Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mealler fihristi


Anlam tercümesi Ayet: (150) Sure: Sûratu'l-En'âm
قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِیْنَ یَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ۚ— فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟۠
6.150. அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்து ‘அல்லாஹ்தான் தடைசெய்தான்’ என்று வாதிடும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் இவற்றை தடைசெய்தான் என்பதற்கான சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்.” அல்லாஹ்தான் தடைசெய்தான் என்று அறிவில்லாமல் அவர்கள் சாட்சிகூறினால் அவர்களின் சாட்சியத்தை நீர் உண்மைப்படுத்தாதீர். ஏனெனில் அது பொய்சாட்சியாகும். தங்களின் மனஇச்சையின்படி செயல்படுபவர்களின் மனஇச்சையை நீர் பின்பற்றாதீர். அல்லாஹ் அனுமதித்ததை அவர்கள் தடைசெய்த போது நம்முடைய வசனங்களை மறுத்துவிட்டனர். மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைத்து மற்றவர்களை அவனுடன் சமமாக்குகின்றனர். தங்கள் இறைவனுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்களை எவ்வாறு பின்பற்றுவது?
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الحذر من الجرائم الموصلة لبأس الله؛ لأنه لا يُرَدُّ بأسه عن القوم المجرمين إذا أراده.
1. அல்லாஹ்வின் தண்டனையின்பால் இட்டுச் செல்லும் குற்றங்களை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் குற்றவாளிகளுக்கு அல்லாஹ் வழங்கும் தண்டனையை அவன் நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது.

• الاحتجاج بالقضاء والقدر بعد أن أعطى الله تعالى كل مخلوق قُدْرة وإرادة يتمكَّن بهما من فعل ما كُلِّف به؛ ظُلْمٌ مَحْض وعناد صرف.
2. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் நாட்டத்தையும் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்கிய பிறகு விதியை ஆதாரமாகக் கொண்டு தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பது பெரும் அநியாயமும் பிடிவாதமுமாகும்.

• دَلَّتِ الآيات على أنه بحسب عقل العبد يكون قيامه بما أمر الله به.
3. அடியானுக்கு வழங்கப்பட்ட அறிவுக்கேற்பவே அவன் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவான் என்ற விஷயம் வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

• النهي عن قربان الفواحش أبلغ من النهي عن مجرد فعلها، فإنه يتناول النهي عن مقدماتها ووسائلها الموصلة إليها.
4. மானக்கேடான விடயங்களைச் செய்ய வேண்டாம் எனத் தடைசெய்வதை விட அவற்றை நெருங்கக்கூட வேண்டாம் எனத் தடைசெய்வது மிகச் சிறந்ததாகும். ஏனெனில் அது மானக்கேடானவற்றுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் சாதனங்களையும் தடைசெய்வதாக அமைகின்றது.

 
Anlam tercümesi Ayet: (150) Sure: Sûratu'l-En'âm
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mealler fihristi

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Kapat