Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: يۈسۈپ   ئايەت:
فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِیْرُ اَلْقٰىهُ عَلٰی وَجْهِهٖ فَارْتَدَّ بَصِیْرًا ۚؕ— قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ ۚ— اِنِّیْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
12.96. யஃகூபுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலைக் கூறுபவர் வந்த போது யூஸுஃபின் சட்டையை யஃகூபின் முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வையுடையவராகி விட்டார். அப்போது அவர் தன் பிள்ளைகளிடம் கூறினார்: “நான் அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் குறித்து நீங்கள் அறியாததையெல்லாம் நன்கு அறிவேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”
ئەرەپچە تەپسىرلەر:
قَالُوْا یٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰطِـِٕیْنَ ۟
12.97. அவருடைய மகன்கள் அவரிடம் யூஸுஃபின் விஷயத்திலும் அவருடைய சகோதரரின் விஷயத்திலும் தாங்கள் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! எங்களின் முந்தைய பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக நாங்கள் யூஸுஃப் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரரின் விஷயத்தில் தவறிழைத்த குற்றவாளிகளாக இருந்தோம்.”
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّیْ ؕ— اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
12.98. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களுடன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
ئەرەپچە تەپسىرلەر:
فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ
12.99. யஃகூபும் அவருடைய குடும்பத்தினரும் தங்களின் நாட்டிலிருந்து எகிப்திலிருக்கும் யூஸுஃபை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் அவரிடம் நுழைந்த போது தன் தாய் தந்தையரை தன் பக்கம் அணைத்துக் கொண்டார். தன்னுடைய சகோதரர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கூறினார்: “அல்லாஹ் நாட்டத்தால் எகிப்தில் பாதுகாப்புப் பெற்றவர்களாக நுழையுங்கள். இங்கு உங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
ئەرەپچە تەپسىرلەر:
وَرَفَعَ اَبَوَیْهِ عَلَی الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا ۚ— وَقَالَ یٰۤاَبَتِ هٰذَا تَاْوِیْلُ رُءْیَایَ مِنْ قَبْلُ ؗ— قَدْ جَعَلَهَا رَبِّیْ حَقًّا ؕ— وَقَدْ اَحْسَنَ بِیْۤ اِذْ اَخْرَجَنِیْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّیْطٰنُ بَیْنِیْ وَبَیْنَ اِخْوَتِیْ ؕ— اِنَّ رَبِّیْ لَطِیْفٌ لِّمَا یَشَآءُ ؕ— اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
12.100. தன் பெற்றோரை தான் அமரும் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டார். அவருடைய பெற்றோரும் பதினொரு சகோதரர்களும் அவருக்கு சிரம்பணிந்து வாழ்த்துக் கூறினார்கள். அது வணக்கத்திற்கான ஸுஜூத் அல்ல கௌரவிப்புக்கான ஸுஜூத். கனவில் நிகழ்ந்தது போன்று அல்லாஹ்வின் கட்டளை நிகழும் பொருட்டே இவ்வாறு நடந்தது. இதனால்தான் யூஸுஃப் தன் தந்தையிடம் கூறினார்: “நீங்கள் எனக்கு சிரம்பணிந்து தெரிவிக்கும் இந்த வாழ்த்துதான் நான் இதற்கு முன்னால் கண்டு உங்களிடம் கூறிய கனவின் விளக்கம். அதனை நிகழச் செய்து என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். என் இறைவன் என்னை சிறையிலிருந்து வெளியேற்றிய போதும் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் குறுக்கிட்ட பின்னரும் உங்களைக் கிராமத்திலிருந்து இங்கு கொண்டுவந்தன் மூலம் அல்லாஹ் என்மீது உபகாரம் புரிந்துள்ளான். என் இறைவன் தான் நாடுவதை நிகழ்த்துவதில் நுட்பமானவன். அவன் தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்; தன் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.
ئەرەپچە تەپسىرلەر:
رَبِّ قَدْ اٰتَیْتَنِیْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِیْ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ۚ— فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۫— اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— تَوَفَّنِیْ مُسْلِمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟
12.101. பின்னர் யூஸுஃப் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நீ எனக்கு எகிப்தின் அரசாட்சியை வழங்கினாய். கனவுகளின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தாய். வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! இவ்வுலகிலும் மறுவுலகிலும் என்னுடைய எல்லா விவகாரங்களுக்கும் நீயே பொறுப்பாளியாவாய். எனது தவணை நிறைவடைந்து என் உயிரைக் கைப்பற்றும் போது என்னை முஸ்லிமாகவே உனக்குக் கட்டுப்பட்டவனாகவே கைப்பற்றுவாயாக. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் இருக்கும் எனது மூதாதையர்களிலும் ஏனையோர்களிலும் உள்ள நல்லோர்களான தூதர்களுடன் என்னைச் சேர்த்தருள்வாயாக.”
ئەرەپچە تەپسىرلەر:
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ۚ— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ یَمْكُرُوْنَ ۟
12.102. -தூதரே!- மேற்கூறப்பட்ட யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாற்றை நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கின்றோம். அது குறித்து நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். ஏனெனில் யூஸுஃபின் சகோதரர்கள் அவரைக் கிணற்றில் போட நாடிய போதும் அவர்கள் தந்திரத்தைத் திட்டமிட்ட போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. ஆயினும் நாம் அதனை உமக்கு வஹி மூலம் அறிவித்தோம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِیْنَ ۟
12.103. -தூதரே!- நீர் உம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தாலும் மக்களில் பெரும்பாலானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அதற்காக நீர் வருத்தப்படாதீர்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• بر الوالدين وتبجيلهما وتكريمهما واجب، ومن ذلك المسارعة بالبشارة لهما فيما يدخل السرور عليهما.
1. தாய் தந்தையருக்கு உபகாரம் செய்வதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் கட்டாயமாகும். அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவல்களை விரைந்து சென்று நன்மாராயம் கூறுவதும் அதனைச் சார்ந்ததே.

• التحذير من نزغ الشيطان، ومن الذي يسعى بالوقيعة بين الأحباب؛ ليفرق بينهم.
2. ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நண்பர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த அவர்களுக்கிடையில் புறம் பேசித் திரிவோரிலிருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

• مهما ارتفع العبد في دينه أو دنياه فإنَّ ذلك كله مرجعه إلى تفضّل الله تعالى وإنعامه عليه.
3. மார்க்க விடயம் அல்லது உலக விடயத்தில் ஒரு அடியான் எவ்வளவு உயர்ந்தாலும் அது அவன் மீது அல்லாஹ் புரிந்த அருளும் பேருபகாரமும் ஆகும்.

• سؤال الله حسن الخاتمة والسلامة والفوز يوم القيامة والالتحاق برفقة الصالحين في الجنان.
4. நல்ல முடிவையும் பாதுகாப்பையும் மறுமையில் வெற்றியையும் சுவனங்களில் நல்லோர்களின் தோழமையில் இணைவதையும் அல்லாஹ்விடம் கேட்டல்.

• من فضل الله تعالى أنه يُطْلع أنبياءه على بعض من أمور الغيب لغايات وحكم.
1. சில நோக்கங்கள், இலக்குகளுக்காக அல்லாஹ் தனது தூதர்களுக்கு மறைவான சில விடயங்களை அறிவிக்கிறான். இது அல்லாஹ்வின் அருளில் உள்ளதாகும்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: يۈسۈپ
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش