Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: ئەنكەبۇت   ئايەت:

அல்அன்கபூத்

سۈرىنىڭ مەقسەتلىرىدىن:
الأمر بالصبر والثبات عند الابتلاء والفتن، وبيان حسن عاقبته.
சோதனைகள் குழப்பங்களின் போது பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்குமாறு கட்டளையிடலும், அதன் நல்ல முடிவைத் தெளிவுபடுத்தலும்

الٓمّٓ ۟ۚ
29.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ئەرەپچە تەپسىرلەر:
اَحَسِبَ النَّاسُ اَنْ یُّتْرَكُوْۤا اَنْ یَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا یُفْتَنُوْنَ ۟
29.2. “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்” என்று அவர்கள் கூறியதனால் மட்டும் அவர்கள் கூறியதன் எதார்த்தத்தை தெளிவுபடுத்தக்கூடிய அவர்கள் உண்மையான விசுவாசிகளா என்பதைச் சோதிக்காமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ فَتَنَّا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ صَدَقُوْا وَلَیَعْلَمَنَّ الْكٰذِبِیْنَ ۟
29.3. நாம் அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களைச் சோதித்தோம். வெளியில் தெரியும் விதத்தில் அல்லாஹ் அறிந்தே தீருவான். தங்களின் நம்பிக்கையில் உண்மையாளர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.
ئەرەپچە تەپسىرلەر:
اَمْ حَسِبَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ اَنْ یَّسْبِقُوْنَا ؕ— سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟
29.4. மாறாக இணைவைப்பு, அது போன்ற பாவங்களில் ஈடுபடுபவர்கள் நம் வேதனையைவிட்டும் தப்பிவிடலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மோசமானது. அல்லாஹ்விடமிருந்து அவர்கள் தப்ப முடியாது. அவர்கள் நிராகரித்த நிலையிலேயே மரணமடைந்தால் அவனது வேதனையிலிருந்து தப்பிவிட முடியாது.
ئەرەپچە تەپسىرلەر:
مَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ؕ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
29.5. கூலி பெறுவதற்காக மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் அறிந்துகொள்ளட்டும், அதற்கு அல்லாஹ் நிர்ணயித்த தவணை விரைவில் வந்துவிடும். அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَمَنْ جٰهَدَ فَاِنَّمَا یُجَاهِدُ لِنَفْسِهٖ ؕ— اِنَّ اللّٰهَ لَغَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
29.6. யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களிலிருந்து விலகுவதற்கும் முயற்சி செய்கிறாரோ, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறாரோ அவர் தமக்காகவே முயற்சி செய்கிறார். நிச்சயமாக அதன் பலன் அவருக்கே. படைப்புகள் அனைத்தையும் விட்டு அல்லாஹ் தேவையற்றவன். அவர்களின் வணக்கத்தினால் அவனுக்கு எதுவும் கூடுவதுமில்லை. அவர்களின் பாவத்தினால் எதுவும் குறைந்து விடுவதுமில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• النهي عن إعانة أهل الضلال.
1. வழிகேடர்களுக்கு உதவுவதைத் தடைசெய்தல்

• الأمر بالتمسك بتوحيد الله والبعد عن الشرك به.
2. ஓரிறைக் கொள்கையை உறுதியாக பற்றிக் கொண்டு இணைவைப்பை விட்டும் விலகியிருக்குமாறு ஏவுதல்.

• ابتلاء المؤمنين واختبارهم سُنَّة إلهية.
3. நம்பிக்கையாளர்களை சோதிப்பது இறைவனின் வழிமுறையாகும்.

• غنى الله عن طاعة عبيده.
4. அடியார்களின் அடிபணிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: ئەنكەبۇت
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش