Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: نەھل   ئايەت:

அந்நஹ்ல்

سۈرىنىڭ مەقسەتلىرىدىن:
التذكير بالنعم الدالة على المنعم سبحانه وتعالى.
அருள் புரிந்த அல்லாஹ்வைச் சுட்டிக்காட்டும் அருட்கொடைகளை ஞாபகமூட்டல்

اَتٰۤی اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
16.1. அல்லாஹ் தீர்மானித்துள்ள உங்கள் தண்டனை நெருங்கி விட்டது. -நிராகரிப்பாளர்களே!- வேதனைக்குரிய நேரம் வரமுன் அதனை விரைவுபடுத்துமாறு வேண்டாதீர்கள். இணைவைப்பாளர்கள் ஆக்கும் இணையாளர்களை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
ئەرەپچە تەپسىرلەر:
یُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اَنْ اَنْذِرُوْۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوْنِ ۟
16.2. -“தூதர்களே!- அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்யுங்கள். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை" என வஹியைக் கொடுத்து வானவர்களை தான் நாடிய தூதர்கள் மீது அல்லாஹ் இறக்குகிறான். எனவே -மனிதர்களே!- என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— تَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
16.3. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையாக முன்மாதிரியின்றி படைத்துள்ளான். அவையிரண்டையும் அவன் வீணாகப் படைக்கவில்லை. மாறாக தன்னுடைய வல்லமையை, மகத்துவத்தை அறிவிப்பதற்காக அவையிரண்டையும் படைத்துள்ளான். அவனுடன் அவர்கள் அவன் அல்லாதவைகளை இணைவைப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.
ئەرەپچە تەپسىرلەر:
خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟
16.4. அவன் மனிதனை அற்ப விந்துத் துளியிலிருந்து படைத்தான். ஒவ்வொரு கட்டமாக அது வளர்ந்தது. அப்போது மனிதன் சத்தியத்தை அழிப்பதற்காக அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் புரிபவனாக இருக்கின்றான். தான் தர்க்கம் புரிபவற்றில் தெளிவானவனாகவும் உள்ளான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَالْاَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِیْهَا دِفْءٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟
16.5. -மக்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை அவன் உங்களின் நலன்களுக்காகவே படைத்துள்ளான். அவற்றின் தோல்கள் மற்றும் ரோமங்களின் மூலம் சூட்டைப் பெறுவதும் அந்த நலன்களில் ஒன்றே. அவற்றின் தோல்களிலும், பாலிலும், முதுகுகளிலும் உங்களுக்கு இன்னபிற நலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்தே நீங்கள் உண்ணுகிறீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَكُمْ فِیْهَا جَمَالٌ حِیْنَ تُرِیْحُوْنَ وَحِیْنَ تَسْرَحُوْنَ ۪۟
16.6. மாலையில் அவை வரும் போதும் காலையில் மேய்ச்சலுக்காக நீங்கள் அவற்றை ஓட்டிச் செல்லும் போதும் உங்களுக்கு அவற்றில் அலங்காரம் இருக்கின்றது.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• عناية الله ورعايته بصَوْن النبي صلى الله عليه وسلم وحمايته من أذى المشركين.
1. அல்லாஹ்வின் அருள் மற்றும் அக்கறையின் வெளிப்பாடு, அவன் தன் தூதரை இணைவைப்பாளர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாத்துள்ளான்.

• التسبيح والتحميد والصلاة علاج الهموم والأحزان، وطريق الخروج من الأزمات والمآزق والكروب.
2. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ்வின் தூய்மையை பறைசாற்றுவது), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வைப் புகழ்வது) என்று கூறுவது, தொழுகையைக் கடைப்பிடிப்பது கவலைகள் மற்றும் துக்கத்திற்கான சிகிச்சையாக உள்ளது. அவை நெருக்கடி, துன்பம் மற்றும் கஷ்டங்களிலிருந்து வெளியேற்றும் பாதைகளாகும்.

• المسلم مطالب على سبيل الفرضية بالعبادة التي هي الصلاة على الدوام حتى يأتيه الموت، ما لم يغلب الغشيان أو فقد الذاكرة على عقله.
3. ஒரு முஸ்லிம் மரணிக்கும் வரை தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு, அல்லாஹ்வை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளான். ஆனால் மயக்கம் அல்லது சுயநினைவை இழக்கும் சமயத்தில் அவனுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• سمى الله الوحي روحًا؛ لأنه تحيا به النفوس.
4. வஹியை அல்லாஹ் உயிர் எனக் குறிப்பிட்டுள்ளான். ஏனெனில் அதன் மூலமே ஆன்மாக்கள் உயிர் வாழ்கின்றன.

• مَلَّكَنا الله تعالى الأنعام والدواب وذَلَّلها لنا، وأباح لنا تسخيرها والانتفاع بها؛ رحمة منه تعالى بنا.
5. அல்லாஹ் எம்மீது கொண்ட கருணையினால் கால்நடைகளை எமக்கு உரிமையாக்கி எமக்கு அவற்றைக் கட்டுப்படச் செய்துள்ளான். அவற்றை வசப்படுத்தி பயன்பெற அனுமதித்துள்ளான்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: نەھل
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش