Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Ayet: (101) Sure: Sûratu'l-Mâide
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ— وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ— عَفَا اللّٰهُ عَنْهَا ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
5.101. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்குத் தேவையில்லாத, உங்களின் மார்க்க விவகாரங்களுக்குப் பயனளிக்காத விஷயங்களை உங்கள் தூதரிடம் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்பட்டால் அவற்றின் சிரமத்தினால் உங்களுக்குக் கவலையே ஏற்படும். உங்கள் தூதருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கேட்பதற்குத் தடுக்கப்பட்டவற்றைக் குறித்து நீங்கள் கேட்டால் அவை உங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிடும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. எவற்றைக் குறித்து குர்ஆன் எதுவும் கூறவில்லையோ அவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். எனவே அவற்றைக் குறித்து கேட்காதீர்கள். நீங்கள் அவை குறித்து கேட்டால் அவற்றைக் குறித்த சட்டங்கள் உங்களுக்குத் இறக்கப்பட்டுவிடும். அடியார்கள் திருந்தும் பட்சத்தில் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், அவற்றிற்காக தண்டனையளிக்காமல் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الأصل في شعائر الله تعالى أنها جاءت لتحقيق مصالح العباد الدنيوية والأخروية، ودفع المضار عنهم.
1. அல்லாஹ் ஏற்படுத்திய புனிதக் கிரியைகளின் நோக்கம் அடியார்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளை அடைவதும் அவர்களை விட்டும் தீங்குகளைத் தடுப்பதுமாகும்.

• عدم الإعجاب بالكثرة، فإنّ كثرة الشيء ليست دليلًا على حِلِّه أو طِيبه، وإنما الدليل يكمن في الحكم الشرعي.
2. பெரும்பான்மையைக் கொண்டு வியக்கக்கூடாது. ஒரு விடயம் அனுமதி அல்லது சிறந்தது என்பதற்கு பெரும்பான்மை ஒருபோதும் ஆதாரமல்ல. மார்க்கத் தீர்ப்பே ஆதாரமாகும்.

• من أدب المُسْتفتي: تقييد السؤال بحدود معينة، فلا يسوغ السؤال عما لا حاجة للمرء ولا غرض له فيه.
3.மார்க்கத் தீர்ப்புக் கேட்பவருக்கான ஒழுங்குகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட எல்லைகளுடன் அதனை வரையறுத்துக்கொள்வதாகும். மனிதனுக்கு அவசியமற்ற தேவையில்லாதவற்றைப் பற்றிக் கேட்கக் கூடாது.

• ذم مسالك المشركين فيما اخترعوه وزعموه من محرمات الأنعام ك: البَحِيرة، والسائبة، والوصِيلة، والحامي.
4. பஹீரா, ஸாஇபா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் தாமாகக் கண்டுபிடித்து தடைசெய்யப்பட்டவை எனக் கருதும் இணைவைப்பாளர்களின் நடைமுறைகள் கண்டிக்கப்பட்டுள்ளன.

 
Anlam tercümesi Ayet: (101) Sure: Sûratu'l-Mâide
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat