Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: بەقەرە   ئايەت:
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ— فَمَنْ فَرَضَ فِیْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِی الْحَجِّ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ یَّعْلَمْهُ اللّٰهُ ؔؕ— وَتَزَوَّدُوْا فَاِنَّ خَیْرَ الزَّادِ التَّقْوٰی ؗ— وَاتَّقُوْنِ یٰۤاُولِی الْاَلْبَابِ ۟
2.197. ஹஜ்ஜுடைய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அது ஷவ்வால் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ் பத்தில் நிறைவடைகிறது. யார் இந்த மாதங்களில் ஹஜ் செய்வதை தன்மீது கடமையாக்கி, நிய்யத் வைத்து அதில் நுழைந்துவிட்டாரோ அவர்மீது உடலுறவு கொள்வதோ அதற்கு முன்னோட்டமான செயல்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோன்று அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் பாவமான காரியங்களில் ஈடுபடுவதும் தடையாகும். ஏனெனில் இது புனிதமான காலமும் புனிதமான இடமுமாகும். கோபத்தையும் வெறுப்பையும் உண்டுபண்ணும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் செய்யக்கூடிய நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். ஹஜ்ஜின் காலங்களில் உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். உங்கள் அனைத்துக் காரியங்களிலும் நீங்கள் செய்யும் ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது "தக்வா" என்னும் இறையச்சம்தான். அறிவுடையோரே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னையே அஞ்சிக் கொள்ளுங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ ؕ— فَاِذَاۤ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْكُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۪— وَاذْكُرُوْهُ كَمَا هَدٰىكُمْ ۚ— وَاِنْ كُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآلِّیْنَ ۟
2.198. ஹஜ் செய்யும்போது வியாபாரத்தின் மூலமோ இன்னபிற விஷயங்களின் மூலமோ நீங்கள் ஹலாலான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அரஃபாவில் ஒன்றுகூடிய பிறகு பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவை நோக்கி நீங்கள் சென்றால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். முஸ்தலிஃபாவிலுள்ள மஷ்அருல் ஹராமிற்கு பிரதான அடையாளங்கள், ஹஜ் வணக்கவழிபாடுகள் என்பவற்றுக்கு அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னர் நீங்கள் அவனுடைய மார்க்கத்தை அறியாது இருந்தீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
ثُمَّ اَفِیْضُوْا مِنْ حَیْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
2.199. பின்னர் நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியோர் செய்வதைப்போல அரஃபாவிலிருந்து செல்லுங்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள் செய்ததைப்போன்று அங்கு தரிப்பதை விட்டு விடவேண்டாம். அல்லாஹ் விதித்ததை நிறைவேற்றியபோது உங்களிடம் நிகழ்ந்த குறைகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
ئەرەپچە تەپسىرلەر:
فَاِذَا قَضَیْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ؕ— فَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۟
2.200. ஹஜ்ஜின் கிரியைகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் முன்னோர்களைக் கொண்டு நீங்கள் பெருமை பேசுவதுபோல அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வைப் புகழுங்கள். நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அருட்கொடையும் அவன் அளித்ததுதான். மக்கள் பல்வேறு வகையினராக இருக்கின்றனர். அவர்களில் ஒரு வகையினர் இந்த உலகத்தின்மீது மட்டுமே நம்பிக்கைகொண்ட இணைவைக்கும் நிராகரிப்பாளர்கள். அவர்கள் ஆரோக்கியம், சொத்து, பிள்ளைப்பாக்கியம் ஆகிய இவ்வுலகின் இன்பங்களையும் அலங்காரத்தையுமே தங்கள் இறைவனிடம் கேட்கிறார்கள். அவர்கள் மறுமைநாளைப் புறக்கணித்து இவ்வுலகின்மீது மோகம் கொண்டதனால் மறுமையில் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியவற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.
ئەرەپچە تەپسىرلەر:
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۟
2.201. மனிதர்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் இவ்வுலக இன்பத்தையும் அதில் நற்செயலையும் அதேபோன்று மறுமையில் நரக வேதனையிலிருந்து பாதுகாக்கப்பட்டு, சுவனத்தைப் பெற்று அடையும் வெற்றியையும் கேட்கிறார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
اُولٰٓىِٕكَ لَهُمْ نَصِیْبٌ مِّمَّا كَسَبُوْا ؕ— وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟
2.202. இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை வேண்டும் இவர்களுக்கு இவ்வுலகில் சம்பாதித்த நற்செயல்களுக்கான பெரும் கூலி உண்டு. செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதில் அவன் விரைவானவன்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• يجب على المؤمن التزود في سفر الدنيا وسفر الآخرة، ولذلك ذكر الله أن خير الزاد هو التقوى.
1.ஒரு முஃமின் உலகப்பயணத்திலும் மறுமைக்கான பயணத்திலும் தயாரிப்புடன் செல்வது கட்டாயமாகும். எனவே தான் தயாரிப்பில் சிறந்தது இறையச்சமே எனக் குறிப்பிடுகிறான்.

• مشروعية الإكثار من ذكر الله تعالى عند إتمام نسك الحج.
2. ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவுபடுத்தும் தருணத்தில் அல்லாஹ்வை மேலதிகமாக நினைவுகூர வேண்டும்.

• اختلاف مقاصد الناس؛ فمنهم من جعل همّه الدنيا، فلا يسأل ربه غيرها، ومنهم من يسأله خير الدنيا والآخرة، وهذا هو الموفَّق.
3. மனிதர்களது நோக்கங்கள் வித்தியாசமானவை. அவர்களில் சிலர் உலகைத் தனது இலக்காகக் கொண்டு தனது இறைவனிடம் அதனை மாத்திரம் கேட்கின்றனர். அவர்களில் இம்மை மறுமையின் நலவுகளைக் கேட்போரும் உள்ளனர். அவர்தான் பாக்கியம் பெற்றவன்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: بەقەرە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش