Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mealler fihristi


Anlam tercümesi Ayet: (60) Sure: Sûratu't-Tevbe
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِیْنِ وَالْعٰمِلِیْنَ عَلَیْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِی الرِّقَابِ وَالْغٰرِمِیْنَ وَفِیْ سَبِیْلِ اللّٰهِ وَابْنِ السَّبِیْلِ ؕ— فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
9.60. நிச்சயமாக கடமையான தர்மங்கள், தொழில் அல்லது உத்தியோகம் இருந்தும் போதுமான வருமானமின்றி கவனிப்பாரற்றுள்ள ஏழைகளுக்கும், எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளாத அவர்களது நிலமை அல்லது பேச்சின் மூலம் தெளிவாக வசதியற்றவர்கள் என மக்களால் அறியப்பட்ட வறியவர்களுக்கும், ஆட்சியாளர் ஸகாத்தை சேகரிப்பதற்காக நியமித்தவர்களுக்கும், ஸகாத்தை வழங்குவதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிராகரிப்பாளர்களுக்கும் அல்லது ஈமான் உறுதியாவதற்காக பலவீனமான நம்பிக்கையாளர்களுக்கும் அல்லது ஸகாத்தை பெறுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கிழைப்பதை தவிர்ந்து கொள்வோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வீண்விரயத்திற்காகவோ பாவம் செய்வதற்கோ அல்லாமல் கடன் பெற்ற ஆனால் கடனை அடைக்க முடியாத கடனாளிக்கும் அல்லாஹ்வின் பாதையில் போராடுவோரை தயார்படுத்துவதற்காகவும் பிரயாணச் செலவின்றி தவிக்கும் பிரயாணிக்கும் உரியனவாகும். ஸகாத்தை இவர்களுக்கு மாத்திரம் செலவிடுவதே இறைகட்டளையாகும். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை நன்கறிந்தவனும் அவனது திட்டமிடலிலும் சட்டதிட்டங்களிலும் ஞானமுடையவனுமாவான்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• الأموال والأولاد قد تكون سببًا للعذاب في الدنيا، وقد تكون سببًا للعذاب في الآخرة، فليتعامل العبد معهما بما يرضي مولاه، فتتحقق بهما النجاة.
1. சில வேளை செல்வங்களும் பிள்ளைகளும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனைக்குக் காரணமாக அமையலாம். எனவே அடியான் தன் அதிபதியைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அவற்றைக் கையாள வேண்டும். அப்போதுதான் அவற்றினால் வெற்றி கிடைக்கும்.

• توزيع الزكاة موكول لاجتهاد ولاة الأمور يضعونها على حسب حاجة الأصناف وسعة الأموال.
2. ஸகாத்தைப் பங்கிடுவது ஆட்சிப் பொறுப்பாளர்களின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது. குர்ஆனில் கூறப்பட்ட எட்டு பிரிவினரின் தேவை, சேகரிக்கப்பட்ட ஸகாத் பொருட்களின் அளவு என்பவற்றுக்கேற்ப அவர்கள் அவற்றைப் பங்கிடுவார்கள்.

• إيذاء الرسول صلى الله عليه وسلم فيما يتعلق برسالته كفر، يترتب عليه العقاب الشديد.
3. நபியவர்களின் தூதுப் பணி சம்பந்தப்படும் விடயத்தில் அவர்களுக்கு தொல்லை கொடுப்பது இறைநிராகரிப்பாகும். அதற்கு கடுமையான தண்டனை உண்டு.

• ينبغي للعبد أن يكون أُذن خير لا أُذن شر، يستمع ما فيه الصلاح والخير، ويُعرض ترفُّعًا وإباءً عن سماع الشر والفساد.
4. அடியான் தீயவற்றைக் கேட்காது நல்லவற்றையே கேட்கவேண்டும். நலவு உள்ளவற்றையே செவிமடுக்க வேண்டும். தீயவற்றைக் கேட்காமல் புறக்கணித்து விடவேண்டும்.

 
Anlam tercümesi Ayet: (60) Sure: Sûratu't-Tevbe
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mealler fihristi

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Kapat