹீம் அவர்களைக் கண்டித்துக் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து உங்களுக்குப் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளையா வணங்குகிறீர்கள். அவை தம்மை விட்டும் தீங்கைத் தடுக்கவோ, தமக்குப் பயனளிக்கவோ சக்தியற்றவை.
Arapça tefsirler:
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
21.67. உங்களுக்கும் அல்லாஹ்வை விடுத்து பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற நீங்கள் வணங்கும் இந்த சிலைகளுக்கும் கேடுதான் உண்டாகும். இதை நீங்கள் விளங்கிக்கொண்டு, அவற்றை வணங்குவதை விட்டுவிட மாட்டீர்களா?
Arapça tefsirler:
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
21.68. ஆதாரத்தைக்கொண்டு அவரை எதிர்கொள்ள முடியாததால் அதிகாரத்தின்பால் அவர்கள் அடைக்கலம் தேடினார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அவருக்கு கடுமையாக தண்டனை வழங்குவோராக இருந்தால் அவர் உடைத்த உங்கள் சிலைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு இப்ராஹீமை நெருப்பால் எரித்துவிடுங்கள்.”
Arapça tefsirler:
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
21.69. நெருப்பை மூட்டி அதில் அவரைப் போட்டார்கள். நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” அது அவ்வாறே ஆகியது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.”
Arapça tefsirler:
وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ
21.70. அவரை நெருப்பில் போட்டு பொசுக்கிவிட இப்ராஹீமின் சமூகம் சூழ்ச்சி செய்தார்கள். நாம் அவர்களின் சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி, அவர்களை அடக்கி, அழித்துவிட்டோம்.
Arapça tefsirler:
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
21.71. நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றினோம். நாம் தூதர்களை அனுப்பி, படைப்பினங்களுக்கு பல நலவுகளை வழங்கி, அருள்செய்த ஷாம் தேசத்தின்பால் அவர்கள் இருவரையும் கொண்டு சேர்த்தோம்.
Arapça tefsirler:
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ— وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ— وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
21.72. இப்ராஹீம் தம் இறைவனிடம் தனக்கு ஒரு மகனை அளிக்கும்படி பிரார்த்தனை செய்தபோது நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இப்ராஹீம், அவரது இரு மகன்கள் இஸ்ஹாக், யஃகூபு என ஒவ்வொருவரையும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த நல்லவர்களாக ஆக்கினோம்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• جواز استخدام الحيلة لإظهار الحق وإبطال الباطل.
1. சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காக, அசத்தியத்தை ஒழிப்பதற்காக தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.

• تعلّق أهل الباطل بحجج يحسبونها لهم، وهي عليهم.
2. அசத்தியவாதிகள் தங்களுக்கு எதிரான ஆதாரத்தை தமக்குச் சாதகமான ஆதாரமாக எண்ணி அதைப் பற்றிக்கொள்வார்கள்.

• التعنيف في القول وسيلة من وسائل التغيير للمنكر إن لم يترتّب عليه ضرر أكبر.
3. தீமையை கடுமையாக எதிர்ப்பதில் குறித்த தீமையை விட பெரிய பாதிப்புகள் இல்லையெனில் அது தீமையைத் தடுக்கும் ஒரு சாதனமே.

• اللجوء لاستخدام القوة برهان على العجز عن المواجهة بالحجة.
4. பலத்தை பயன்படுத்த முடிவெடுப்பது ஆதாரத்தால் எதிர்கொள்ள முடியாததன் அடையாளமாகும்.

• نَصْر الله لعباده المؤمنين، وإنقاذه لهم من المحن من حيث لا يحتسبون.
5. நம்பிக்கையாளர்களான தனது அடியார்களுக்கு அல்லாஹ் உதவி செய்தலும், சோதனைகளிலிருந்து அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவன் காப்பாற்றுவதும்.

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ— وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۙ
21.73. நாம் அவர்களை தலைவர்களாக ஆக்கினோம். மக்கள் அவர்கள் மூலம் நலவில் வழிகாட்டலைப் பெறுகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறு அவனுடைய அனுமதியுடன் மக்களை அழைக்கின்றனர். நாம் அவர்களுக்கு, “நற்செயல்களைச் செய்யுங்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை வழங்குங்கள் என்று வஹி அறிவித்தோம். அவர்கள் நமக்கு அடிபணிந்தவர்களாக இருந்தார்கள்.
Arapça tefsirler:
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
21.74. நாம் லூத்திற்கு பிரச்சினைகளுக்குரியவர்களிடையே தீர்ப்பு வழங்கும் திறமையையும் மார்க்க அறிவையும் வழங்கினோம். மானக்கேடான காரியத்தை செய்துவந்த சதூம் என்ற அந்த ஊர்மக்களின் மீது இறங்கிய வேதனையிலிருந்து நாம் அவரைப் பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு அடிபணியாமல் குழப்பம் செய்யும் மக்களாக இருந்தார்கள்.
Arapça tefsirler:
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
21.75. அவருடைய சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவரைக் காப்பாற்றி நம் அருளில் அவரைப் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர் நம் கட்டளையைச் செயல்படுத்தும், நாம் தடுத்தவற்றிலிருந்து விலகியிருக்கும் நல்லவர்களில் ஒருவராக இருந்தார்.
Arapça tefsirler:
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
21.76. -தூதரே!- நூஹின் சம்பவத்தை நினைவு கூர்வீராக. இப்ராஹீமுக்கும் லூத்திற்கும் முன்னர் அவர் அல்லாஹ்வை அழைத்தார். நாம் அவர் வேண்டியதை அளித்து அவருக்குப் பதிலளித்தோம். அவரையும் நம்பிக்கைகொண்ட அவருடைய குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
Arapça tefsirler:
وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟
21.77. நாம் அவரை வலுப்படுத்தும் விதமாக வழங்கிய அவருடைய நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளை நிராகரித்த அவரது சமூகத்தின் சூழ்ச்சியிலிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவர்கள் குழப்பம் விளைக்கும் தீய மக்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
Arapça tefsirler:
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ— وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۙ
21.78. -தூதரே!- தாவூதையும் அவருடைய மகன் சுலைமானையும் நினைவு கூர்வீராக. அவர்கள் தங்களிடம் வந்த இரு வழக்காளிகளின் விஷயத்தில் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்காளிகளில் ஒருவருடைய ஆடுகள் இரவில் மற்றவரின்பயிரில் புகுந்து அதனை நாசமாக்கிவிட்டன. தாவூதும் சுலைமானும் தீர்ப்பளிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களின் தீர்ப்பில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை.
Arapça tefsirler:
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ— وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ— وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ— وَكُنَّا فٰعِلِیْنَ ۟
21.79. நாம் தாவூதை விட அவருடைய மகன் சுலைமானுக்கு அந்த வழக்கைப் புரிய வைத்தோம். நாம் இருவருக்கும் நபித்துவத்தையும் மார்க்க சட்டதிட்டங்களின் அறிவையும் வழங்கியிருந்தோம். நாம் சுலைமானுக்கு மட்டும் சிறப்பினை வழங்கவில்லை. தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தன. நாம் அவருக்குப் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். நாமே அந்த விளக்கத்தையும், தீர்ப்பு வழங்குவதையும், அறிவையும், வசப்படுத்தலையும் வழங்குவோராயிருந்தோம்.
Arapça tefsirler:
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ— فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟
21.80. உங்கள் உடலை ஆயுதம் பதம்பார்க்காமல் இருக்க நாம் சுலைமானை விடுத்து தாவூதுக்கு போர்க்கவசங்கள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தோம். -மனிதர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைக்கு நீங்கள் நன்றிசெலுத்துவீர்களா?
Arapça tefsirler:
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
21.81. நாம் சுலைமானுக்கு வேகமாக வீசக்கூடிய காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவரது கட்டளைப்படி நாம் அருள்செய்திருந்த ஷாம் தேசத்திற்குச் செல்லும். அங்கு நபிமார்களை அனுப்பி பல நலவுகளை ஏற்படுத்தி அதில் அபிவிருத்தி செய்திருந்தோம். நாம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவர்களாக இருக்கின்றோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• فعل الخير والصلاة والزكاة، مما اتفقت عليه الشرائع السماوية.
1. நலவு செய்தல், தொழுகை, ஸகாத் ஆகியவற்றில் வானலோக ஷரீஅத்துகள் (மார்க்கங்கள்) ஒன்றுபட்டுள்ளன.

• ارتكاب الفواحش سبب في وقوع العذاب المُسْتَأْصِل.
2. மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவது பூண்டோடு அழித்துவிடும் வேதனை நிகழ்வதற்கான ஒரு காரணமாகும்.

• الصلاح سبب في الدخول في رحمة الله.
3. நேர்மை இறையருளில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது.

• الدعاء سبب في النجاة من الكروب.
4. பிரார்த்தனை துன்பங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு காரணமாகும்.

وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ— وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ
21.82. கடலில் மூழ்கி முத்து போன்றனவற்றை கண்டெடுக்கும், கட்டட நிர்மாணம் போன்ற ஏனைய வேலைகளில் ஈடுபடும் ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். நாம் அவர்களின் எண்ணிக்கையையும், செயல்பாடுகளையும் கண்காணிப்போராக இருந்தோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு தப்பிவிடாது.
Arapça tefsirler:
وَاَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
21.83. -தூதரே!- அய்யூபின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. துன்பம் அவரைத் தாக்கியபோது அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நான் நோயால் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தையும் இழந்து விட்டேன். நீ அனைவருக்கும் மிகச் சிறந்த கருணையாளனாக இருக்கின்றாய். எனவே எனக்கு ஏற்பட்ட துன்பத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக.”
Arapça tefsirler:
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ ۟
21.84. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்தோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவர் இழந்த அவருடைய குடும்பத்தையும், பிள்ளைகளையும் அவருக்கு வழங்கினோம். அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இவையனைத்தையும் நம்மிடமிருந்துள்ள கருணையாகவும், அய்யூபைப் போன்று பொறுமையாக இருப்பதற்காக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வணங்கும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டலாகவும் நாம் செய்தோம்.
Arapça tefsirler:
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ— كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟
21.85. -தூதரே!- இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் ஆகியோரை நினைவு கூர்வீராக. அவர்களில் ஒவ்வொருவரும் துன்பங்களிலும் அல்லாஹ் அவர்கள் மீது சுமத்திய கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள்.
Arapça tefsirler:
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
21.86. நாம் அவர்களை நம் அருளில் பிரவேசிக்கச் செய்து நபிமார்களாக ஆக்கினோம். அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு வழிப்பட்டு நற்செயல் புரிந்த, அந்தரங்கத்திலும், வெளிப்படையிலும் தங்களை சீர்படுத்திக் கொண்ட அல்லாஹ்வின் நல்லடியார்களாக இருந்தார்கள்.
Arapça tefsirler:
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ— اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
21.87. -தூதரே!- மீனுடையவரான யூனுஸையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் அனுமதி பெறாமல் தம் சமூகம் பாவத்தில் பிடிவாதமாக இருந்ததனால் அவர்கள் மீது கோபம்கொண்டு சென்றுவிட்டார். அவர் சென்றுவிட்டதற்காக நாம் அவரைத் தண்டித்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தமாட்டோம் என்று நிச்சயமாக அவர் எண்ணிக் கொண்டார். மீன் அவரை விழுங்கிய போது கடும் நெருக்கடியாலும், சிறையாலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் தம் பாவத்தை ஒத்துக்கொண்டவராக, மன்னிப்புக்கோரி, மீனின் வயிறு, கடல், இரவு ஆகிய இருள்களில் இருந்தவாறு பிரார்த்தனை செய்தார். அவர் கூறினார்: “உன்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.”
Arapça tefsirler:
فَاسْتَجَبْنَا لَهٗ ۙ— وَنَجَّیْنٰهُ مِنَ الْغَمِّ ؕ— وَكَذٰلِكَ نُـجِی الْمُؤْمِنِیْنَ ۟
21.88. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து இருள்களிலிருந்தும், மீன் வயிற்றிலிருந்தும் அவரை வெளியேற்றி கடும் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். நாம் யூனுஸை துன்பத்திலிருந்து காப்பாற்றியது போன்றே துன்பத்தில் அகப்பட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுகின்றோம்.
Arapça tefsirler:
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
21.89. -தூதரே!- ஸகரிய்யாவையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “இறைவா எனக்கு வாரிசின்றி என்னைத் தனியாக விட்டுவிடாதே. நீயே நிலைத்திருப்பவர்களில் மிகச் சிறந்தவன். எனவே எனக்குப் பிறகு நிலைத்து இருக்கக்கூடிய ஒரு பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.”
Arapça tefsirler:
فَاسْتَجَبْنَا لَهٗ ؗ— وَوَهَبْنَا لَهٗ یَحْیٰی وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ— اِنَّهُمْ كَانُوْا یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَیَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ— وَكَانُوْا لَنَا خٰشِعِیْنَ ۟
21.90. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவருக்கு யஹ்யா என்னும் மகனை வழங்கினோம். அவருடைய மனைவியையும் சரிப்படுத்தினோம். குழந்தைப்பேறு அற்ற அவருடைய மனைவி அதிகம் குழந்தைகள் பெறக்கூடியவளாக ஆகிவிட்டாள். நிச்சயமாக ஸகரிய்யா, அவருடைய மனைவி, மகன் அனைவரும் நற்செயல்களின்பால் விரையக்கூடியவர்களாக, நம்மிடம் கூலியை எதிர்பார்த்தும், நம்மிடம் உள்ள தண்டனையை அஞ்சியும் நம்மை அழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் நமக்குப் பணிந்து நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الصلاح سبب للرحمة.
1. நேர்மை அன்பைப் பெறும் காரணியாகும்.

• الالتجاء إلى الله وسيلة لكشف الكروب.
2. அல்லாஹ்வின்பால் அடைக்கலம் தேடுவது துன்பத்தைப் போக்குவதற்கான ஒரு வழிமுறையாகும்.

• فضل طلب الولد الصالح ليبقى بعد الإنسان إذا مات.
3. மனிதன் மரணித்த பின் வாழ வேண்டும் என்பதற்காக நற்செயல் செய்யும் பிள்ளையைக் கேட்பதன் சிறப்பு.

• الإقرار بالذنب، والشعور بالاضطرار لله وشكوى الحال له، وطاعة الله في الرخاء من أسباب إجابة الدعاء وكشف الضر.
4. தவறை ஏற்றுக்கொள்வது, அல்லாஹ்விடம் நிரப்பந்தத்தை உணர்தல், நிலமையை அவனிடம் முறையிடல், இன்பத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படல் என்பன பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு துன்பம் நீங்குவதற்கான காரணிகளாகும்.

وَالَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
21.91. -தூதரே!- விபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. அல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பி அவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான். அவள் ஈஸாவை சுமந்தாள். அவரைத் தந்தையின்றிப் படைத்ததனால் அவளும் அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின் வல்லமைக்கும் அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்கு சான்றாக இருந்தார்கள்.
Arapça tefsirler:
اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً ۖؗ— وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ ۟
21.92. -மனிதர்களே!- உங்களின் இந்த மார்க்கம் ஒரே மார்க்கம்தான். ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் என்னும் மார்க்கமே அது. நானே உங்களின் இறைவன். எனவே வணக்க வழிபாட்டை எனக்கு மட்டுமே நிறைவேற்றுங்கள்.
Arapça tefsirler:
وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ ؕ— كُلٌّ اِلَیْنَا رٰجِعُوْنَ ۟۠
21.93. மக்கள் பலவாறாகப் பிரிந்து விட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவர்களாகவும் சிலர் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் சிலர் அவனை நிராகரிப்பவர்களாகவும் சிலர் நம்பிக்கையாளர்களாகவும் ஆகிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.
Arapça tefsirler:
فَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْیِهٖ ۚ— وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ ۟
21.94. அவர்களில் யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல் ஒருபோதும் நிராகரிக்கப்படாது. மாறாக அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்தி அவனுடைய நன்மைகளை பன்மடங்காக்கிக் கொடுப்பான். மறுமை நாளில் தம் செயல்பதிவேட்டை பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியடைவார்.
Arapça tefsirler:
وَحَرٰمٌ عَلٰی قَرْیَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا یَرْجِعُوْنَ ۟
21.95. நிராகரிப்பின் காரணமாக நாம் அழித்த ஊர்மக்கள் பாவமன்னிப்புக் கோரி அது ஏற்றுக்கொள்ளப்பட இவ்வுலகிற்குத் திரும்பிவருவது சாத்தியமற்றதாகும்.
Arapça tefsirler:
حَتّٰۤی اِذَا فُتِحَتْ یَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ یَّنْسِلُوْنَ ۟
21.96. யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு திறக்கப்படும்வரை ஒருபோதும் திரும்பிவர மாட்டார்கள். அப்போது அவர்கள் பூமியின் உயரமான ஒவ்வொரு பகுதியிலிருந்தும் விரைவாக வெளிப்படுவார்கள்.
Arapça tefsirler:
وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— یٰوَیْلَنَا قَدْ كُنَّا فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِیْنَ ۟
21.97. அவர்கள் வெளிப்படுவதன்மூலம் மறுமை நாள் நெருங்கிவிடும். அதன் பயங்கரங்களும் துன்பங்களும் வெளிப்பட்டுவிடும். அதன் பயங்கரத்தால் நிராகரிப்பாளர்களின் பார்வைகள் அப்படியே திறந்த நிலையில் இருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! நாங்கள் மாபெரும் இந்த நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாமல் உலகில் வீணாக, அலட்சியமாக இருந்தோமே! அது மாத்தரமின்றி நாங்கள் நிராகரித்தும் பாவங்களில் ஈடுபட்டும் அநியாயக்காரர்களாகவல்வா இருந்தோம்!”
Arapça tefsirler:
اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَ ؕ— اَنْتُمْ لَهَا وٰرِدُوْنَ ۟
21.98. -இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கிய சிலைகளும் தம்மை வணங்கியதை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் மற்றும் ஜின்களும் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பீர்கள். நீங்களும் உங்களின் தெய்வங்களும் அந்த நரகத்தில் நுழைவீர்கள்.
Arapça tefsirler:
لَوْ كَانَ هٰۤؤُلَآءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا ؕ— وَكُلٌّ فِیْهَا خٰلِدُوْنَ ۟
21.99. வணங்கப்படுகின்ற இவை உண்மையான தெய்வங்களாக இருந்திருந்தால் தம்மை வணங்கியவர்களுடன் நரகத்தில் நுழைந்திருக்காது. வணங்கியவர்கள், வணங்கப்பட்டவை என அனைவரும் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.
Arapça tefsirler:
لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّهُمْ فِیْهَا لَا یَسْمَعُوْنَ ۟
21.100. அங்கு அவர்கள் -அனுபவிக்கும் துன்பங்களால்- பெரும் மூச்சு உண்டு. அவர்களுக்கு நிகழ்ந்திருக்கும் பயங்கரத்தின் கடுமையினால் எந்த சப்தத்தையும் நரகில் செவியுற மாட்டார்கள்.
Arapça tefsirler:
اِنَّ الَّذِیْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰۤی ۙ— اُولٰٓىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۟ۙ
21.101. (நிச்சயமாக வணங்கப்பட்ட வானவர்களும் ஈஸாவும் நரகத்தில் நுழைவார்கள் என்று இணைவைப்பாளர்கள் கூறியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக ஈஸாவைப்போன்று அல்லாஹ் யாரை நற்பேறு பெற்றவர்கள் என்று முன்னரே அவனுடைய அறிவில் முடிவு செய்யப்பட்டவர்கள் நரகத்திலிருந்து தூரமாக்கப்படுவார்கள்.”
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• التنويه بالعفاف وبيان فضله.
1. கற்பொழுக்கம் புகழப்பட்டு அதன் சிறப்பும் தெளிவபடுத்தப்பட்டுள்ளது.

• اتفاق الرسالات السماوية في التوحيد وأسس العبادات.
2. ஓரிறைக்கொள்கையிலும் வணக்க வழிபாட்டின் அடிப்படைகளிலும் வானலோக ஷரீஅத்துகள் அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன.

• فَتْح سد يأجوج ومأجوج من علامات الساعة الكبرى.
3. யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்களின் தடுப்பு திறந்துவிடப்படுவது மறுமை நாளின் பெரும் அடையாளங்களில் ஒன்றாகும்.

• الغفلة عن الاستعداد ليوم القيامة سبب لمعاناة أهوالها.
4. மறுமை நாளுக்காக தயாராகுவதில் அலட்சியமாக இருப்பது அதன் பயங்கரங்களை அனுபவிப்பதற்குக் காரணமாகும்.

لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ— وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۟ۚ
21.102. அவர்கள் நரகத்தின் சத்தத்தை செவியுற மாட்டார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் இன்பங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களின் இன்பம் ஒரு போதும் முடிவடையாது.
Arapça tefsirler:
لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
21.103. நரகவாசிகளை நெருப்பு மூடிக்கொள்ளும் போதுள்ள பெரும் பயங்கரம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. “இதுதான் நீங்கள் உலகில் வாக்களிக்கப்பட்ட நாள். நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வானவர்கள் அவர்களை வாழ்த்துக்கூறி வரவேற்பார்கள்.
Arapça tefsirler:
یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ— كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ— وَعْدًا عَلَیْنَا ؕ— اِنَّا كُنَّا فٰعِلِیْنَ ۟
21.104. நாம் பதிவேடுகளை சுருட்டுவதுபோன்று வானத்தை அதிலுள்ளவற்றுடன் சுருட்டும் நாளில் படைப்புகள் அனைத்தையும் அவை ஆரம்பத்தில் படைக்கப்பட்டவாறே ஒன்றுதிரட்டுவோம். இது நாம் அளித்த வாக்குறுதியாகும். நாம் ஒருபோதும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நிச்சயமாக நாம் அளித்த வாக்குறுதிய நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கின்றோம்.
Arapça tefsirler:
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
21.105. நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே எழுதிய பிறகு தூதர்களுக்கு இறக்கிய வேதங்களிலும் பின்வருமாறு எழுதினோம்: “நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய அவனுடைய நல்லடியார்கள்தாம் பூமிக்கு சொந்தக்காரர்களாவர். அவர்கள்தாம் முஹம்மதின் சமூகத்தார்கள்.”
Arapça tefsirler:
اِنَّ فِیْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِیْنَ ۟ؕ
21.106. நிச்சயமாக நாம் இறக்கிய அறிவுரையில் தங்கள் இறைவனை அவன் விதித்ததன் படி வணங்கக்கூடிய மக்களுக்கு நலவும், போதுமானளவு வழிகாட்டலும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதனைக்கொண்டு பயனடையக்கூடியவர்களாவர்.
Arapça tefsirler:
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ ۟
21.107. -முஹம்மதே!- படைப்புகள் அனைத்திற்கும் அருட்கொடையாகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அةதனால்தான் நீர் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்கும் அவர்களை இறைவேதனையிலிருந்து காப்பதற்கும் பேராசை கொண்டவராக காணப்படுகின்றீர்.
Arapça tefsirler:
قُلْ اِنَّمَا یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
21.108. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் எனக்குப் பின்வருமாறுதான் வஹி அறிவித்துள்ளான்: “நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். எனவே அவனை நம்பிக்கைகொள்வதற்கும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவதற்கும் கட்டுப்படுங்கள்.”
Arapça tefsirler:
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰی سَوَآءٍ ؕ— وَاِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ اَمْ بَعِیْدٌ مَّا تُوْعَدُوْنَ ۟
21.109. -தூதரே!- நீர் கொண்டுவந்ததை அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் நீர் கூறிவிடுவீராக: “நிச்சயமாக எனக்கும் உங்களுக்கும் இடைப்பட்ட சமனான விஷயத்தை நான் தெளிவாக எனக்கும் உங்களுக்கும் அறிவித்துவிட்டேன். அல்லாஹ் எச்சரித்த வேதனை உங்கள் மீது எப்போது இறங்கும்? என்பதை நான் அறியமாட்டேன்.
Arapça tefsirler:
اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَیَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ۟
21.110. நிச்சயமாக நீங்கள் வெளிப்படையாகக் கூறுவதையும் இரகசியமாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிவான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
وَاِنْ اَدْرِیْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
21.111. உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவது உங்களுக்குச் சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் நீங்கள் உங்களின் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் பிடிவாதமாக இருப்பதற்காக அவனுடைய அறிவின்படி குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அனுபவிப்பதற்காகவும் இருக்கலாம் என்பதை நான் அறிய மாட்டேன்.
Arapça tefsirler:
قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَقِّ ؕ— وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟۠
21.112. அல்லாஹ்வின் தூதுர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! எங்களுக்கும் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் எங்கள் சமூகத்திற்குமிடையே உண்மையான முறையில் தீர்ப்பு வழங்குவாயாக. நீங்கள் கூறும் பொய்யான, நிராகரிப்பான வார்த்தைகளுக்காக அருளாளனான எங்கள் இறைவனிடமே நாங்கள் உதவிதேடுகிறோம்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الصلاح سبب للتمكين في الأرض.
1. நேர்மை பூமியில் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கு காரணமாக இருக்கின்றது.

• بعثة النبي صلى الله عليه وسلم وشرعه وسنته رحمة للعالمين.
2. தூதர் அனுப்பப்பட்டமையும், அவரது மார்க்கமும், வழிமுறையும் அகிலத்தாருக்கு அருட்கொடையே.

• الرسول صلى الله عليه وسلم لا يعلم الغيب.
3. தூதர் மறைவானவற்றை அறிய மாட்டார்.

• علم الله بما يصدر من عباده من قول.
4. அடியார்களிடமிருந்து வெளிப்படும் அனைத்து வார்த்தைகளையும் அல்லாஹ் அறிவான்.

 
Anlam tercümesi Sure: Sûratu'l-Enbiyâ
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mealler fihristi

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Kapat