ولما تركوا دين الله اتبعوا بدلًا عنه ما تَتَقَوَّلُهُ الشياطين كذبًا على مُلك نبي الله سليمان عليه السلام، حيث زعمت أنه ثَبّت ملكه بالسحر، وما كفر سليمان بتعاطي السحر - كما زعمت اليهود - ولكن الشياطين كفروا حيث كانوا يعلِّمون الناس السحر، ويعلمونهم السحر الذي أُنزل على الملَكين: هاروت وماروت، بمدينة بابل بالعراق، امتحانًا وابتلاء للناس، وما كان هذان الملكان يُعَلِّمان أيّ أحد السحر حتى يحذّراه ويبيِّنا له بقولهما: إنما نحن ابتلاء وامتحان للناس فلا تكفر بتعلمك السحر، فمن لم يقبل نصحهما تعلَّم منهما السحر، ومنه نوع يفرق بين الرجل وزوجته، بزرع البغضاء بينهما، وما يضر أولئك السحرة أيَّ أحد إلا بإذن الله ومشيئته، ويتعلمون ما يضرهم ولا ينفعهم، ولقد علم أولئك اليهود أن من استبدل السحر بكتاب الله ما له في الآخرة من حظ ولا نصيب، ولبئس ما باعوا به أنفسهم حيث استبدلوا السحر بوحي الله وشرعه، ولو كانوا يعلمون ما ينفعهم ما أقدموا على هذا العمل المَشِين والضلال المبين.
2.102. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டுவிட்ட அவர்கள் அதற்குப் பதிலாக, இறைத்தூதர் சுலைமானுக்கு எதிராக ஷைத்தான்கள் இட்டுக்கட்டியவற்றைப் பின்பற்றினார்கள். அந்த ஷைத்தான்கள், சுலைமான் சூனியத்தின் மூலம் ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று புனைந்து கூறினார்கள். யூதர்கள் கூறுவதுபோல சூனியம் செய்து சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆனால் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். அவர்கள் சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதர்களைப் பரிசோதிக்கும் நோக்கில் ஈராக்கிலுள்ள பாபில் நகரத்தில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்ட சூனியத்தையும் ஷைத்தான்கள்தான் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த இரு வானவர்களும் யாருக்காவது சூனியத்தைக் கற்றுக்கொடுக்க நேர்ந்தால், நாங்கள் மக்களுக்கு சோதனையாகவே இருக்கின்றோம். எனவே சூனியத்தைக் கற்பதின்மூலம் நிராகரித்து விடாதீர்கள் என்று அவருக்கு எச்சரிக்கை செய்துவிடுவார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்காதவர்கள் அவர்களிடமிருந்து சூனியத்தைக் கற்றுக்கொண்டார்கள். கணவனுக்கும் மனைவிக்குமிடையே வெறுப்பை ஏற்படுத்தி அவர்களைப் பிளவுபடுத்தும் சூனியத்தின் ஒரு வகையே. அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த சூனியக்காரர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பயனளிக்காத, தீங்கிழைக்கும் விஷயத்தையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் வேதத்திற்குப் பகரமாக சூனியத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை யூதர்கள் நன்கறிந்திருந்தார்கள். அல்லாஹ்வின் வஹிக்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட சூனியம் எவ்வளவு மோசமானது! தங்களுக்குப் பயனளிக்கக்கூடியதை இவர்கள் அறிந்திருந்தால் இழிவான இந்த வழிகெட்ட செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.
التفاسير:
|
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• سوء أدب اليهود مع أنبياء الله حيث نسبوا إلى سليمان عليه السلام تعاطي السحر، فبرّأه الله منه، وأَكْذَبَهم في زعمهم.
1. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். சுலைமானோடு சூனியத்தை இணைத்தார்கள். அல்லாஹ் அதிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினான்; அவர்களின் வாதத்தைப் பொய்யாக்கினான்.
• أن السحر له حقيقة وتأثير في العقول والأبدان، والساحر كافر، وحكمه القتل.
2. சூனியத்தின் மூலம் மனதிலும் உடலிலும் தாக்கம் ஏற்படும். சூனியம் செய்பவன் நிராகரிப்பாளன். அவனைக் கொல்வதே மார்க்கத்தீர்ப்பாகும்.
• لا يقع في ملك الله تعالى شيء من الخير والشر إلا بإذنه وعلمه تعالى.
3. அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் நன்மையோ, தீமையோ அவனுடைய அனுமதியின்றி நடைபெறாது.
• سد الذرائع من مقاصد الشريعة، فكل قول أو فعل يوهم أمورًا فاسدة يجب تجنبه والبعد عنه.
4. தவறான எண்ணத்தை உண்டாக்கக்கூடிய சொல்லோ செயலோ முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும். சந்தேகம் ஏற்படுத்தும் வழிகளை அடைப்பதும் ஷரீஅத்தின் நோக்கங்களில் உள்ளதாகும்.
• أن الفضل بيد الله تعالى وهو الذي يختص به من يشاء برحمته وحكمته.
5. அருள்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. தனது கருணை மற்றும் ஞானத்திற்கேற்ப தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான்.