Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mealler fihristi


Anlam tercümesi Ayet: (195) Sure: Sûratu Âl-i İmrân
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّیْ لَاۤ اُضِیْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُ ۚ— بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ— فَالَّذِیْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاُوْذُوْا فِیْ سَبِیْلِیْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ۟
3.195. இறைவன் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான்: ஆணாயினும் பெண்ணாயினும் உங்களின் செயல்கள் சிறியதோ பெரியதோ அவற்றின் நன்மைகளை நான் வீணாக்கிவிட மாட்டேன். மார்க்க விடயத்தில் நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமானவரே. ஆண்கள் என்பதற்காக அதிகரிக்கப்படவும்மாட்டாது. பெண்கள்என்பதற்காக குறைக்கப்படவும்மாட்டாது. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்கள், நிராகரிப்பாளர்களால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டதால் துன்பங்களை அடைந்தவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்கள், அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அதில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் செய்த பாவங்களை மறுமைநாளில் நான் மன்னிப்பேன். அவற்றைக் கண்டுகொள்ளமாட்டேன். அவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையாகும். அவனிடமே ஈடிணையற்ற அழகிய கூலி இருக்கின்றது.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الأذى الذي ينال المؤمن في سبيل الله فيضطره إلى الهجرة والخروج والجهاد من أعظم أسباب تكفير الذنوب ومضاعفة الأجور.
1. அல்லாஹ்வின் பாதையில் நம்பிக்கையாளன் அடையக்கூடிய துன்பங்களால் நெருக்கடிக்குள்ளாகப்பட்டு அவன் புலம்பெயர்வது, ஜிஹாதுசெய்வது அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நன்மைகள் அதிகரிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணியாகும்.

• ليست العبرة بما قد ينعم به الكافر في الدنيا من المال والمتاع وإن عظم؛ لأن الدنيا زائلة، وإنما العبرة بحقيقة مصيره في الآخرة في دار الخلود.
2. நிராகரிப்பாளர்கள் இவ்வுலகில் அனுபவிக்கும் எவ்வளவு பெரிய சொத்து செல்வங்களைக் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் உலகம் தற்காலிகமானது. மறுமையில் அவர்கள் அடையப்போகும் நிரந்தரமான இருப்பிடத்தையே கவனத்தில் கொள்ள வேண்டும்.

• من أهل الكتاب من يشهدون بالحق الذي في كتبهم، فيؤمنون بما أنزل إليهم وبما أنزل على المؤمنين، فهؤلاء لهم أجرهم مرتين.
3. தமது வேதங்களில் உள்ள உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவற்றையும் விசுவாசிகளுக்கு இறக்கியருளப்பட்டவற்றையும் விசுவாசம் கொள்வோரும் வேதக்காரர்களில் உள்ளனர். இவர்களுக்கு இருமடங்கு கூலி உண்டு.

• الصبر على الحق، ومغالبة المكذبين به، والجهاد في سبيله، هو سبيل الفلاح في الآخرة.
4. சத்தியத்தில் பொறுமையாக இருந்து அதனை மறுப்போரை எதிர்த்து சத்திய வழியில் போராடுவதுதான் மறுமையில் வெற்றிக்கான வழியாகும்.

 
Anlam tercümesi Ayet: (195) Sure: Sûratu Âl-i İmrân
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mealler fihristi

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Kapat